பாஜக வழிகாட்டலில்… அதிமுகவுடன் இணைந்து திமுகவை பழி வாங்க திட்டம்… தமிழக வெற்றிக் கழகம் பலே பிளான்!

பாஜக வழிகாட்டலில்…
அதிமுகவுடன் இணைந்து திமுகவை பழி வாங்க திட்டம்…
தமிழக வெற்றிக் கழகம் பலே பிளான்!

திரைப்பட நடிகர் விஜய் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அரசியலை கூர்ந்து கவனிக்கின்றவர்கள் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் நிகழும் என்று நினைத்திருந்தார்கள். காலம் தொடர அது பொய் கனவாக மாறி போய்க் கொண்டிருக்கிறது. வாரிசு அரசியல், குடும்ப அரசியல், பெரியாரில், அம்பேத்கரில் என விஜய் பேசியதை கண்டு நம்பி விட்டார்கள் மக்கள். அந்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்டு மக்களை மடைமாற்ற நினைக்கிறார் விஜய் என்பது தற்போது நடந்து முடிந்த பொதுக்குழுவின் நடவடிக்கையில் வெளிப்பட்டு விட்டது.

ஆம் ஒரே அடியில் திமுகவை பலமாக எதிர்க்கிறார் விஜய். திமுக எதிர்க்கக்கூடாத கட்சி அல்ல. அதன் செயல்பாடுகள் மக்கள் விரோத போக்கை, மறைமுகமாக மக்கள் சுரண்டப்படுவதை தற்போது வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது திமுகவின் செயல்பாடுகள். அவசியம் அதை அம்பலப்படுத்த வேண்டும். விஜய் அதைத்தான் செய்தாரா விஜய் என்றால் இல்லை அவர் மறைமுகமாக பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் ஆள் பிடிக்கிற வேலையை செய்து வருகிறார். ஆமாம் விஜய் மறைமுகமாக அதிமுக பிஜேபிக்கு ஆதரவு கரம் நீட்டி இருப்பது பொதுக்குழுவில் அவரது பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது.

ஏதோ போகிற போக்கில் நரேந்திர மோடியையும், பிஜேபியையும் அதிமுகவையும் அவர் தொட்டு விட்டு செல்வது அப்பட்டமாக தெரிகிறது திமுகவுக்கு செல்லும் திமுக அல்லாத வாக்குகளை தன் வசம் எடுத்துக் கொண்டால் அதிமுகவின் இயல்பு வாக்கை பெற்று அதிமுக வெற்றி பெற்று விடும் என்கிற கணக்கு தான் விஜய் அதிமுக பாஜக கூட்டணி. ஒரு அரசியல் கட்சி பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை ரகசியமாக நடத்தும். பொதுக்குழு செயற்குழுவில் அதன் நிர்வாகிகள் அவர்களது உரை நிறைகளை ஆனால் பொதுக்குழு செயற்குழு கூட்டங்களை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்த ஒரே அரசியல் கட்சி விஜய் கட்சி தான். அதனால் தான் மீண்டும் சொல்லுகிறோம் விஜய் இன்னும் அரசியல் தெரிந்து கொள்ள வில்லை அவருக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

கட்சிக்குள்ளே ஒரு பக்கம் புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக தொண்டர்கள், பொறுப்பாளர்கள் போர்க்குடி தூக்கி வரும் நிலையில், அதைப் பற்றி விவாதிக்கவோ, நடவடிக்கை மேற்கொள்ளவோ, விஜய் முன் வரவில்லை. காரணம் அவருக்கு கொடுத்த அஜெண்டா வேறு. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தன் திரை பயணத்திற்கு இடையூறு இருக்காது அதை வெற்றிகரமாக செய்யலாம் தொண்டர்கள் எப்பாடு பட்டால் நமக்கு என்ன என்கிற நிலை தான் விஜயின் நிலைப்பாடு. 234 தொகுதிகளிலும் போட்டியிட கட்சியில் இன்னமும் வேட்பாளர்கள் தயாராகவில்லை என்பது அவர்களுக்கு தெரிந்த உண்மை. அப்படி நிறுத்தப்படுகிற வேட்பாளர்களுக்கு இரண்டு கட்சிகளிலும் ஒரு வருமானம் வரப்போகிறது அதை மனதில் வைத்து தான் தொண்டர்களும் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகிறார்கள். கட்சி, கொடி, கொள்கை என எதிலும் அக்கறை செலுத்தாமல் கூட்டத்தைக் கூட்டி உறக்கப் பேசி விடுவதால் தமிழகத்தில் மாற்றம் நிலவாது என்பது விஜய்க்கும் தெரியும் அவரை இயக்குகிறவர்களுக்கும் தெரியும் பாவம் தொண்டர்கள்.

பா ஜோதி நரசிம்மன்