திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், புட்லூர்- ராமாபுரம் கிராமத்தில், அருள்மிகு பூங்காவனத்தம்மன் என்கிற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் குழந்தை வரம் வேண்டி, சீமந்த சுப நிகழ்ச்சி நடத்த, ஏராளமான பெண்களும் ஆண்களும் வந்து செல்கின்றனர்.இவர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சாலை வசதி இல்லை. உள்ளூர் மக்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆகவே பக்தர்கள் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.