திருவள்ளூர்-
14 வருடங்களாக ஒரே இடத்தில் பணி!
உதவி செயற்பொறியாளர் சாதனை?
திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை துணை மின் நிலையத்தில் கடந்த 14 வருடங்களாக கோலாட்சி நடத்தும் உதவி செயற்பொறியாளர்
மின்சாரத் துறையில் பணி மாறுதல் உத்தரவு இவருக்கு பொருந்தாதா?
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வடமதுரை துணை மின் நிலையத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர் கடந்த 14 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிரந்தரமாக பணிபுரிந்து வருகிறார் எண்ணற்ற புகார்கள் இவர் மீது மின்சாரத் துறையில் மேல் அதிகாரிகள் வரை கொடுத்து இன்றுவரை பணி மாறுதல்கள் இல்லாமல் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் அனைத்தையும் கோலாட்சி நடத்தி வருகின்ற இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் இவர் வடமதுரையில் இளநிலை பொறியாளராக பணியை துவக்கி அதே இடத்தில் உதவி செயற்பொறியாளராக பதிவு உயர்வு பெற்று இன்றுவரை பணிபுரிந்து வருகிறார்.
சென்ற அதிமுக ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகள் துணையுடன் கவனிக்க வேண்டியதை கவனித்து நிலையாக வருமானம் கொழிக்கும் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் திருக்கோயில்கள் நிறைந்த இப்பகுதியில் வருமானமும் பல்வேறு வழிகளில் நேர்முக மறைமுக தினம் தோறும் வருமானம் வருவதால் இந்த இடத்தில் நிரந்தரமாக தனது இருப்பிடத்தை தக்க வைத்துக் கொண்டு ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் என்ற அடிப்படையில் வட மதுரையில் கோலாட்சி நடத்தி வருகின்றார். இவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர் விசாரணையில் இருந்து வருகின்றது. இவர் உயர் அதிகாரிகளை சரி கட்டிக்கொண்டு மாதம்தோறும் கப்பம் செலுத்தி தன் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரையும் நிர்பந்தப்படுத்தி பல்வேறு காரியங்களை சாதித்து வருகின்றார் மாவட்ட நிர்வாக செயர்பொறியாளர் அவருக்கு அனைத்து வழியிலும் பக்க பலமாக விளங்குவதால் இவரைப் பற்றி புகார் கொடுத்தால் விசாரணை என்ற பெயரில் அனைத்தையும் தட்டி கழித்து வருகின்றார் முறையான விசாரணை நடத்தப்படுவதில்லை இவர் உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர் செய்யும் அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் மறைமுகமாக உதவி புரிகின்றார் தனது செல்வாக்கை வைத்துக்கொண்டு உயர் அதிகாரிகளிடம் கவனிக்க வேண்டியதை கவனித்து வேண்டியதை தற்போது வரை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.
இவர் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது விவசாயிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதை குறித்து இவரிடம் விவசாயிகள் முறையிட்ட போது அலட்சியமாக பதில்கள் கூறியதால் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் இவரின் பகுதியில் கடந்த 14 வருடங்களாக இதே இடத்தில் பணிபுரிந்து வரும் உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர் இதே மாவட்டத்தை சார்ந்தவர் பல்வேறு வழிகளில் மறைமுக சொத்துக்கள் சென்னை திருவள்ளூரில் குவித்துள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர் இருந்து வருகிறார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்குவாரா பணி மாறுதல் பெற்று சென்று விடுவாரா என்பது மின்சார துறை உயர் அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
– கே.ரவிசந்திரன்