திமுக ஆட்சி வருவதற்கு முன் தனது தேர்தல் அறிக்கையை புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு உருவாக்கி வேலைவாய்ப்பு இல்லா மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவேன் என்று வாக்குறுதியை மு க ஸ்டாலின் வழங்கினார் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் கானல் நீராக கடந்த நான்கு வருடங்களாக சென்று விட்டது வரும் ஆனால் வராது என்ற நிலை திமுக ஆட்சி இளைஞர் பட்டாளத்தை ஏமாற்றி வருகின்றது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவேன் என்று கூறிய ஸ்டாலின் கடந்த நான்கு வருடங்களில் ஒரு துறையிலும் கூட வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளார்.
தற்போது திமுக ஆட்சியில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகின்றோம் என்று மாவட்ட நிர்வாகமும் ஆட்சியாளர்களும் சேர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் தொழில் நிறுவனங்களைக் கொண்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றோம் விளம்பரப்படுத்தி படித்த இளைஞர்களை வேலைவாய்ப்பு தருகின்றோம் என்று வாக்குறுதி கொடுத்து விளம்பரப்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு உகந்தது போன்று கடை நிலை பணிகளை படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் தொடர்பு இல்லாத பணிகள் தேர்வு செய்து சம்பிரதாயத்திற்காக மட்டுமே குறுகிய காலத்துக்கு வேலைவாய்ப்பு வழங்கி விளம்பர மாடல் வேலைவாய்ப்பு நடத்துகின்ற மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கடமைக்காகவும் கண்துடைப்புக்காகவும் நடத்தப்பட்டு வருகின்றது கடந்த நான்கு வருடங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறையின் மூலமாக எண்ணற்ற வேலை முகாம்கள் நடத்தப்பட்டது அமைச்சர்கள் ஆட்சியாளர்கள் பணி ஆணையை வழங்கினார்கள் எவ்வளவு பேருக்கு வழங்கினோம் என்பதை விளம்பரத்திற்காக செய்தியாக வெளியிடுகின்றனர் தற்போது இவர்கள் பணி ஆணை வழங்கியதற்கும் தற்போது பணி புரிகின்றார்களா எவ்வளவு பேர் பணிபுரிகின்றனர் விவரத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கியது கிடையாது.
கண் துடைப்புக்காக மட்டுமே நடைபெறுகிறது படித்த இளைஞர்கள் பெற்ற பயன்கள் புள்ளி விவரங்கள் ஆட்சியாளர்கள் வழங்குவது கிடையாது பெரும்பாலும் தனியார் துறையில் விற்பனையாளர்களுக்காக வேலைக்கு மட்டுமே கொத்தடிமைகளாக எடுத்துக் கொள்வது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி தனியார் துறைகள் பயன்படுத்தி கொள்கின்றன ஆட்சியாளர்களும் மாவட்ட நிர்வாகமும் நிர்பந்தத்தால் வேலை வாய்ப்பு முகாம்கள் தனியார் துறையில் சார்பாக நடத்தப்படுகின்றது தனியார் துறையோ சம்பிரதாய நடைமுறைக்காக வேலை வழங்குவது போல் ஆணை வழங்கிவிட்டு பல்வேறு காரணங்களுக்காக அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்
கடந்த நான்கு வருடங்களாக வேலைவாய்ப்பு துறையும் தனியார் துறையும் இணைந்து நடத்துகின்ற வேலை வாய்ப்பு முகாம்கள் இளைய சமுதாயத்தை ஏமாற்றுவதற்காகவே நடத்தப்படுகின்ற நாடகங்கள் என்று படித்தவர்கள் உணர்ந்து இந்த முகாம்களை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டனர் தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களில் தனியார் துறை சார்பாக விடிய ஆட்சியில் இரண்டு லட்சம் பேர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து இன்று வரை பணி வழங்கப்படவில்லை 5 லட்சம் ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் படிப்பு முடித்து காத்துக்கொண்டு இருக்கின்றனர் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது இதேபோன்று ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இலட்சக்கணக்கானோர் எவ்வித நேர்காணல் கிடைக்கப் பெறவில்லை வேலைவாய்ப்பு முகாம்களில் முந்தைய ஆட்சி காலங்களில் பதிவு செய்வோர் புதுப்பித்தோர் அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முகாமிட்டு ஆர்வம் கொண்டு பதிவு செய்து வந்தனர் இன்றோ 38 மாவட்டங்களில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பதிவு செய்வதும் புதுப்பித்தலும் எண்ணிக்கை குறைந்துவிட்டது வேலைவாய்ப்பு முகாம்களில் வேலைவாய்ப்பு நேர்காணல் அழைக்கப்படுவதில்லை இதனால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் முடங்கிப் போய் கிடக்கின்றது வேலைவாய்ப்பு அலுவலகங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்த பெருமை திமுக ஆட்சியை சேரும்.
கே.ரவிச்சந்திரன்