பிரதோஷ நாளில் விரதம்…
ஆயிரம் நன்மைகள்…
இனிய பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய்
நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.
நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத் தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.
மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒருபிடி வன்னி இலை ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தி யின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித் து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையு ம் தொழுதால் சனி பகவானால் உண்டா கும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.
இனிய சிவனுக்கு அபிஷேகம் நைவேத்தியம்
தடைகள் நீங்கும்
அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன்,
பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை,
தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம்.
சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம்.
கொண்டக்கடலை, எலுமிச்சை சாதமோ
தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ .இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.
பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். நந்தியம்பெருமானுக்கு அருக ம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.
அபிஷேக பொருட்களின் பலன்கள்
அபிஷேக பொருட்கள் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் – பல வளமும் உண்டாகும்,
தேன் – இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் – விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும், நெய் – முக்தி பேறு கிட்டும்.
இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் – சுகவாழ்வு,
சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்,
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.
நமச்சிவாய மந்திரம்
பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமா பாதக ங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகி றது. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்த்தால் சிறப்பு.
முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராய ணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்ய ப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசை யையும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தி ல் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிப ட்டால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
நந்தி தேவரை வணங்குவோம்
முக்தி பொறுவோம்….
அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவ லோக நாதனே .
சிவாய நம சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி
– மதுரை மணிகண்டன்