*எலும்புகளுடன் மஞ்சள்,குங்குமம் வைத்து பிள்ளையார் பிடித்து மாந்திரீகம் செய்யப்பட்டதா என போலீசார் விசாரணை*
கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை அருகே சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது தொடர்பாக புது நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த காவல்துறையினர் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
எலும்புக்கூடுகளை எடுக்க வந்த மாநகராட்சி ஊழியர்கள் உரிய பாதுகாப்பு கையுறை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.
சாலை ஓரத்தில் எலும்பு கூடுகளின் அருகே மஞ்சள் குங்குமம் ஆகியவை பிள்ளையார் பிடித்து வைக்கப்பட்டிருந்ததால் மாந்திரீகம் செய்யப்பட்டதா? என்ற கேள்வி எழுப்புகிறது.
பிரதான சாலையின் அருகே மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
– முருகன்