உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்த தமிழகத்தில் தற்போது கள்ளக்காதலால் தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமும் சீரழிந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கார் ஏற்றி கொலை செய்த பெண் அவரது கள்ளக்காதலன் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல பட்டமுடையார் புரம் கிராமம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த மகிழம்பூ என்பவரது மகன் வேல்துரை இவர் நெல்லை மாவட்டம் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள் என்ற உமா இவர்கள் தற்போது பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப் பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
வேல்துரை தினமும் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்துக்கு சென்று அங்கிருந்து பஸ்மூலம் வேலைக்கு புறப்பட்டு செல்வார். அதன்படி சம்பவத்தன்று அதிகாலையில் வேல்துரை பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார் திடீரென்று வேல்துரை சென்ற பைக் மீது மோதி வட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட கண்டக்டர் வேல்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வேல்துரையின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த விபத்து திட்டமிட்டு நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை கண்டுபிடித்து காரின் டிரைவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியைச் சார்ந்த வைத்திலிங்கம் என்பவரது மகன் ஆறுமுகம் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை பிடித்து விபத்து தொடர்பாக விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.
மேலும் விசாரணையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரின் உரிமையாளர் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி நாடார் என்பவரது மகன் முத்து சேர்மன் என்ற சுதாகர் என்பதும் அவர் தூண்டுதலின் பேரிலேயே வேல்துரையின் பைக் மீது காரைக் கொண்டு மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றதாகவும், இந்த சம்பவம் நடைபெற்ற போது முத்து சேர்மன் என்ற சுதாகரும் அந்தக் காரில் இருந்ததாகவும் காரின் டிரைவர் ஆறுமுகம் கூறியுள்ளார்.
உடனடியாக பாவூர்சத்திரம் போலீசார் முத்து சேர்மன் என்ற சுதாகரை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முத்து சேர்மனுக்கு சொந்தமான அடைக்கலப்பட்டணம் வீட்டில் அரசு பஸ் கண்டக்டர் வேல்துரை குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேல்துரையின் மனைவி பேச்சியம்மாள் என்ற உமா விற்கும் வீட்டின் உரிமையாளர் முத்து சேர்மன் என்ற சுதாகருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இதை அறிந்த அரசு பஸ் கண்டக்டர் வேல்துரை பலமுறை கண்டித்து உள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை மாறாக வேல்துரை வேலைக்கு செல்வதை பயன்படுத்தி தொடர்ந்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். உமாவின் கள்ளக்காதலன் முத்து சேர்மன் என்று சுதாகர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அதன் மூலம் ஏகபோக வசதியுட ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். இதை பார்த்த உமா பைனான்ஸ் அதிபருடன் வசதியான வாழ்க்கை வாழ விரும்பியுள்ளார். இதற்கு முத்து சேர்மன் என்று சுதாகரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனவே தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கண்டக்டர் வேல்துரையை தீர்த்துக்கட்டிவிட்டால் பைனான்ஸ் அதிபருடன் ஆடம்பர பங்களாவில் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்று நினைத்த வேல் துரையின் மனைவி பேச்சியம்மாள் என்ற உமாவும், உமாவின் கள்ளக்காதலன் முத்துசேர்மன் என்ற சுதாகரும் கண்டக்டர் வேல் துறையை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை அழைத்து முத்துசேர்மன் என்ற சுதாகர் தனது காரை ஓட்டச் செய்து இருவரும் அந்தக் காரில் பாவூர்சத்திரம் பகுதிக்கு சென்று உளளனர். அப்போது சிவகாமிபுரம் பகுதியில் வழக்கம்போல் தனது பைக்கில் வேலைக்குச் சென்ற வேல்துரை மீது காரை விட்டு மோதுமாறு கூறியுள்ளார்.அதன்படி கார் டிரைவர் ஆறுமுகம் வேகமாக வேல்துரை மீது மோதியுள்ளார் இதில் தூக்கி வீசப்பட்ட வேல்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார.
அதன்பின் முத்துசேர்மன் என்ற சுதாகரும், ஆறுமுகமும் காரில் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்று விட்டதாக தெரிவித்தனர்.எனவே இந்த சம்பவம் திட்டமிட்டு கண்டக்டர் வேல் துரையின் மனைவி பேச்சியம்மாள் என்ற உமா, அவரது கள்ளக்காதலன் முத்துச்செல்வன் என்ற சுதாகர் ஆகிய இருவரும் திட்டமிட்டு கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இது பற்றி வழக்கு பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்தில் சிக்கி பலியான அரசு பஸ் கண்டக்டர் வேல்துரையின் மனைவி பேச்சியம்மாள் என்ற உமா, அவரது கள்ளக்காதலன் முத்து சேர்மன் என்ற சுதாகர், காரை ஓட்டி வந்த ஆறுமுகம் ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்ததோடு விபத்தை ஏற்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை கடைபிடித்து வாழும் தமிழகத்து பெண்கள் மத்தியில் கள்ளக்காதலுக்காக தனது கட்டிய கணவனையே தீர்த்துக்கட்டும் இது போன்ற பெண்களுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர்.
- எம்.முத்துசாமி