மாமூல் கொடுத்து கள்ளச்சாராயம் விற்பனை…வெளியானது பரபரப்பான வீடியோ…-இது ஆத்தூரில்!

கடந்த வருடம்  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு பெரும் துயர சம்பவம் நடைபெற்றது. தற்போது ஆத்தூரில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வளையமாதேவி பிரிவு சாலையில் டாஸ்மாக் கடை எண்7142  அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி காலை 9 மணிக்கு கடையைத் திறப்பதற்கு முன்னர், எதிரே உள்ள இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்ததாகக் கூறப்படுகிறது. அதனைக் கண்ட இரண்டு நபர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கெங்கவல்லி ,ஏற்காடு சட்டமன்ற தொகுதி அடங்கிய பகுதிகளில் அருநூத்துமலை, ,வெள்ளி மலை ,நெய்யமலை, கஞ்சமலை, கருமந்துறை,கல்வராயன் மலை உட்பட்ட மலையடிவாரப் பகுதிகளில், கள்ளச்சாரயம் காய்ச்சுவது கொடி கட்டி பறக்கிறது.
இந்த சம்பவத்திற்கு திமுகவைச் சார்ந்த முக்கிய புள்ளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
 நீண்ட அறிக்கை ஒன்று வெளியிட்டார்;  இதில்”திமுக என்றால் என்ன இரண்டு கொம்பு முளைத்தவர்களா?” –  காட்டமாக பேசியுள்ளார்!

அந்த பகுதியை சார்ந்த திமுகவினரிடம் சிலரிடம் பேசிய போது
ஆத்தூர்,கெங்கவள்ளி ,ஏற்காடு ,ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி மலைகள் சூழ்ந்து பகுதியாக உள்ளது, இந்த சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவைச் சார்ந்தவர்கள் தான் எம்எல்ஏவாக உள்ளார்கள். அவர்களுக்கு இப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பற்றி தகவல் அறியாத இருப்பார்களா? ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் எந்தெந்த இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் என்று அதிமுகவைச் சார்ந்தவர்களுக்கு  நன்கு தெரியும். இதில் அதிமுக எம்எல்ஏ விற்கும் ,அதிமுக  முக்கிய புள்ளிகளுக்கும், கள்ளச்சாராய
 தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

 இங்கு இருக்கும் ஒவ்வொரு மலை கிராமங்களிலும் அனைத்து எம்எல்ஏ விற்கும் நன்கு தெரியும் எந்தெந்த பகுதியில் எங்கு எங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்று இவர்களுக்கு தெரியாமல் இருக்குமா?  இதற்கு பதில் சொல்வரா ?எடப்பாடி பழனிசாமி என்று  அப்ப பகுதி திமுகவினர் கேட்கிறார்கள்.
இவ்வாறு  கேள்வி கேட்கும்எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு கள்ளச்சாராயம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் இருந்து அப்போது அவருக்கு நெருக்கமான கட்சிக்காரர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பெரும் குற்றச்சாட்டு இருந்தது , அப்போது  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்தார்  அப்போது அதிமுக காட்சிக்காரர்கள் என்றால் கொம்பு முளைத்தவர்களா?” எங்களை குறை சொல்வதற்கு முன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தை கொஞ்சம் திரும்பி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று  சொல்கிறார்கள். ஒரு சில திமுகவினர் செய்யும் செயலுக்கு ஒட்டுமொத்த கட்சியினரை குறை சொல்வது எடப்பாடி பழனிசாமி வாடிக்கையாக்கிவிட்டது.

இந்த விவகாரம் குறித்து சேலம் எஸ்.பி கெளதம் கோயல் கூறுகையில், “சாராய பாக்கெட்டு விற்பதாகப் பரவிய வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் பார் நடத்திய ஜோதிவேல் மற்றும் ரவியை கைது செய்துள்ளோம். மேலும், எங்கிருந்து சாராயம் வாங்கினர் என விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.இந்த விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த ஆத்தூர் நகராட்சி 18-வது வார்டு செயலாளர் ரவி, ஆத்தூர் 26வது வார்டு செயலர் இளங்கோ, மன்னன் வளையமாதேவி வினோத், ஆத்தூர் சரண் ஆகியோர் சாக்கு முட்டையில் ஆறு பாக்கெட் கொண்டு விஷ பெட்டியுடன் கூடிய 3 லிட்டர் கள்ளச் சாரயத்தை மூட்டையில் வைத்து செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டதாக ஆத்தூர்  போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ரவியை கைது செய்யப்பட்டு, மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஒவ்வொரு சம்பவத்திற்கும் முன்பும் அப்போது மட்டும் ட்ரெண்டிங்காக பேசப்பட்டு வருகிறது தவிர இது ஒரு நிரந்தர தீர்வு எந்த  ஆட்சிக்காலத்திலும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்பாக தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

– இரா.சீனிவாசன்