முதல்முறையாக நகரமன்ற தலைவர் பதவியை அலங்கரித்தபோது மாவட்டம் முழுவதும் பெருமையாக பேசப்பட்டார், முதல் முறையாக எம்எல்ஏ ஆனபோது இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டார். இரண்டாவது முறை எம்எல்ஏ ஆனார். மொத்தமும் வெட்ட வெளிச்சமானது அடுத்து எனக்குதான் சீட்டு என்று ஸ்ரீராமஜெயம் மாதிரி தினமும் நூறுமுறை சொல்லிக்கொண்டு இருக்கிறார். இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன். ஆற்காட்ல பெரிய தவிட்டு வியாபாரி லட்சுமண முதலியாரின் வாரிசுதான் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்! உள்ளூரில் பிரபலமான காந்தி அறக்கட்டளையில் கோடிகளில் பணத்தை எண்ணிப்பார்த்துவிட்டார் என்ற விஷயம் ஆற்காட்டை தாண்டி இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பேசுகிறார்கள்.
தொழில் நலிந்து போய் கடன் கொடுத்த வங்கிகள் விரட்ட, கடனை அடைக்க சில சொத்துக்களை விற்றுவிட்டார் லட்சுமண முதலியார். ஜெ.எல்.ஈஸ்வரப்பன் தனக்கு பிடித்த திமுக நிர்வாகிகளோடு மட்டும் பேசுவார் ஆற்காடு தொகுதியில எந்த வேலையானாலும் கைநீட்டி பணமாக்கிவிடுவார் சம்பாத்தியத்தை திருவண்ணாமலையில் தன் மாமனார் வகையில் பாதுகாக்கிறார் என்கிறார்கள். இவரும் ஓட்டு போட்ட மக்களுக்கு எந்த தொந்தரவும் தருவதில்லை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்தியை பின் தொடருகிறார்.
ஈஸ்வரப்பன் பெயரைச் சொல்லி ஆற்காடு நகர செயலாளர் சரவணன், துணை செயலாளர் ஏ.ஜி.ரவி, திமிரி மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் இவர்கள் ஆட்டம் ஓவர்! திமுக போர்வையில் நகராட்சி தலைவராக இருக்கும் ஸ்ரீதேவி பென்ஸ் பாண்டியன் பாமகவினரை வளர்த்துக்கொண்டிருக்கிறார் இந்தமுறை வேட்பாளரை மாத்தினாதான் ஆற்காட்டில் உதயசூரியன் உதிக்கும் என்கின்றனர். மாப்பிள்ளை சபரீசன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூட்ல மறுபடியும் சீட் வாங்கிடலாம்னு நினைக்கிறார் ஈஸ்வரப்பன், அரக்கோணம் திமுக பிரமுகர் தெய்வச்செயல் சர்ச்சையில் இவர் பெயர் தொடர்புபடுத்தி பேசப்பட்டது ஈஸ்வரப்பன் பெயர் மேலும் டேமேஜ் ஆகிவிட்டது மொத்தத்தில ஜீரோவாகிவிட்டார் ஈஸ்வரப்பன்.
திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் குப்பிடிசாந்தம் அசோக் இந்தமுறை விடறதில்ல எம்எல்ஏ சீட்டை வாங்கியே தீரணும் என்கிற முடிவில் இருக்கிறார் ஆற்காடு வீராசாமியின் தம்பி சீனுவின் மகன் அசோக் என்பது கூடுதல் தகவல்.
டாக்டர் சரவணன் இவர் மனைவி பொற்கொடி நகரமன்ற துணைத் தலைவராக இருக்கிறார். முன்னாள் எம்எல்ஏ பி.என்.சுப்பிரமணியன் மகன் ஊர்ல நல்ல பேரு தொடர்ந்து எம்எல்ஏ சீட் கேட்கிறார் இந்த முறையும் கேட்பாளர் பட்டியலில் இருக்கிறார். இவருடன் முப்பதுவெட்டி பாண்டுவும் வரிசையில் நிற்கிறார்.
மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் தொழிலதிபர் ஏ.வி.சாரதி அதிமுகவில் இருக்கும்போது எனக்கு ஆற்காடு தொகுதி சீட் கொடுங்க மீதி மூன்று (இராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம்) தொகுதிகள் செலவை நான் பார்த்துக்கறேன் என்று எடப்பாடி பழனிச்சாமியை மிரளவிட்டவர், கடந்தமுறை அரக்கோணம் எம்பி சீட் கேட்டதால, அமைச்சர் காந்தி மகனுக்கு சீட் கிடைக்கல, அதனால காந்திக்கும் ஏ.வி.சாரதிக்கும் ஏடாகூடமா முட்டிகிச்சி! ஏ.வி.சாரதி பெரிய பணமுதலை கட்சிக்கும் கட்சிக்காரர்களுக்கும் முகம் சுளிக்காமல் செலவு செய்பவர் மேலும் பக்கபலமாய் இருப்பது ஜெகத்ரட்சகன் எம்பி, பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், ஆற்காடு தொகுதியில் மட்டுமல்ல இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பேசப்படும் நபராக இருக்கிறார் ஏ.வி.சாரதி! இவர்கள்தான் அவர்கள்னு தொகுதியில சொல்றாங்க. நம்முடைய பார்வையில் டாக்டர் சரவணனும், ஏ.வி.சாரதியும் நிற்கிறார்கள்.
- இ.பட்டத்து இளவரசி