கடுப்பாகி போன பாமக நிறுவனர் ராமதாஸ்… தனியாக கூட்டம் நடத்திய அன்புமணி…

கடுப்பாகி போன பாமக நிறுவனர் ராமதாஸ் தனியாக கூட்டம் நடத்திய அன்புமணி..

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி இணையாக கலந்து கொண்டு பேசினார்கள். வன்னியர் சொந்தங்களின் மிகப்பெரிய எழுச்சியாக இருந்த இந்த மாநாட்டில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமூகத்திற்கு ஏதாவது சொல்வார்கள் என்று வந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

ராமதாஸின் பேச்சு சூசகமாக அன்புமணியை தாக்குவதாக அமைந்தது எல்லோரும் அறிவர். தொண்டர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்றால் உங்கள் குடும்ப சண்டைக்கு இந்த மாநாடு தேவையா? என்பது மைண்ட் வாய்ஸ் அல்ல மெயின் வாய்ஸ்லயே கேட்கிறது.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் தலைவர் பதவியை தானே எடுத்துக் கொள்வதாக கூறி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதற்கு காரணம் அன்புமணி ராமதாஸ் நடவடிக்கையை என பேசப்பட்டது. என்ன நடவடிக்கை விஜயுடன் அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்.அதை அடுத்து தலைவர் பதவி இருந்தால் தானே பேசுவாய் அதை எடுத்து விடுகிறேன் என்று அதையும் எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில் மகாபலிபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு மிகுந்த எதிர்பார்ப்போடு நடந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் ராமதாஸின் வெடிக்காத பட்டாசாகி போன ராமதாஸின் பேச்சு தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. உங்கள் குடும்ப சண்டைக்கு எங்கள் மாநாடு தான் கிடைத்ததா? என்கிற அளவிற்கு சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கினர் பாமக தொண்டர்கள். மாநாட்டிற்கு பாடுபட்டதற்காக பொறுப்பாளர்களை அழைப்பதாக காரணம் காட்டி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் அன்புமணி அத்துடன் விருந்தும் அனுசரிக்கப்பட்டது. அதன் எதிரொளியாக தான் அவசர அவசரமாக ராமதாஸ் மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் கூட்டத்தையும் ஒருங்கிணைத்தார். ராமதாஸ் மகாபலிபுரத்தில் அன்புமணி பற்றி பேசியது இங்கு விவாதிக்கப்படாமல் இல்லை. இந்த நிலையில் தான் ராமதாஸின் அறிவிப்பு அதிகமானது.

50 தொகுதிகளில் கட்டாயம் ஜெயிப்போம் இன்னும் சொல்லப்போனால் படுத்துக் கொண்டு ஜெயிப்போம் என்று ராமதாஸ் சொல்லுவதை பார்த்தால் வருகின்ற தேர்தலில் 70 சீட்டுகள் பிஜேபி, அதிமுக விடம் கேட்டு பெறுவார்கள் என்று தெரிகிறது.

ராமதாஸ் அழைத்த கூட்டத்திற்கு தைலாபுரத்திற்கு பொறுப்பாளர்கள் வரவில்லை என செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது மாநாட்டு பணி தொடர்பாக ஓய்வில் இருப்பார்கள் அதான் வர முடியவில்லை என ராமதாஸ் கரடி கதை சொல்லுவதை வந்திருந்த யாருமே நம்பாத சூழ்நிலைதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் ராமதாஸ் அதிமுக பாஜக அணியில் 80  இடங்களை கேக்க தயாராகி வருகிறார் என்பது தெரிகிறது.50 இடங்களில் வெற்றி பெறுவோம் என அவர் உறுதியாக கூறுவது என்பது சீட்டுகளை கேட்கத்தான் என்கிறார்கள் பொறுப்பாளர்கள்.

ராமதாஸ் கூட்டிய கூட்டம் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை அன்புமணியின் முக்கிய ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை சேலம் அருள் மட்டும் பங்கேற்றார் அதிலும் கூட ஒரு சந்தேகம் இருக்கிறது டாக்டர் என்ன நடத்துகிறார் என பார்த்து வர அன்புமணியால் அனுப்பப்பட்ட உளவாளியாக அருள் எம்எல்ஏ இருப்பாரோ? என ஜி கே மணி போன்றவர்களுக்கு சந்தேகம் இருக்கதான் செய்கிறது. எப்படியோ தேர்தலுக்குள் கட்சியை இரண்டு பட செய்வதில் இருவரும் போட்டி போடுவது நன்றாக தெரிகிறது இது எங்கே போய் முடியும் என்றால். ஒரு ரெண்டு பட்டால்,………… கொண்டாட்டம் என்பது போல இருக்கிறது.

  • பா.ஜோதி நரசிம்மன்