திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, மாலைகவுண்டன்பட்டி ஊராட்சியில், ஊராட்சி செயலராக இருப்பவர் அதிமுக ஆதரவாளரான சுரேஷ், அரசு விதிமுறைகளை மீறி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமாக இதே ஊராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
இதற்கு ஒரே காரணம் அதிமுகவைச் சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதாலும், அதிலும் பெண் தலைவர் என்பதால் கூடுதல் வசதியாகி போனது. ஊராட்சியின் பல வரவு செலவு கணக்குகள் தலைவருக்கு தெரியாமல் நடக்கவே, ஒரு கட்டத்தில் அதனைக் கண்காணிக்க தலைவர் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பணிதள பொறுப்பாளர் என்ற பொறுப்பில் உள்ளே நுழைக்கப்பட்டவர்தான் தலைவரின் நெருங்கிய உறவினர், அதே ஊரைச் சேர்ந்த ஜென்சி இவருக்கு இருந்த தலைவரின் ஏகோபித்த ஆதரவினாலும்,அப்போதிருந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் சமூகத்தவர் என்பதாலும், அரசு ஊழியர்களான தனது உடன்பிறப்புகளாலும் ஒருசில மாதங்களிளே அதிகாரிகள் உட்பட அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.
அரசியல்வாதியின் மகன் என்ற ஒரே தகுதியில் ஊராட்சி செயலாரான சுரேஷ் தன்னை ஒரு மாவட்ட ஆட்சியர் போல நினைத்துக் கொண்டு ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் எந்தவித அடிப்படை பணிகளையும் செய்து தருவதில்லை. புகாரளிக்க வரும் பொதுமக்களிடம் நக்கலாக பேசுவதும் அதிகாரிகள் முதல் அரசியல்வாதி வரை கமிஷன் கொடுக்கிறேன் எங்கு வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என, சவால் விட்டு பொதுமக்களை உதாசீனப்படுத்துவதுமாக இருந்து வரும் ஊராட்சி செயலர், 100 நாள் வேலைக்கு செல்பவர்களையும், பொதுமக்களையும் ஒருமையில் பேசுவதாக புகார் இருந்துள்ளது. நாய்களுக்கு எலும்பு துண்டு போடுவது போல், அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் அமைதியாகி விடுவார்கள் என்றும் ஊராட்சி செயலர் பேசி வருகிறார். இதனால் உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களில் கிடைக்கும் கமிஷன்கள் மற்றும் நூறுநாள் வேலையில் கொட்டும் பணமழையைப் பயன்படுத்திய ஜென்சி அரசியல்வாதிகளின் ஆதரவோடு ஒரு கட்டத்தில் ஒன்றிய அதிகாரிகளுக்கு பினாமியாகவே மாறிவிட்டார். குறிப்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசிக்கு தன் கமிஷனில் மாதம் ஒரு இலட்சம் கொடுத்து வருவதாக கூறிகிறார். பணமழையில் நனைந்த இருவரும் கூட்டு சேர்ந்து ஒரு கட்டத்தில் தலைவருக்கே தண்ணிகாட்ட துவங்கினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் தன்னை தலைவராக நியமித்துக்கொண்ட ஜென்சியை பார்த்து விட்டுதான் ஊராட்சி செயலரையே பார்க்க முடியும் என்றளவுக்கு நிலைமையை மாற்றி அமைத்துக்கொண்டனர்.
இதனையடுத்து ருத்தர தாண்டவமாட துவங்கிய இருவரும் நூறுநாள் வேலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வெளியூரில் குடியிருப்பவர்கள், தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், வயதானவர்கள்,தனது சமூகத்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டபர்களின் அட்டை மூலம் மாதம் பல இலட்சங்களை முறைகேடாக கொள்ளையடித்துள்ளனர்.
அதோடு நிறுத்திக்கொள்ளாத இவர்களின் தாகம் கலைஞர் கனவு இல்ல திட்ட மூலம் கட்டும் வீட்டிற்கு பத்தாயிரம், புதிய நூறுநாள் அட்டைக்கு ஐந்தாயிரம், வீட்டுவரி ரசீதுக்கு இருமடங்கு வசூல், வளர்ச்சித்திட்ட பணிகளில் காண்டிராக்டர்களிடம் தனி கமிஷன் மற்றும் அனைவருக்கும் இலவச கழிப்பறை திட்டத்தில் (சிறி) யாக பணிபுரியும் தனது தங்கை பெயரில் அட்டை போட்டு நூறுநாள் வேலை செய்ததாக மோசடி அதுமட்டுமல்லாமல் அவர் மூலம் கட்டாத கழிவறைகளுக்கு பில்போட்டு பல இலட்சம் கொள்ளை, ஊராட்சி பராமறிப்பு செலவு கணக்கில் பல இலட்சம் கொள்ளை அதைவிட, இறந்தவர்களுக்கு ஊராட்சி மூலம் வழங்கும் ஈம கிரிகை பணம் வழங்குவதில் கூட ஆயிரம் கமிஷன் என பணப் புதையலில் தனி இராஜியமே நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பல கிராமங்களில் நூறுநாள் பணியில் பலரும் 50 நாட்களை தாண்டாத நிலையில் ஜென்சியின் உறவினர்கள்,வெளியூரில் குடியிருப்பவர்கள், மில் வேலை உட்பட வேறு வேலைக்கு செல்பவர்கள், அரசு ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மட்டும் தற்போதே நூறு நாட்களை முடித்துள்ளனர்.இதன் மூலம் மாதாம் மாதம் பல இலட்சங்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இதனால், ஊரட்சிக்குட்பட்ட கிராமங்களில் தமிழக அரசின் பல வளர்ச்சித்திட்ட பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை, தெரு விளக்கு, புதிய சாலை, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஊராட்சி மன்ற தலைவரின் பதவி காலம் முடிந்து விட்டதாலும், ஊராட்சி செயலர் மற்றும் பணிகள் பொறுப்பாளர்கள் இருவரும் கூட்டுக் கொள்ளை அடிப்பதால், அதிகாரிகளுக்கு மாமுல் கொடுப்பதாலும் இதனை உயரதிகாரி கண்டுகொள்ளவில்லை என, கூறப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராமப்புற மேம்பாடு மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக ஒன்றிய அரசின் நிதிகளை பெற தமிழக அரசு பல்வேற போராட்டங்களை செய்து வரும் நிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில்,ஒரே ஒரு ஊராட்சிகள் மட்டும் சாதாரணமாக பணித்தள பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் மூலம் பல லட்சங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், ஊரக வளர்ச்சித் துறையும் உயர்மட்ட தனி அதிகாரிகளை நியமித்து உரிய விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி செயலர் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 100 நாள் வேலைக்கு நான்கு பணிதள பொறுப்பாளர்கள் உள்ளனர் என்ற அவர் இதற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாத போல் கூறினார். மேலும் எதுவானாலும் நேரில் வந்து பேசுங்கள் என்று கூறி நமது இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பஞ்சவர்ணம் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பல்வேறு புகார்கள் அடிப்படையில் பணிதல பொறுப்பாளர் ஜென்சி கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் முறையீடு செய்து அரசு பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
– விடாதுகருப்பு