நாமக்கல் சேந்தமங்கலம்- மணல் கொள்ளையை தட்டி கேட்டவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை… பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்…?

நாமக்கல் சேந்தமங்கலம்-
மணல் கொள்ளையை தட்டி கேட்டவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை…
பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்…?

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  பேளுக்குறிச்சி ஊராட்சிக்கு சம்பந்தப்பட்ட நரசிம்மன்புதூர் கரட்டு அடிவாரத்திலும், கணவாய் பகுதிகளிலும்  கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக திமுகவினர்  சட்ட விரோதமாக அனுமதி இன்றி மண்வெட்டி கடத்தல்.

 சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக பொன்னுசாமி உள்ளார். என்னதான் இவர் எம்எல்ஏவாக இருந்தாலும் சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமாருக்கு தான் இங்கே பவர் .

 இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பான அனைத்து செயல்களுக்கும் தலைமை தாங்கும் அசோக்குமார்  பினாமிகள் நடத்தும் மணல் கொள்ளை மீது  புகார் அளித்து தட்டிக் கேட்பவர்களுக்கு திமுக-வினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பேளுகுறிச்சி காவல் நிலையத்தில் இளைஞர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரிகளில் மண்  கடத்திச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த திமுக கட்சியினர் சிலருக்கும், டிப்பர் லாரி அசோசியேஷன் உரிமையாளர்களுக்கும் அப்பகுதி இளைஞர் சிலருக்கும் இடையே வேளுக்குறிச்சி காவல் நிலையம் முன்  நடுரோட்டில் தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரிய பேசு பொருளாக மாறியது .

இதனால்  மண் கொள்ளையில்  ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் , அப்பகுதி இளைஞர்கள் சிலர் மண் கொள்ளை சம்பவங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் ஆளும் கட்சியினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் திமுக நிர்வாகிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, சரியான பாதுகாப்பு வழங்க வேண்டி பாஜகவை சேர்ந்த ஒன்றிய தலைவர் பாண்டியன் தலைமையில்,முன்னாள் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பேளுகுறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரயிடம் புகார் அளித்தனர் .

 இரவு நேரங்களில் ஜே சி பி ,ஹிட்டாச்சி பயன்படுத்தி மண் கொள்ளையில் ஈடுபட்டு வரும் திமுக வினரை தட்டி கேட்ட சில இளைஞர்களுக்கு திமுகவினரால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 காவல்துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவதை போல் விட்டு வேடிக்கை பார்ப்பார்களா ?

– கௌரிசங்கர்