வக்ஃப் திருத்த மசோதா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை… பிஜேபிக்கு ஆதரவாக திமுக எம்பி?

வக்ஃப் திருத்த மசோதா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை…
பிஜேபிக்கு ஆதரவாக திமுக எம்பி?

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கியது திமுக தலைமை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி  அறிவிக்கப்பட்டு அவர் மீது பல்வேறு புகார்களும்,பழைய வீடியோக்கள் அந்தசமயம் வெளிவந்ததனால் . அவரை மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் என்பவரை வேட்பாளராக நிறுத்தினார்கள். திமுகவின்  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவர் என்று திமுக தலைமை அறிவித்தது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வேலை செய்வதற்கு திமுகவினருக்கு பிடிக்கவில்லை,ஆனால் கூட்டணி தர்மத்தின் காரணமாக தலைமையின்  கட்டளையினால் அனைவரும் வேலை செய்து மாதேஸ்வரனை எம்பி ஆக்கினார்கள் .

தற்போது கூட்டணி கட்சிக்கு துரோகங்கம் விளைவிக்கும் செயலாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  மாதேஷ்வரன் விறி செய்யல்பட்டுள்ளர்.

 வக்ஃப் திருத்த மசோதா எதிராக மக்களவையில் ஆளும் பிஜேபி தரப்புக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு  எதிராக மூன்று சுற்று வாக்கெடுப்பாக நடத்தப்பட்டது.

 இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து மொத்தம் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர்.  திமுக கூட்டணி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நாடாளுமன்ற வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் 3.04.2025 அன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். ஆனால் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் கருப்பு சட்டை அணியாமல், பிஜேபி கொண்டு வந்த வஃக்பு வாரிய மசோதாவிற்கு ஆதரவாக வெள்ளை சட்டை அணிந்து ஜாலியாக வந்திருந்தார்.ஆனால் நாமக்கல் மாதேஸ்வரன் விறி ஒருவர் மட்டும் தான் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார் . இவர் தனக்கு வாக்களித்த நாமக்கல் முஸ்லிம் மக்களுக்கு  எதிராக துரோகம் செய்துள்ளார். மாதேஸ்வரன் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாதது
டெல்லி வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

 இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஏப்பா வாக்கெடுப்பில்  கலந்து கொள்ளவில்லை,  திமுக தலைமை என்னை கேட்கிறார்கள் என்று கேட்டதற்கு, அதற்கு இல்லை தலைவரே எனக்கு  ஃபுட் பாய்சன் ஏற்பட்டது அதனால் தான் கலந்து கொள்ள முடியவில்லை, என்று சாக்கு போக்கான காரணத்தை சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் உடல்நிலை சரியாக இருந்ததாகவும், பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று சொல்கிறார்கள்.
 அவர் கடந்த காலத்தில் பிஜேபி ஆதரவு மனநிலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், பிஜேபி  அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் நெருக்கத்தை கட்டுகிறார் என்று டெல்லி வட்டாரத்தில் சொல்லுகிறார்கள்.

 மேலும் இங்கு தமிழ்நாட்டில் திமுக பிஜேபிக்கு எதிராக வலுவாக எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவில் உள்ள கூட்டணி கட்சி இதை புறக்கணித்திருப்பது  நாடாளுமன்றத்தில்  இந்த பேச்சு  கிசுகிசுப்பு சத்தமாக கேட்கிறது உண்மை தானாக நாமக்கல் மக்களே கேட்டு சொல்லுங்க.

 – இரா,சீனிவாசன்