திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஊர் வெள்ளகோயில், இது நாகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ( திருச்சி — கோவை என்.எச்.) உள்ளது . அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதனின் சொந்த தொகுதியில் பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதியான பேருந்து நிழற்குடை ( என்.எச்.), கழிப்பறை வசதி , குடிதண்ணீர் கூட சரியாக இல்லை.
அதாவது ஒரு கண்ணுக்கு வெண்ணை , ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற பழமொழிக்கு ஏற்ப தேசிய நெடுஞ்சாலையில் ( நான்கு வழிச்சாலை ) அமைந்துள்ள வெள்ளகோயில் பழைய பேருந்து நிலையத்தின் தென்புறத்தில் ,, கோவை , திருப்பூர் நோக்கி மேற்கே செல்லும் பயணிகளுக்கு நிழற்குடை வசதி உள்ளது
ஆனால் வடபுறத்தில் கரூர் , திருச்சி நோக்கி கிழக்கே செல்லும் பயணிகளுக்கு மழை , வெய்யிலுக்கு ஒதுங்க கூட இடமில்லை , அதுமட்டுமல்ல ரோட்டில் நிற்க கூட முடியாது – ஆட்டோ ஒட்டுநர்கள் தொந்தரவு .
இதுமட்டுமல்ல பழைய பேருந்து நிலையத்தில் குடிநீர் குழாய் , கழிப்பறை வசதி கூட இல்லை.
அவசரத்திற்கு ஒதுங்க கூட இடமில்லை . இது மட்டுமல்லாமல் பொரும்பாலான பேருந்து நடத்துநர்கள் பழைய பேருந்து நிலையத்தில் பஸ் நிற்காது ( ஆனால் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் , ஹேட்டலில் 20 நிமிடம் நிற்கும் ) என்று கூறி பயணிகளை இறக்கிவிட மறுக்கின்றனர் ( ஒரு சிலர் தவிர ).
இது சம்பந்தமாக போக்குவரத்துக் கழகத்திற்கு ( கோவை , கரூர் , திருச்சி ) கடிதம் எழுதியும் பெரிதாக மாற்றம் இல்லை . அதேசமயம் இரவு நேரங்களில் ஓலப்பாளையம், வெள்ளகோயில் பழைய பேருந்து நிலையம் , வைரமடை , தென்னிலை … போன்ற பேருந்து நிறுத்தங்களில் பெரும்பாலான பேருந்துகள் நிற்பதில்லை.
ஒருபுறம் பேருந்துகள் நிற்பதில்லை , மற்றொருபுறம் அடிப்படை தேவைகள் கூட இல்லை , ஆனால் திரும்பிய திசையெல்லாம் மதுபானம் கிடைக்கும்.
இதோடு மட்டுமல்லாமல் கரூர் – திருப்பூர் மார்க்கமாக ஓடும் தனியார் பேருந்துகள் காலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த மூன்று வருடங்களாக ஓடுவதில்லை .
இந்த அனைத்து பிரச்சனைகளும் மாவட்ட ஆட்சியர்கள் ( கரூர் & திருப்பூர் ) கவனத்திற்கு எடுத்துச்சென்றும் பலனில்லை . மக்கள் சேவைக்காக இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை
யாரிடம் முறையிட …..
– சு.மதி