ஆற்காடு லட்சுமண முதலியார் ரொம்பவே பிரபலம் தவிட்டு வியாபாரி இளைஞர் பருவத்தை தொட்ட அவருடைய மகன் ஈஸ்வரப்பன் முதல்முறையாக ஆற்காடு நகரமன்ற தலைவர் பதவியில் உட்காருகிறார். நகரத்தில் அனைத்து தரப்பின் மத்தியிலும் மகிழ்ச்சி! குறிப்பாக முதலியார் சமுதாயத்தினர் மத்தியில் ஏக உற்சாகம் திமுக கட்சி பேனரில் என்பது அளவில்லா மகிழ்ச்சி பெரியதாக சாதிக்கவில்லை என்றாலும் ஐந்து வருடத்தை நகரமன்ற தலைவராக கடந்துவிட்டார்.
அடுத்து எம்எல்ஏ சீட் வாய்ப்பு அதிமுகவில் பலவீனமான வேட்பாளர் என்பதால், ஈஸ்வரப்பனுக்கு எம்எல்ஏ ஆகும் வாய்ப்பு! ஆனால் அதிமுக ஆட்சி தொகுதிக்குள் அடிக்கடி நடமாடினார் ஆதாயம் பார்ப்பதில் அக்கறை காட்டினார் நான் எதிர்க்கட்சி எம்எல்ஏ என்னால என்ன செய்ய முடியும்? என்று திமுகவினருக்கும் ஓட்டுபோட்ட மக்களுக்கும் ஒருசேர டாட்டா காட்டிவிட்டார்.
இப்பொழுது இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆகி இருக்கிறார். பதவி நான்கு வருடங்களை தொட்டு விட்டது இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். முக்கிய பிரமுகர்கள் அழைத்தால் மட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார், தீடீர்னு எம்எல்ஏ ஆபீஸ் வந்து உட்காருவார் மற்றபடி இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்தியுடன் அழையா விருந்தாளியாக சுற்றிக்கொண்டிருப்பார். தன் மகன் வினோத்காந்திக்கு ஆவலுடன் எதிர்பார்த்த மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவியை குறுக்கு வழியில் தட்டிப் பறித்துவிட்டார் அதனால ஈஸ்வரப்பன் மீது அமைச்சர் காந்திக்கு ஏகப்பட்ட கடுப்பு. ஆனாலும் அசராமல் காந்தி பின்னாடியே சுற்றிக்கொண்டிருக்கிறார். அவருடைய ஒரே லட்சியம் அடுத்து மாவட்ட செயலாளர் அப்படியே அமைச்சர் பதவி ஈஸ்வரப்பனின் கனவுகளை தெரிந்து கொண்ட காந்தி உள்ள குமுறினாலும் வெளியில் கடமைக்கு சிரிக்கிறார். காரணம், ஈஸ்வரப்பன் தன்னுடைய தொடர்புகளை அமைச்சர் உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் என்று வளர்த்து வைத்திருப்பதுதான். ஆனால் இளைஞரணி மாவட்ட செலாளராக தன்னுடைய செயல்பாட்டில் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டதாக திமுகவினர் வெளிப்படையாக பேசுகின்றனர். குருவி தலையில பனம்பழம் வைத்த கதையாகிவிட்டது. இளைஞரணி அமைப்பாளராக எந்த நிகழ்ச்சியையும் திறம்பட நடத்த முடியவில்லை காரணம் செலவு செய்யமாட்டார் இந்த விஷயத்தில் அறிவாலயம் ஈஸ்வரப்பனை நம்பி ஏமார்ந்துவிட்டது என்கிறார்கள் நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள்.
ஈஸ்வரப்பன் வளர்ச்சி தன் மகன் வினோத்காந்தி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால் தொலைநோக்கு பார்வையிலேயே வைத்திருக்கிறார் அமைச்சர் காந்தி! முதல்வர் மு.க.ஸ்டாலினிடமோ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடமோ தமிழக அமைச்சரவையிலோ காந்திக்கு நல்ல பெயர் இல்லை அதாவது அவங்க குட் புக்ல இல்லை என்கிறார்கள் மூத்த திமுகவினர்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதி பெரியது அதற்கு சிறிய அளவில்கூட உபகாரம் செய்யவில்லை என்றால் எப்படி? மறுபடியும் எனக்குத்தான் எம்எல்ஏ சீட் அப்படியே மாவட்ட செயலாளர் அப்படியே அமைச்சர் என்று ஏகப்பட்ட கனவுகளோடு மனதிற்குள் காகித கப்பல் ஓட்டிக்கொண்டிருக்கும் ஈஸ்வரப்பன், விரல்விட்டு எண்ணக்கூடிய திமுக நிர்வாகிகளோடு மட்டும் தொடர்பில் இருக்கிறார். மற்றவர்களுக்கு தரிசனம் கிடையாது. திமிரி மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் இவரால் திமுகவுக்கு கெட்ட பெயர் எல்லா தவறுகளையும் தாராளமாக செய்கிறார். ஒன்றியத்தை யாராவது வாங்கிக்கொள்ள தயாராக இருந்தால் விற்றுவிடுவார் போல அவ்வளவு வேகமாக இருக்கிறார் கமிஷன் இருபது சதவிதத்திற்கு குறைச்சலா ரமேஷ்கிட்ட பேசக்கூடாது ரொம்ப கோபப்பட்டு எடுத்தெறிஞ்சி பேசிவிடுவாராம். இவருக்கு அடுத்து கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோக் இவருக்கும் திமுகவினர் பொதுமக்கள் மத்தியில நல்ல பெயர் இல்லை என்கிறார்கள். ஆனால் ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் முப்பதுவெட்டி பாண்டுவுக்கு குட் சர்ட்டிபிகேட் தருகிறார்கள். ஆற்காடு நகர செயலாளர் சரவணன் தன் பாக்கெட் நிரம்பினால் போதும் என்று நினைப்பவர். நகரமன்ற தலைவர் ஸ்ரீதேவி பென்ஸ்பாண்டியன் பெயருக்கு தலைவராக இருக்கிறார். எல்லாம் கணவர் பென்ஸ்பாண்டியன்தான் வழிபறி கொள்ளை அளவுக்கு நகராட்சியை கொண்டு போயிட்டார். கவுன்சிலர்களை மிரட்டுவது, நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்போறோம் என்று அமைச்சர் காந்தியிடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆற்காடு நகரத்தில் பென்ஸ்பாண்டியன் நடவடிக்கைகளால் அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏன் இதையெல்லாம் ஈஸ்வரப்பன் எம்எல்ஏ கேட்கமாட்டாரா? மாட்டார் பென்ஸ்பாண்டியன் தைரியமாக ஆட்டம்போடுவதே ஈஸ்வரப்பன், அமைச்சர் காந்தி பெயரைச்சொல்லிதான் இந்த விஷயம் ஆற்காட்டில குழந்தைக்குகூட தெரியும். ஆற்காட்டில் பிரபலமாக இயங்கிவரும் மகாத்மா காந்தி அறக்கட்டளையில் முக்கிய நிர்வாகிகள் லட்சுமண முதலியாரும் பென்ஸ்பாண்டியனும் பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கும் லட்சுமண முதலியார் அவசரத் தேவைக்கு காந்தி அறக்கட்டளை பணத்தை பெரியஅளவில் ஆசையாக எண்ணிப் பார்த்துவிட்டார். அதனால இருவருக்குள்ளும் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட். நீ என்னை கண்டுக்காதே நான் உன்னை கண்டுக்கமாட்டேன் என்பது இவங்க பொது வாழ்க்கை இப்படி போகுது என்கிறார் நம்மிடம் பேசிய கல்வித்தந்தை.
ஆற்காடு நகர துணை செயலாளர் ஏ.ஜி.ரவி, இவர் மீது இல்லாத வழக்குகளே இல்லை கடடப்பஞ்சாயத்து பிரபலம் இவர் ஈஸ்வரப்பனின் இதயக்கனி என்று இளைஞரணி திமுகவினர் வர்ணிக்கின்றனர். திமிரி, கலவை, விளாப்பாக்கம், கணியம்பாடி வேலூர் வரை நீளும் ஆற்காடு தொகுதி எல்லை அடிக்கடி வரவேண்டும், எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் ஈஸ்வரப்பன் என்று திமுகவினரும் வாக்காளர்களும் எதிர்பார்க்கின்றனர் இருதரப்பிடம் இருந்தும் ரொம்பவும் விலகியே இருக்கிறார் ஈஸ்வரப்பன் ஏனோ தெரியவில்லை? மறுபடியும் எல்எல்ஏ சீட்டு கேட்டாலும், இவருக்கு கொடுத்தாலும், ஆற்காடு தொகுதியில நிலவரம் கலவரமாக இருக்கும் அதிருப்தி அலை அடிக்குது. ஈஸ்வரப்பனின் செல்வாக்கு லட்சணத்தை தெரிந்துகொண்ட திமுகவினர் எல்லோருமே எம்எல்ஏ சீட் கேட்க தயாராகிட்டாங்க, அதில மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சரவணன், இவர் ஏற்கனவே எம்எல்ஏ சீட் கேட்டவர், நகரமன்ற தலைவர் பதவி கேட்டு கடைசி நேரத்தில் ஏமாந்தவர் இந்தமுறை எம்எல்ஏ சீட்டு எனக்குதான் என்று காய் நகர்த்துகிறார். அடுத்தவர் மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி கல்குவாரி சிமெண்ட், ரியல் எஸ்டேட் என்று பெரிய தொழிலதிபர் அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்பி பின்னணி உள்ளவர், எம்பி சீட் கேட்டு கடும் நெருக்கடி கொடுத்தார். அதனால அமைச்சர் காந்திக்கும், ஏ.வி.சாரதிக்கும் ஆகாது. ஆனா ஏ.வி.சாரதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வலம் வருகிறார் செலவு செய்வதில் தாராளம் காட்டுவதால், வன்னியர் என்கிற அடையாளமும் இருப்பதால், ஆற்காடு தொகுதியில் ஏ.வி.சாரதியும் பேசப்படுகிறார்.
ஆற்காடு தொகுதி திமுகவினரும் வாக்காளர்களும் அடுத்த வர்ற எம்எல்ஏயாவது எங்களுக்கு நல்லது பண்ற மாதிரி வரணும் என்று அறிவாலயத்தை நோக்கி வணக்கம் வைக்கறாங்க.
-ஆலவாயர்
ஜீரோவானார் ஈஸ்வரப்பன்?அடுத்த ஹீரோ யார்…டாக்டர் சரவணனா… ஏ.வி.சாரதியா…- ஆற்காடு நிலவரம்!
