காஞ்சிபுரம்-
சட்டவிரோதமாக நடக்கும் சீட்டாட்ட கிளப்பு ?
காஞ்சிபுரம் மாவட்டம்; காஞ்சி பகுதியில் சட்டவிரோதமாக இரவு, பகலாக சூதாட்ட கிளப்கள் படுஜோராக நடக்கிறது
காஞ்சிபுரத்தில் அதிகளவில் பல மாதங்களாக யாரும் தெரியாமலும் அனுமதியின்றி நடைப்பெறு வரும் சீட்டாட்ட கிளப் மக்கள் லாட்டரியில் இருந்து விடுபட்ட தொழிலாளர்கள் சிலர், வேலைக்குச்செல்லாமல் சீட்டாட்டத்தில் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். 10000 ரூபாய் முதல் 50000ரூபாய் வரை பந்தயம் வைத்து சீட்டாட்டத்தை துவங்குகின்றனர். சில மாதங்களிலே பல லட்சங்களை இழக்கின்றனர். கண்டிப்பாக விட்டதை பிடிப்போம்’ என இவர்கள் சீட்டாடி மேன்மேலும் கடன் சுமையால் அவதிப்படுகின்றனர் சட்டவிரோதமாக நடந்து வரும் சூதாட்ட கிளப் குறிப்பாக காஞ்சிபுரத்தில் ஓர் முக்கிய பகுதியில் பல நிறுவனங்களை சார்ந்த தொழிலதிபர்களும் இளைஞர்களை சூதாட்டத்திற்கு அடிமையாகி
இந்த சூதாட்ட கிளப்களால் இளைஞர்கள் பொருளையும் பணத்தையும் இழந்த நிலையிலும் தள்ளப்படுகின்றனர்.
இந்த வகை கிளப்களில் ரம்மி ஆட்டம் விளையாட்டினால் சூதாட்டத்திற்கு அடிமையாகி வரும் பலர் தங்கள் பணங்களை இழந்து வருகின்றனர் தினமும் லட்சக் கணக்கான ரூபாய் புழங்கி வரும் நிலையில் விடுமுறை நாட்களில் இத்தொகை பல லட்சங்களுக்கு மேல் சென்று விடுகிறது. சுதந்திரமாக நடக்கும் இந்த சூதாட்டக் கிளப்புகளில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களிலிருந்தும் பலர் தினமும் வந்து செல்கின்றனர்
ஒவ்வொரு ‘கிளப்களின் பின்னணியில் அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் பக்க பலமாக கண்டிப்பாக இருப்பார்கள்
இது போன்ற சட்டவிரோத சூதாட்ட கிளப்புகள் இளைஞர்கள் இடையே சூதாட்ட கலாசாரத்தை பரப்புவதால் இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்களையும் தொழிலதிபவர்களையும் குறி வைத்து தங்கள் வீட்டையே கிளப்பாக செட்டுகள் அமைத்து சட்ட விரோத சூதாட்ட ‘கிளப் ஆங்காங்கே இயங்குகிறது. குறிப்பாக வேலிங்கப்பட்டறை ஓரிக்கை ஆகிய பகுதிகளில் இரவு பகலாக பலர் பணத்தை வைத்து சூதாட்டம் நடத்தினாலும் அனைத்து பணத்தை இழந்த அனைவரும் தங்கள் ஒரு குடும்பம் உள்ளது என்று நினைத்தால் சூதாட்ட கிளப்பில் தங்களை அடிமையாக்கி கொள்ளாமல் இருப்பார்கள்
சூதாட்ட கிளப் நடத்தும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
– பா.மணிகண்டன்