பொன்னேரியில் இருந்து ஆண்டார்குப்பம் முருகன் கோயிலுக்கு நடந்து சென்றால் வெற்றி நிச்சயம்… என அப்பகுதி மக்கள் கோயிலுக்காக நடந்து சென்று சாமி கும்பிடுகின்றனர்.
இதை அறிந்த தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், கணவர் ஸ்டாலினிடம் தெரிவித்து நடந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்படி மு. க. ஸ்டாலின், பொன்னேரி அண்ணா சிலை அருகே காரில் இருந்து இறங்கி “ரோட் ஷோ” என்ற போர்வையில் இருபுறமும் நின்று கொண்டிருந்த மக்களை சந்தித்து மனுக்களை பெற்றும், குழந்தையை தூக்கி முத்தமிட்டு ஆசீர்வதித்து வழங்கினார்.
மேலும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
காலை 11 50 க்கு மேடைக்கு வந்திருந்த முதல்வர் நேரம் ஆகாததால் மேடையில் இருந்த கழிவறைக்கு சென்று சரியாக 12 .01 மேடையில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் பற்றி விழாவுக்கு வந்திருந்த அனைவரும் பேசிக்கொண்டது முக்கியமானதே.
காலதாமதமாக வந்ததற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு நான் காரணம் அல்ல அமைச்சர் சா.மு. நாசர் தான் காரணம் என மழுப்பலாக பொதுமக்களிடம் பதில் அளித்தார்.
– கே.ரவிசந்திரன்