நெல்லை- மாற்றங்களை எதிர்பார்க்கும்… அதிமுக தொண்டர்கள்…?

நெல்லை-
மாற்றங்களை எதிர்பார்க்கும்…
அதிமுக தொண்டர்கள்…?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை நெல்லையில் அதிமுக பல வெற்றிகளை கண்டது முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியே என்றாலும் அதிமுகவின் வாக்கு குறிப்பிட சதவீதம் வரை இருந்தது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக மோசமான தோல்வி அடைந்தது மட்டுமின்றி மூன்றாவது இடத்திற்கு சென்றது, மேலும் நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே அதிகம் பெற்றிருந்தது, இது நெல்லை அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  மாவட்டத்தில் அதிமுக கட்சி பணிகள் சரியாக செய்வதில்லை என்று மாவட்ட செயலாளர் கணேசராஜா  மீது அதிமுக தொண்டர்கள் புகார்களை அடுக்குகின்றனர் இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம் அவர் கூறுகையில் தொடர்ந்து அதிமுகவுக்கு தேர்தல் சரிவு என்றாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சரியான வேட்பாளரை இந்த தொகுதியில் நிறுத்தவில்லை இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜான்சி ராணி தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ளவர் அல்ல நாடாளுமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளரை தலைமை நிறுத்தி இருந்தால் இரண்டாவது இடத்திற்கு நிச்சயம் வந்திருப்போம் தோல்வி அடைந்திருந்தாலும் மரியாதைக்குரிய வாக்குகளையாவது அதிமுக பெற்றிருக்கும் ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  கணேச ராஜா  தன்னை மீறி மாவட்டத்தில் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்ததனால் ஜான்சி ராணியை களம் இறக்கினார். ஜான்சி ராணி போட்டியிட்டபோது அவருக்கு அதிமுக சார்பில் பெரிய ஒத்துழைப்பும் இல்லை மாவட்ட செயலாளர் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்யவில்லை தேர்தலில் வேண்டாம் வெறுப்பாகவே மாவட்ட செயலாளர் தேர்தல் சந்தித்தார் கடந்த ஆட்சி காலத்தில் மாவட்ட செயலாளராக இருந்தபோது கோடிக்கணக்கில் சம்பாதித்தார் ஆனால் எதிர்க்கட்சியானதுக்கு பிறகு தான் சம்பாதித்த பணத்தை அதிமுக இயக்கத்திற்கோ தொண்டர்களுக்கோ செலவழித்து கட்சி வளர்ப்பது இல்லை என்கின்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் தொண்டர்கள். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த கணேசராஜா பின்னர் தன்னை எடப்பாடி ஆதரவாளராக  மாற்றிக்  கொண்டார். அதிருப்தி அடைந்துள்ள தொண்டர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா உடன் இணைந்து  தற்போது தங்கள் அரசியல் வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். பாப்புலர் முத்தையாவை பொருத்தமட்டில்  ஜெயலலிதா காலத்தில் திறம்பட செயல்பட்ட ஒரு மாவட்ட செயலாளர் என்ற பெயர் உண்டு மேலும் அதிமுக பிளவு பட்டபோது சசிகலா தினகரன் அணிக்கு  சென்றதால் மாவட்ட செயலாளர் பதவியை இழக்க  வேண்டிய சூழல் ஏற்பட்டது இந்த சூழலை பயன்படுத்தி தான் கணேச ராஜா மாவட்ட செயலாளராக வந்தார். பாப்புலர் முத்தையா அதிமுக இயக்கத்தின் வேலைகளை தற்போது மிகவும் வேகமாக தொடங்கியுள்ளார் குறிப்பாக தற்போதைய மாவட்ட செயலாளர் மீது உள்ள புகார் மற்றும் குறைகளை தலைமைக்கு எடுத்துச் சொல்லி வருகிறார், மேலும் மாவட்டச் செயலாளருக்கு  எதிர்ப்பு மனநிலையில் உள்ள பிற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் நெல்லை மாநகர மாவட்ட செயலாளராக பாப்புலர் முத்தையாவை கொண்டு வரவேண்டும் என்று அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் விரும்புகின்றனர். தொண்டர்களின் எண்ணத்தை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கணேசராஜா மற்றும் பாப்புலர் முத்தையா ஆகியோரின் மோதல் வெளிப்பட்டது அப்போதே கணேச ராஜாவை மாற்றி இருக்க வேண்டும் என்கின்றனர் அதிமுகவினர். இதேபோல் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இசக்கி சுப்பையா தொகுதி தொகுதி பக்கம் சரியாக வருவதில்லை என்கின்ற புகார் வரத் தொடங்கியுள்ளது. புறநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் அவரின் கீழ் ராதாபுரம் நாங்குநேரி அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகள் வருகின்றனர் இந்தப் பகுதியில் நாடார் சமுதாயத்தினர் அதிகமாக  இருப்பதால் ஏற்கனவே மாநகர மாவட்டத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் மாவட்ட செயலாளராக இருப்பதால் புறநகர் மாவட்டத்திற்கு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மாவட்டச் செயலாளராக  அறிவிக்க வேண்டும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததின் அடிப்படையில் இந்த பகுதியில் நாடார் சமூகத்தைச் சார்ந்த வக்கீல் ஏ. ஆர் சீனிவாசன் அல்லது இன்பதுரை போன்ற நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மாவட்ட செயலாளராக நியமித்தால் கட்சி வேலை மேலும் வேகம் எடுக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். மாவட்ட செயலாளர்களை மாற்றினால் ஒழிய வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்கின்றனர் அதிமுகவின்  தொண்டர்கள்.

-திலீபன் அய்யனார்