திருமணமாகாதவர்களுக்குஅமாவாசை பரிகாரமுறை…

திருமணம் ஆகாத ஆண்களுக்கு :

அமாவாசையன்று(அல்லது மாதம் தோறும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்) இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் சிறப்பு, திருமணமாகாத ஆண்கள் அமாவாசையன்று காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் அருகில் உள்ள சிவாலயத்திற்க்கு சென்று அங்கு உள்ள நாகலிங்கத்தின் மேல் சந்தனம் பூசி, பூமாலை அணிவித்து நாகலிங்கத்திற்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி பூஜை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் . அமாவாசையன்று இந்த வழிபாட்டை மேற்கொண்டால் மிகவும் சிறப்பு.

திருமணமாகாத பெண்களுக்கு:

பெண்கள் வெள்ளிக்கிழமை ராகுகால நேரமான 10.30 மணியில் இருந்து 12 மணிவரை அருகில் உள்ள சிவாலயத்தில் உள்ள வில்வமரத்தடியில் சுத்தம் செய்து அந்த இடத்தில் மஞ்சள் கலந்த நீரை தெளித்து எட்டுவகையான கோலம் இட்டு, கோலத்தின்மேல் எட்டு நெய்விளக்கேற்றி, மரத்திற்கு பூமாலை சாற்றி பூஜை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை. நாளை அமாவாசை அன்று செய்தால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அல்லது மாதம்தோறும் வரும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

– மணிகண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *