திருவள்ளூர்- தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு … இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர்-
தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு …
இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் குண்டுகட்டாக விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை ழிபி 205 தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனத்தில் இருந்து நகரி என்எச் 716 பி ரயில் பாதை திட்டங்களுக்கு நிலம் வீடு கடை மரங்கள் ஆகியவற்றைகளை இழந்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஆகியரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இழப்பீட்டிற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தும் பணம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் செய்வதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே நடத்தப்பட்டதால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இதனை அடுத்து நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் இதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லையா எனக் கூறி காவல் துறையிடம் விவசாய சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் விவசாய சங்கத்தினரை குண்டுகட்டாக கைது செய்தனர்

மேலும் கைது நடவடிக்கையின் போது விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் ஒருமையாக பேசியதாக குற்றம் சாட்டிய விவசாய சங்கத்தினர் காவல் துறையிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது

மேலும் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

– கே.ரவிசந்திரன்