நாமக்கல்-
கனிம வளங்களை கடத்துவதில்…
நள்ளிரவில் மோதிக்கொண்ட திமுகவினர்?
நாமக்கல் மாவட்டம் பேளுகுறிச்சி கணவாய் பகுதியில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் கனிம வள கொள்ளை கதாநாயகனும்,அத்துறையின் அமைச்சருமான துரைமுருகனின் ,ஷி.ஸி மணல் கொள்ளை நிறுவன கும்பலும் , சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மணல் கொள்ளை கும்பலும் கனிம வளங்களை தினந்தோறும் பல கோடி ரூபாய்க்கு கொள்ளை அடித்து வருகின்றனர் .
இந்த நிலையில் கனிம வளங்களை யார் அதிகம் கொள்ளையடிப்பது என இரு தரப்பினரும் (23.03.2025)நேற்று இரவு லாரிகளை வளைத்து போட்டு அடியார்களுடன் நடு ரோட்டில் பயங்கரமாக மோதிக்கொண்ட காட்சிகள் தற்போது அதிர்ச்சியை உள்ளாக்கி உள்ளது.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கட்சிக்காரர்களை நான் தான் மண்ணெடுக்க விடுகிறேன், எஸ்.ஆர் கம்பெனிக்கு விடுவதில்லை என பெருமையாக பேசிய வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
நள்ளிரவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பேளுக்குறிச்சி காவல் நிலையம் எதிரியே நடந்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சி. இருவரும் தாக்கிக் கொண்டதில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பேளுகுறிச்சி காவல்துறையினர் கப்சிப் என உள்ளனர் .
காவல் நிலையம் முன்பே மணல் கொள்ளையில் ஈடுபடும் திமுக பிரமுகர்கள் அடியாட்களுடன் லாரிகளை சாலையில் குறுக்கே போட்டு மோதிக்கொண்ட சம்பவத்தில் இதுவரை ஆட்சியர் வாய் திறக்கவே இல்லை என்றும் , கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் கனிமவள கொள்ளை குறித்து பலமுறை புகார் கொடுத்தும் , “அமைச்சர் தலைமையில் திமுகவினர் செய்வதை எப்படி தடுக்க முடியும் என எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்த உள்ள நிலையில் கனிம வள கொள்ளையை கண்டு கொள்வாரா? அல்லது கல்லா கட்டிக்கொண்டு கல்லாக இருப்பாரா?
ஏற்கனவே நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் இன்னொரு மாவட்ட செயலாளர் ஆட்சியர் ஷி.உமா என்றும் , திமுகவினர் நடத்தும் சட்ட விரோத கனிம வள கொள்ளைக்கு துணை போகும் ஆட்சியர் தெரு தெருவாக ஆய்வு என்ற பெயரில் அங்கன்வாடி முதல் அரசு மருத்துவமனை வரை சென்று தான் ஒரு நேர்மையான அதிகாரி போல் காட்டிக்கொண்டு விளம்பரம் தேடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் வெட்ட வெளிச்சமான இந்த கனிமவளக் கொள்ளை குறித்து வாய் திறப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம் .
-கௌரிசங்கர்