கக்கூஸ் பராமரிப்பு நிதியில் கூட கொள்ளையடிக்கும் நாமக்கல் திமுக நிர்வாகிகளை கண்டித்து விசிக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் , தோழமைக் கட்சி விசிக நிர்வாகிகளை கைது செய்ய சொல்லி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டது தான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் நடந்த கூத்து.
“எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என்பது போல” கக்கூஸ் பணத்தை கொள்ளையடித்த விவகாரம் வெளியே வந்து விட்டதே? என்ன செய்வது என்று தெரியாமல் பித்து பிடித்தது போல் சாலை மறியல் செய்த திமுக நிர்வாகிகளுக்கு , மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே .ஆர் என் ராஜேஷ்குமார் தான் உத்தரவிட்டார் என்பது தான் வெட்கக்கேடு.
சென்னை மாநகராட்சி கழிப்பறை பராமரிக்க 1200 கோடி ரூபாய் ஒதுக்கி தனியாரிடம் தாரை வாத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட விவகாரம் ஆர்டிஐ மூலம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் 3 ரூபாய் செலவுக்கு 364 ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்ட விவகாரத்தில் மாநகராட்சி உறுப்பினர்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது . இந்த ஒப்பந்தம் சுமார் 115 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது .
தலைமை எப்படி கக்கூஸ் காசில் கூட கொள்ளையடிக்கிறதோ, இந்த தலைமைக்கு கீழ் இயங்கும் நிர்வாகிகளும் கக்கூஸ் காசை விடுவதில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த சம்பவம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் கழிப்பிடம் பராமரிப்பு என்ற பெயரில் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளதாக விசிக-வினர் சமீபத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு கட்சியின் பேரூர் செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார் . மேலும் சேலம், நாமக்கல் மண்டல துணைச்செயலாளர் அரசன், மாநில வணிகர் அணி துணைச் செயலாளர் செங்குட்டுவன், வெண்ணந்தூர் செயலாளர் நடராஜன், தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் நல்வினைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டு திமுகவின் கக்கூஸ் கொள்ளை குறித்து வெட்ட வெளிச்சமாக பொதுவெளியில் ஆதாரங்களுடன் பேசினர்.
இதில் கழிப்பிடம் பராமரிக்க பெருந்தொகை (5,50,000) ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்தும், வெறும் 5000 ரூபாய்யில் வெள்ளை அடித்து விட்டு பணிகள் எதுவும் செய்யாமல், கழிப்பிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக அபகரித்த திமுக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர் .
பலமுறை மாவட்ட ஆட்சியர், மற்றும் ஊரக வளர்ச்சித் துறை , சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடம் கழிப்பிட ஊழல் சம்பந்தமாக ஆதாரங்களுடன் புகார் அளித்தும், மிகப்பெரிய அளவில் கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு வைத்து கோஷங்களை எழுப்பினர் .
மேலும் இந்த நிலையை நீடித்தால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாணியை (மலம்) கரைத்து கக்கூஸ் காசை கொள்ளை அடித்தவர்கள் மீது ஊற்றி நூதன முறையில் போராட்டம் நடைபெறும் என நிர்வாகி ஒருவர் கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், தலைமையில் திமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது .
விசிக வினர் கூறும் முறைகேடு புகாரில் உண்மை இல்லை எனவும், தனிப்பட்ட தேவைக்காக சிலர் பொய்யான புகார்களை தெரிவிப்பதாக குற்றம் சாட்டினர் . மேலும் தேவையின்றி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை ஒருமையில் பேசியதோடு அவதூறு பரப்பவர்களை கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளிடம் புதுச்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:பொது கழிப்பிட மறு சீரமைப்பில் நடந்த ஊழல், அருவருக்கத் தக்கது எனவும் , இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் , ஆனால் திமுகவின் தோழமைக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது திமுகவினர் கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டது அவமானம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பஞ்சாயத்து உள்ளாட்சி நிர்வாகமும் கூட்டு சேர்ந்து பொதுக் கழிப்பிடம் மறு சீரமைப்பு என்ற பெயரில் 7,9,10 ஆகிய வார்டுகளில் வெறும் வர்ணம் மட்டும் பூசி விட்டு அதற்கான செலவு தொகையான 5,50,000 லட்சத்தை பொய் கணக்கு காண்பித்து , கக்கூஸ் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர் .
450 குடும்பங்கள் வாழும் இந்த பகுதியில் சமுதாய கழிப்பிடத்தை பராமரிப்பதாக கூறி வெளியில் வர்ணம் மட்டும் பூசி விட்டு உள்ளே கட்டிடம் இடியும் நிலையில் கழிப்பிடத்தை விட்டு விட்டு பல லட்சத்தை மோசடி செய்த திமுக நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஊழலை தட்டி கேட்ட விசிக -வினரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இதில் சம்பந்தப்பட்ட உள்ள அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறினர் .
எது எப்படியோ கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுகவிற்கு முட்டு கொடுத்து வந்தாலும் , அவர் கட்சியைச் சார்ந்த உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள், திமுக-வின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பேசு பொருளாகவே உள்ளது .
அதைவிட விசிக-வினரை கைது செய்ய சொல்லி திமுக-வினர் சாலை மறியல் செய்தது கேலிக்கூத்தாக உள்ளது என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.
- கௌரிசங்கர்