ஆன்லைன் சூதாட்டத்தில்,10 லட்சத்தை இழந்தவர்…ரயில் முன் பாய்ந்து தற்கொலை.-  திருவள்ளூர் கொடுமை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சம் இழந்த விரக்தியில் ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்

திருவள்ளூர் அருகே வயலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் மகன் தமிழ்செல்வன்.

தொழில் நுட்பத்தில் பட்டயம் முடித்துள்ள இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

 மேலும், அடிக்கடி ஆன்லைன் சூதாட்ட்டத்தில் ஈடுபட்டு வந்தாராம். அதோடு, தன்னுடைய ஊதிய பணம் மற்றும் கடன் வாங்கியும் ரூ.10 லட்சத்தை சூதாட்டத்தில் இழந்தாராம். இதைத் தொடர்ந்து வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினா்கள் அனைவரும் சமதானம் செய்து வைத்துள்ளனார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூருக்கும்-ஏகாட்டூருக்கும் இடையே வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக அறிந்த திருவள்ளூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி  அவரது தந்தை வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் ரயில்வே இருப்பு பாதை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
– ரவிசந்திரன்