பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் …
சேலத்தில் வி.ஏ.ஓ., உதவியாளர் கைது
சேலம் மாவட்டத்தில் இலவச பட்டா வழங்குதல் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களுக்கான வாரிசு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல் ,பட்டா மாறுதல் போன்றவற்றில் அடாவடியாக சில அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொண்டு சான்றிதழ் வழங்குகிறார்கள்.இதனால் பொதுமக்களிடையே அரசாங்க அலுவலகத்தில் சென்றால் லஞ்சம் கொடுக்காமல் ஏதும் எளிமையாக வாங்க முடியாது.
இரு தொடர்பாக நேற்றைய தினம் சேலத்தில் பட்டா
மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சியின் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ரவிச்சந்திரன். இவரிடம் ராஜேந்திரன் என்பவர் பட்டா மாற்றம் மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனை செய்து தர ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும் என்று வி.ஏ.ஓ., ரவிச்சந்திரன் கேட்டுள்ளார். இதனை கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டு, வி.ஏ.ஓ., ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரவிச்சந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவருக்கு லஞ்சம் வாங்க உதவி செய்து வந்த உதவியாளர் பெருமாளையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கேட்டபோது நாங்கள் எந்த ஒரு சான்றிதழ் வாங்க சென்றாலும் லஞ்சம் கொடுத்து தான் வாங்க வேண்டியாதக இருக்கிறது அரசாங்க கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறுவதற்கு பட்டா சிட்டா வாங்க சென்றாலும் அப்பொழுதும் எங்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு தான் சான்றிதழ் வழங்குகிறார்கள். இந்த அரசாங்கம் அதிகாரிகளுக்கு முழுமையாக சலுகைகள் அளிக்கப்பட்டதனால் அவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்று சொல்கிறீர்கள்.
இரா.சீனிவாசன்