துருப்பிடித்துப் போன தூத்துக்குடி அதிமுக!

தூத்துக்குடி மாவட்ட அரசியலில் திமுகவே முதன்மையில் உள்ளது. திமுகவை  வீழ்த்த அதிமுகவிடம் போதுமான நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் வியூகம் இல்லை என்கின்றனர் தூத்துக்குடியில் உள்ள அதிமுக கட்சி பிரமுகர்கள். தூத்துக்குடி அதிமுக என்றாலே அது ஜெயலலிதா காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்,ஆறுமுக நயினார், செல்ல பாண்டியன் மற்றும் சண்முகநாதன் என்று தான் இருந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக சென்று தற்போது திமுகவில் பவர்ஃபுல் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் உள்ளார். தற்போது  நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் முதலமைச்சரின் சகோதரி கனிமொழி கருணாநிதி மாவட்ட அரசியலில் ஆக்டிவாக இருக்கிறார் மறைந்த திமுகவின்  தூத்துக்குடி முகமாக கருதப்பட்ட பெரியசாமியின் மகள் கீதாஜீவன் தற்போது மாவட்டத்தில் மற்றொரு மாவட்ட செயலாளராகவும் பவர்ஃபுல் அமைச்சராகவும் இருக்கிறார் இப்படி திமுகவை பொருத்தமட்டில் செல்வாக்கு மிக்கவர்களே  இருக்கின்றனர். 

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் திமுக சார்பில் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது மாவட்டத்தில் கோயில்பட்டி தொகுதியில் மட்டும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றுள்ளார். கடம்பூர் ராஜு சார்ந்து இருக்கக்கூடிய கம்மவர் நாயுடு சமுதாயம் வாக்கு அதிகம் இருப்பதால் கோவில்பட்டி  தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். எதிர்த்து கம்யூனிஸ்ட் களம் கண்டதால் கடம்பூர் ராஜீவ் வெற்றி கடந்த தேர்தலில் எளிதாக அமைந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இந்த தொகுதியில் சரியான வேட்பாளரை நிறுத்தவில்லை இதனால் அதிமுக சொற்ப வாக்குகளை எடுத்து தோல்வி அடைந்தது பாஜக கூட்டணி  சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டதால் இந்த தொகுதியில் கனிமொழியின் வெற்றி எளிதாக அமைந்துவிட்டது மேலும் அதிமுக கிளை ஒன்றிய நகரங்களில் தற்போது நிர்வாக கட்டமைப்பு மிகவும் சீர்குலைந்து போய் துருப்பிடித்து உள்ளது என்கின்றனர் அதிமுகவினர். மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிமுகவை வலுப்பெற செய்ய  இளைய தலைமுறை மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும். 

முன்னாள் அமைச்சராக இருக்கக்கூடிய சண்முகநாதன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்கின்ற குற்றச்சாட்டை அவர் மீது அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் வைக்கின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லபாண்டி  அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தாலும் கழக வெற்றிக்கு அவர் பாடுபடுவது இல்லை என்று உள்ளூர் அதிமுகவில் புகார் தெரிவிக்கின்றார். முன்னாள் அமைச்சர்   திரு.கடம்பூர் ராஜு கோயில்பட்டி விளாத்திகுளம் தொகுதிகளை மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும் இங்கு உள்ள தெலுங்கு வாக்குகளை மட்டுமே குறி வைத்து அரசியல் செய்வதாகவும் பிற தொகுதிகள் மீது அவர் கண்டு கொள்வதில்லை என்கின்ற புகார் வருகிறது. ஒட்டப்பிடாரம் தொகுதியில்  அதிமுக மிகவும் பலவீனமாக இருப்பதாகவே அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அதிமுகவை வளர்த்தெடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை அதிமுக நிர்வாகிகளாக இருக்கக்கூடிய சண்முக நாதன் என்கின்ற புகார்களையும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

 வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  வலுவான கட்சி நிர்வாக கட்டமைப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்படுத்தவில்லை என்றால் அதிமுகவின் வெற்றி இந்த மாவட்டத்தில் கேள்விக்குறி  ஆகும் என்கின்ற அதிமுகவினர். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தமட்டில் அதிமுக பலமில்லாமல் உள்ளது அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்வெற்றியிருப்பதால் அனிதாவிற்கு எதிரான  வலுவான வேட்பாளர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும் என்கின்ற அதிமுக நிர்வாகிகள். அதிமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவின் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன், எம்பி கனிமொழியுடன் மறைமுக கூட்டில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். திமுக இந்த மாவட்டத்தில் இளைஞர்களின் ஈர்ப்பதற்கென்று ஜோயலை மாநில இளைஞரணி துணை செயலாளர்  முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறது. இதனால் தற்போது இளைஞர்களை ஈர்க்கும் முகமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவில் யாரும் இல்லை அதிமுக நிர்வாகிக்குள் ஒற்றுமை இல்லாததால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆறு சட்டமன்ற தொகுதிகள்  சவாலாகவே இருக்கும் என்கின்றனர் அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகள்.

– திலீபன்அய்யனார்