நாமக்கல் மாவட்டம் ராமதேவம் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 32), இவரது மனைவி, பிரபாவதி, ( வயது 29), இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பிரபாவதிக்கு பிரவச வலி ஏற்பட்டது. அதையடுத்து மோகனுாரில் உள்ள மலர் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டனர், தொடர்ந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயற்சி நடந்தது. ஆனால், நார்மல் டெலிவரி வேண்டும் என விரும்பியதால், அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையில், வயிற்றில் இருந்த குழந்தை மோசன் போனதாக தெரிகிறது. அதையடுத்து, மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், வரும் வழியிலேயே பிரபாவதி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர். பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண், வயிற்றில் குழந்தையுடன் இறந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-கௌரி சங்கர்