திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பம் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு லட்சம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு ஆட்களை சேர்ப்பதற்காக மாட்டுக்கு புல்லை காட்டி வரவழைப்பது போன்று நலத்திட்ட உதவிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் வழங்குகிறார் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளும் இதை தருகிறோம் அதை தருகிறோம் வாருங்கள் என மக்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி அழைத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பயனாளிகளை அழைத்து வருவதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆர்டிஓ அலுவலகம் மூலமாக நான் இருக்கும்
மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் பொதுக்கூட்டத்திற்கு பிரியாணி தருகிறோம் குவாட்டர் தருகிறோம் என்பது போல பட்டா தருகிறோம் நிதி உதவி வழங்குகிறோம் உபகரணங்கள் தருகிறோம் என மக்களை ஏமாற்றி கூட்டத்தை சேர்க்கின்றனர்.
புனித வெள்ளி நாளில் விழாவை நடத்துகிறீர்களே நாங்கள் எப்படி வருவது என்ற கேள்வியை கிருத்துவ மதத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவால் கிருத்துவ மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத போதகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் கடந்த ஒரு மாதமாக வருவாய்த்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் அன்றாட பணிகளில் நிறுத்திவிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக பயனாளிகள் தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு துறையும் தங்களால் எவ்வளவு பயனாளிகளை கூட்டத்திற்கு கொண்டுவர முடியுமோ அதை தயார் செய்வதற்காகவே கடந்த இரண்டு மாத காலமாக தொடர் கூட்டங்கள், அதன் தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களும் பயனளிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பயனாளிகளை அழைத்து வருவதற்காக மாவட்ட ஆட்சியர் நோ பிரதாப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தற்போது கல்லூரிகள் பள்ளிகள் விடுமுறை இருப்பதால் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் 400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த கூட்டத்துக்கு பயனாளிகளை அழித்து வருவதற்காக, பொது மக்களை அழைத்து வருவதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இம்மா மாவட்ட ஆர்டிஓ போக்குவரத்து துறை அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக வாகனங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதே போன்று ஒவ்வொரு துறையும் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிராம சபையில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர் கனவு இல்லம் 300 பேர், விதமாக 14 ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்டு அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று மாவட்ட ஊராட்சி முகமையின் சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்களை அழைத்து வருவதற்காக ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று பெண்களை கூட்டத்துக்கு ஆள் பிடிப்பதற்காக தொடர்ந்து ஒரு மாதமாக முயற்சித்து வருகின்றனர்
அதே போன்று கூட்டுறவுத்துறை, பேரூராட்சி, சமூக நலத்துறை, ஆதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் பயனாளிகளை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களும் அரைகுறையாக தேர்வு செய்யப்பட்டவர்களும் கூட்டத்தின் சேர்ப்பதற்காகவே நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்டுகின்ற முதன்மை மாவட்டமாக விளங்க வேண்டும் என்று நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் முயற்ச நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து செயல்பாடுகளின் நிறுத்திவிட்டு முதல்வர், துணை முதல்வர் நற்சான்று பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கூட்டத்தை கூட்டுகின்ற அளவில் நலத்திட்ட உதவிகள் பெரிய அளவில் பயன்பெறுகின்ற வகையில் இலவச வீட்டுமனை வழங்குகின்ற பெரிய திட்டத்தை மாவட்டத்தில் 70 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை இலவச வீட்டு மனை வழங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ளார்.
தேர்தலை முன்னிறுத்துகின்ற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் பெரிய அளவில் பொதுக்கூட்டமாக நடத்துகின்ற அளவில் மாவட்ட நிர்வாகம் கட்சியை ஒருங்கிணைந்து ஒரு கூட்டத்தை ஆண்டார்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே மிகப்பெரிய மூன்று பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை பெய்த கனமழையில் முதல்வருக்காக அமைக்கப்படும் மேடை சேரும் சகதியாக மாறிவிட்டது.
விழா மேடை அருகே மழை நீர் தேங்கி கிடந்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி அளித்துள்ள அனைத்து சவுடு மண் குவாரி குத்தகைதாரர்களை அழைத்து உடனடியாக தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி நூற்றுக்கணக்கான லாரிகளில் சவுடு மண் எடுத்து வந்து கொட்டி சீர் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக எவ்வித நலத்திட்ட உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
முதலமைச்சர் தலைமையில் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இலவச பட்டா என்ற திட்டம் இந்த மாவட்டத்தில் 75,000 பேருக்கு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி வட்டாட்சியர்கள் இரவு பகலாக வேலை செய்துள்ளனர்.
வருவாய்த்துறை த கடந்த இரண்டு மாதமாக கிராமங்களில் முகாமிட்டும் ஆய்வு மேற்கொண்டும் பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
பயனாளிகளை முழுமையாக சேர்த்து தேர்வு செய்யாததால் பயனாளிகள் குறைந்த அளவில்தான் பட்டா வழங்குகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று அனைத்து துறைகளிலும் பயளாளிகள் தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ,மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு வாரமும் பயனளிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்தும் ஒருங்கிணைத்து ஏற்கனவே வழங்கியதும் தற்போது வழங்கியதும் சேர்த்து பெரிய எண்ணிக்கையை பயனாளிகளாக தேர்வு செய்ததாக கணக்கிடப்பட்டுள்ளது .
ஆயிரக்கணக்கில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்டுகின்ற ஒரு யுத்தியை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று திமுக கட்சிக்காரர்களும் முடிந்தளவில் வசூல் ராஜாக மாவட்ட அமைச்சர் சா.மு.நாசர் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தகுதிக்கேற்ப ஏற்ப கெடுபிடி செய்து வசூலித்து வருகிறார்.
தமிழகத்திலேயே வசூல்ராஜாவாக திருவள்ளூர் மாவட்ட அமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என கட்சியினரே புலம்புகின்றனர்.
தற்போது நேற்று பெய்த மழையில் ஆழ்ந்தார்க் குப்பத்தில் சேரும் சகதிகமாக இருக்கும் இடத்தை மண் பரப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைக்காக மண் அள்ளப்படும் பகுதிகளிலிருந்து தனியார் வாகனங்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான வாகனங்களை ஏற்பாடு செய்து மாவட்ட நிர்வாகம் சாலைக்காக இருந்த மண்ணை எடுத்துச் சென்று விழா இடத்தில் நிரப்பி வருகின்றனர்.
முதன்முதலாக இந்த திட்டத்தை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
முதலமைச்சரின் தேதி மாற்றத்திற்காக 18-ம் தேதி புனித வெள்ளி அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நாளில் இந்த நலத்திட்டங்கள் முதலமைச்சர் துவக்குகின்றார்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் புனித வெள்ளி அன்று ஆலயத்துக்கு செல்வதும், துக்கநாளாக கடைபிடித்து வருகின்றனர்.
மகளிர் உரிமை திட்டம் உங்களுக்கு கிடைக்கப் பெற வேண்டும் என்றால் அதே போன்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன்கள், நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் எனில் அவசியம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தி பெண்களை திரளாக திரட்ட வேண்டும் என்று அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் முகாம் இட்டு செயல்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் குறிப்பாக ஊரக வளர்ச்சி முகமை, ஆவடி மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, வேளாண்மை விற்பனை மையம் மற்றும் மேலாண்மை வணிகத்துறை, சுகாதாரத்துறை ஆரணி ஆறு, கொசுத்தலை ஆறு கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிராவிட நலத்துறை, தாட்கோ, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நில எடுப்பு, நெடுஞ்சாலைகள், பொதுப்பணித்துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஆக மொத்தம் 17 துறைகள் மூலமாக ரூ. 420 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக புள்ளிவிவரம் மாவட்ட நிர்வாகம் கொடுத்துள்ளது.
தமிழகத்திலேயே மோசமான மாவட்ட வருவாய் அலுவலகமாக திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதை மாவட்ட மக்கள் அனைவருக்கும் நன்கு அறிவர். ஆயிரக்கணக்கான கோப்புகள் வருவாய்த்துறை அலுவலகத்தில் தேங்கி கிடக்கின்றன.
பட்டா மாறுதல், பட்டாவுக்காக ஏழை மக்கள் கோரிய விண்ணப்பங்கள், நில தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கடந்த ஒன்றரை வருடங்களாக மாவட்ட வருவாய் அலுவலர் கிடைப்பில் போட்டுவிட்டு, நன்செய் நிலங்களை புன்செய் நிலங்களாக மாற்றுவதிலேயே தொழிலாக கொண்டு வருகிறார்.
கடந்த ஒன்றரை வருடங்களாக ஆதிராவிட நலத்துறையில் நிலம் வாங்கி இதுவரைக்கும் பட்டா யாருக்கும் வழங்கப்படவில்லை.
நார்த்தவாடா பகுதியில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக நிலம் வாங்கியும் இதுவரைக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
இதே போன்று பிற்பட்டோர் நலத்துறையில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஏற்கனவே பட்டா வழங்கியதை மீண்டும் பட்டா வழங்கியது போன்று ஆவணங்களை தயார் செய்தும் ஏற்கனவே வழங்கப்பட்ட பயனாளிகள் எல்லாம் மீண்டும் தற்போது வழங்குவது போன்று பதிவேடுகளை உருவாக்கியும் சான்றிதழ் உருவாக்கியும் முதல்வர் வருகைக்காக தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையை கூட்டுகின்ற வகையில் மிகப்பெரிய அளவில் மாவட்டத்தில் வழங்கியது போன்று பிற மாவட்டங்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லட்சக்கணக்கில் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றோம் என்ற ஒரு மாயையை தோற்றத்தை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தை துவக்கிய தமிழக அரசு இம் மாவட்டத்தில் இன்று வரை யாருக்கும் உத்தரவு வழங்கப்படவில்லை. கலைஞர் கனவு இல்ல திட்டம் கனவு இல்ல திட்டமாகவே பயனாளிகளுக்கு தோன்றுகிறது.
எந்த ஊராட்சியிலும் கனவு இல்ல திட்டம் அடிமட்ட லெவல் கூட எங்கேயும் எழும்பவில்லை. கானல் நீராக பெயளவிலேயே செயல்பட்டு வருகின்றது .
இந்த மாவட்டத்தில் இன்றளவில் கனவு இல்ல திட்ட கலைஞர் கனவுகள் இல்ல திட்டம் எங்கும் இதுவரையும் துவக்கப்படவில்லை.
திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையிலே செயல்பட்டு வருகிறது..
இம் மாவட்டத்தை பொறுத்தவரை நூதன முறையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவின் காரணமாக அனைத்து கிராமங்களிலும் சாரைசாரையாகக பெண்கள் கூட்டம் ஈ சேவை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பம் செய்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் பொய்யான வாக்குறுதி அளித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டால் தான் உங்களுக்கு உரிமை தொகை கிடைக்கும் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
வலுக்கட்டாயமாக பெண்கள் அழைத்து வர நூதன முறையில் மாவட்ட வருவாய்த்துறை கானல் நீர் திட்டத்தை செயல்படுத்துகின்றோம் என்ற பொய் வாக்குறுதியின் அடிப்படையில் மகளிர் கட்டாயப்படுத்தி அழைத்து வருகின்றன
இதே போன்று மாவட்ட ஊராட்சி ஊராட்சி முகமயில் மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுக்கின்ற வகையில் கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் மகளிர் குழுக்கள் முறையாக மாவட்ட ஊராட்சி மகிமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு கடன் தொகை பெற்று தொழில் முனைந்த தொழில் புரிந்தனர் தற்போது வங்கிகளிலும் சரி மாவட்ட நிர்வாகத்திற்கு முறையாக மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்படாததால் இந்த குழுக்கள் முடங்கிப் போய் கிடைக்கின்றது மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுக்கின்றோம் அனைவரும் கலந்து கொண்டு கலந்து கொண்டால் தான் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை மறைமுகமாக கட்டாயப்படுத்தி ஒவ்வொரு ஒன்றிய அலுவலகங்கள் மூலமாக மகளிர் குழுக்களுக்கு அழைப்பு விட்டது மட்டுமில்லாமல் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருகின்றோம். கண்டிப்பாக கலந்து கொண்டால் தான் உங்களுக்கு கடன் தொகை கிடைக்கும் மகளிர் குழுக்களுக்கு என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான கோனார் திரட்டுகின்ற வேலையில் மாவட்ட ஊராட்சி முகமை செயல்பட்டு வருகின்றது.
மாவட்ட கூட்டுறவுத் துறையின் மூலமாக மாவட்ட கூட்டுறவுத் துறையின் மூலமாக கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு விற்பனையாளர்கள் கட்டுமானர்கள் இன்று நடத்தப்பட்டது இன்று வரை அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை
கானல் நீர் போன்று இப்போது வரும் அப்போது வரும் என்று கடந்த ஒரு வருடமாக இழுத்துக் கொண்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் கூட்டுறவு துறையின் மூலமாக கடன் வழங்குகின்றோம் மீண்டும் வேலை வாய்ப்பு வழங்குகின்றோம். தற்போது இந்த சூழ்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் விண்ணப்பித்தவர்களுக்கு யூனியன் மூலமாக தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு வளர்ந்து கொண்டோம் வழங்குகிறோம் என்று கட்சிக்காரர் மத்தியிலும் கிராம மக்களுடைய மத்தியிலும் பரப்பி அதன் மூலமாக மக்களை திரட்டுகின்றனர் தற்போது இந்த மாவட்ட நிர்வாகம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தும் நடைபெறாத திட்டங்களை குறித்து எடுத்துக் கூறியும் மக்களை எவ்வாறு திரட்டுகின்ற என்ற வகையில் ஆலோசனை நடத்தி அதன் மூலமாக மாயைத் தோட்டத்தை உருவாக்கி மக்களை கட்டாயப்படுத்தி இந்த கூட்டத்துக்கு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்து இல்லங்கள் தோழி வாகனங்களை அமைத்து அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நேற்று பெய்த மழையின் காரணமாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இடத்தில்
தண்ணீர் திடீரென்று பெய்த மழையால் தண்ணீர் தேங்கி சேரும் சக அதிகமாக குளம் போல் காட்சியளித்தது.
இதை உடனடியாக அப்புறப்படுத்த நெடுஞ்சாலைக்காக வழங்கப்படும் மண் ஆட்சியர் ஆணையின் பேரில் அனைத்து குவாரி உரிமைக்காரர்களும் கட்டாயப்படுத்தி மாவட்டத்தின் சார்பாக லாரிகள் மூலம் மண் கொட்டப்பட்டு செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் இந்த ஒப்பந்தக்காரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
தங்களை கட்டாயப்படுத்தி மண்ணை எடுத்துச் சென்றதுக்காக பெருமளவு இழப்பு ஏற்பட்டதாக புலம்பி வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் விடுமுறை நாட்களில் ஏழைகளை மக்களை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து முதலமைச்சரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தி அழைத்து வரும் மாவட்ட நிர்வாக மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலருக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆத்தூர் தாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முதலமைச்சர் வருகை 19ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. பிறகு முதலமைச்சரின் வேறு ஒரு நிகழ்ச்சி கலந்து கொள்வதாக, அமைச்சர்கள் கூட்டம் நடத்துவதற்காக முன்கூட்டியே 18 ஆம் தேதி தேதி அறிவிக்கப்பட்டது.
அன்றும் இன்றும் என்றும் ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் வசூல்ராஜாவாக தொடர்ந்து சக்கரவர்த்தியாக செயல்பட்டு வரும் சாமு நாசருக்கு மற்றும் ஒரு ஜாக்பாட் அடித்தது. தற்போது தான் முதலமைச்சர் ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சிக்காக மும்மொழிக் கொள்கைக்காக திருவள்ளூர் திருப்பாச்சூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தார்.
அப்போதே மாவட்ட அமைச்சர் நாசர் கிளைகள் தோறும் அதிகாரிகள் மட்டுமல்லாமல் கட்சி கிளை செயலாளர்கள் முதல் மாவட்ட பொறுப்பில் அனைவரிடம் கெடுபிடி வசூல் நடத்தி வசூல்ராஜாவாக மாவட்ட முழுவதும் செயல்பட்டு இலட்சக்கணக்கில் கட்சி நிகழ்ச்சி நடத்தி அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டிக்கொண்டார்.
அதை மிஞ்சும் வகையில் தற்போது இரண்டாவது ஜாக்பாட்டாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைநகரில் நடத்தப்படாமல் பொன்னேரியில் நடத்தப்படுவது தான் மீண்டும் மற்றொரு ஜாக்பாட் அடித்துள்ளது.
அதன் பேரில் இந்த பகுதியை விட்டுவிட்டு பொன்னேரிய தலைமை இயக்கமாகக் கொண்டு முதலமைச்சர் பெயரை சொல்லி நிகிழ்ச்சிக்காக லட்சுக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் கட்சி சார்பாக தான் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்சிக்காரர் மத்தியில் ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு ஒன்றியத்தையும் கூட்டத்தை நடத்தி அந்த கூட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் அதிகபட்ச தொகை நிர்ணயம் செய்து பாரபட்சமாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் லட்சக்கணக்கில் வசூல் செய்து மீண்டும் வசூல் சக்கரவர்த்தியாக முதலமைச்சர் நிகழ்ச்சியில் கோடிக்கணையில் வசூலித்து அதன் மூலமாக வசூல் சக்கரவர்த்தியாக விளங்குகின்றார்
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் முதலாளியிடம் கட்டாயப்படுத்தி அனைத்து வாகனங்களும் முதலமைச்சரின் வருகைக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையின் அடிப்படையில் ஆர்டிஓ மாவட்ட முழுவதும் 400 க்கும் மேற்பட்ட பேருந்துகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்திலும் கொண்டுவந்து கிராமங்கள் தோறும் இருக்கும் மேற்பட்ட வாகனங்களை அனுப்பி பயனாளிகளையும் பொதுமக்களையும் திரட்டுகின்ற ஆள் பிடிக்கின்ற வேலையை மாவட்ட நிர்வாகத்துடன் மாவட்ட போக்குவரத்து அலுவலரும் இணைந்து கடந்த ஒரு மாதமாக வாகனங்களை பிடிக்க வேண்டும் என்று வாகனங்களை அழைத்து வருகின்ற தொழிலை செய்து வருகின்றார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாவட்டம் தோறும் புகார் பெட்டி வைத்து 38 மாவட்டங்களில் மனுக்கள் வாங்கி வாங்கி பெட்டி பெட்டியாக வாங்கியதுதான் மிச்சம் .
அதேபோன்று இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தரும் முதல்வர் மு .க ஸ்டாலின், மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வரை நடைபயணமாக சென்று மீண்டும் புகார் மனுக்களை பொதுமக்களிடம் வாங்க இருக்கிறார்.
-கே.ரவிச்சந்திரன்