சசிகலாவை வரவேற்று அதிமுக பரபரப்பு போஸ்டரில் “ஆட்டம் போட்ட கூட்டம் ஆடி அடங்கிவிட்டது ஆடியில் தொடங்குகிறது சின்னம்மாவின் பரி வேட்டை ” அதிமுக மதுரை மாவட்டம் என, போஸ்டர் விரகனூர், சிந்தாமணி, பெருங்குடி பகுதியில் ஒட்டப்பட்ட து.
மதுரை மாவட்டம் இதில், விரகனுர் பகுதியி ஒட்டப்பட்ட போஸ்டர் சிலவற்றில் சசிகலா முகத்தை கிழித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம், விரகனூர், சிந்தாமணி பகுதிகளில் சசிகலாவை வரவேற்று அதிமுக ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா தென்காசியில் இருந்து நாளை முதல் மூன்று நாட்கள் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள இருப்பதால், இன்று இரவு மதுரை வருகிறார்.
சசிகலா, மதுரை வருவதை ஒட்டி அவருடைய ஆதரவாளர்கள் சார்பில் “ஆட்டம் போட்ட கூட்டம் ஆடி அடங்கிவிட்டது. ஆடியில் தொடங்குகிறது. சின்னம்மாவின் பரி வேட்டை ” அதிமுக மதுரை மாவட்டம் என போஸ்டர், விரகனூர், சிந்தாமணி, பெருங்குடி பகுதியில் ஒட்டப்பட்டது.
இதில், விரகனுர் பகுதியி ஒட்டப்பட்ட போஸ்டர் சிலவற்றில் சசிகலா முகத்தை கிழித்துள்ளனர்.
சசிகலா வருகை ஒட்டி, அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் மதுரை, மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– நா.ரவிச்சந்திரன்
மதுரை-சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் யுத்தம்
