தருமபுரி தொகுதி – திமுக..  இவர்கள்… அவர்களா…

தொண்டர்களை விட நிர்வாகிகளை விட திமுகவில் தலைவர்கள் அதிகமாக நிறைந்திருக்கும் சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று தருமபுரி! வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மண்டல செயலாளர் அமைச்சர் எ.வ.வேலு இவர்களோடு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்பியுமான ஆ.மணியும் வேகம் காட்டுகிறார்கள். இப்பொழுதே தேர்தல் வேலையில் இறங்கிவிட்டனர். ஆ.மணி மேற்படி இரண்டு அமைச்சர்களுக்கும் வேண்டப்பட்டவர் என்பது கூடுதல் தகவல்!
எம்.பி. ஆன நாள் முதலாய் மாவட்ட செயலாளர் ஆன நாள் முதலாய் ஆ.மணி, ஒவ்வொரு கட்சி கூட்டங்களின் போதும் கறி சோறு போடுகிறார் ஒன்றிய செயலாளர்கள் கடிதம் கொடுத்தால், பரிந்துரை செய்பவர்களுக்கு உடனடியாக வேலை முடித்துக்கொடுக்கிறார். ஆனாலும் சில திமுக நிர்வாகிகள் ஆ.மணிக்கு போக்கு காட்டுகின்றனர் என்கிறார் நம்மிடம் பேசிய  தருமபுரி மூத்த திமுக நிர்வாகி ஒருவர். ஆனாலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எம்எல்ஏ சீட்டு கேட்கும் ஆர்வத்தில் இருக்கின்றனர் வன்னியர் சமுதாய வாக்குகள் மெஜாரிட்டியாக இருக்கும் என்பதால் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர்.
சமீபத்தில் மாவட்ட செயலாளர் பதவியை பறிகொடுத்த தடங்கம் சுப்பிரமணி மாவட்ட செயலாளர் பதவி, எம்எல்ஏ சீட்டு இரண்டையும் எப்படியாவது வாங்கிடனும்னு ஆசையாக இருக்கிறார் இவர் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவருக்கும் வேண்டப்பட்டவர், பல நிர்வாகிகள்  தடங்கம் சுப்பிரமணிக்கு எதிராக இருக்கிறார்கள். இவருடையது பட்டும்படாமலும் தொட்டும்ட தொடாமலும் அரசியல் ஆனாலும் வரிசையில் முதல் ஆளாய் நிற்கிறார். அடுத்தவர் தருமபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் கல்வி அறிவு ரொம்ப கம்பி இவரை எம்எல்ஏ ஆக்கி தங்களுக்கு அடக்கமா வச்சிக்கணும்னு ஒரு தரப்பு விரும்புது என்கிறார் அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த உடன்பிறப்பு ஒருவர்.
டாக்டர் செந்தில்குமார் முன்னாள் எம்பி பதவி போன பிறகே தன்னுடைய சொந்த பலத்தை தெரிந்துகொண்டவர் சென்னையில் கிளினிக் வச்சி செட்டிலாகிவிட்ட டாக்டர் செந்தில்குமாரும் கேட்போர் பட்டியலில் இருப்பதாக அவருடைய ஆதரவாளர் ஒருவர் நம்மிடம் காதில் கிசு கிசுத்தார். அடுத்தவர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.எல்.காவேரி எந்த பதவி காலியா இருந்தாலும் ஒரு மனு போடுவார், ஒன்றிய செயலாளர் பதவியை வாங்கின மாதிரி எம்எல்ஏ சீட்டு வாங்கிடலாம்னு நினைக்கிறார் போல, உற்சாகம் குறையாமல் இவரும் எம்எல்ஏ சீட்டு கனவில் பந்தா பண்ணிகிட்டு இருக்கிறார். இவர்களோடு அதிமுகவிலிருந்து வந்து சமீபத்தில் ஒன்றியசெயலாளர் பதவியை பிடித்த பி.என்.பெரியண்ணன் கட்சிப்பணியில் குறைசொல்ல முடியாது திமுகவினர் பெரும்பான்மையானவர்கள் விரும்பக்கூடியவராக இருப்பார். அதிமுகவில் ஒரு பகுதி ஓட்டை வாங்கிடுவார் அந்த அளவுக்கு பி.என்.பெரியண்ணன் தகுதியானவர் என்கின்றனர் நல்லம்பள்ளி திமுகவினர்.
தருமபுரி நகரத்தை ஒட்டியுள்ள இலக்கியம்பட்டி, ஏ.ஜெட்டிஹள்ளி, தடங்கம், சோகத்தூர் உள்ளிட்ட பஞ்சாயத்து ஓட்டுக்களை வாங்கினால் போதும் உதயசூரியன் தாராளமாய் உதிக்கும் ஆனா தருமபுரி நகரத்தை நம்பமுடியாது திமுக ஓட்டு சிதறிவிட்டது என்கிறார் நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற காவலர் ஒருவர். முன்னாள் நகர செயலாளர் தங்கராஜ் சமூக வலைதளங்களில் நடப்பு அரசியலை கொஞ்சம் காரசாரமாக பதிவிட்டு அதிகாரத்தில் இருப்பவர்களை அலற விடுபவர் நானும் எம்எல்ஏ சீட் கேட்பேன் என்கிறார். திமுக ஆட்சி நடக்குது கட்சிக்காரன் எத்தனை வேலை செஞ்சி இருக்கான்? சொல்லமுடியுமா கட்சியையும் கட்சிக்காரனையும் காப்பாத்தனும் அதுக்குத்தான் கேட்போர் பட்டியல்ல நானும் வரிசையில் நிற்கிறேன் என்கிறார்.
அரசு ஊழியர்கள் வாக்குகள் தருமபுரி தொகுதியில் அதிகம்! அறுபத்தி ஐந்து சதவிதம் பேராம் கட்சி யாரை நிறுத்தினாலும் ஜெயிக்க வைப்பது என் கடமை என்று மாவட்டம் ஆ.மணி தனி ரூட்டில் பயணம் செய்தாலும், வழக்கம்போல உள்குத்து வேலை செய்ய, சீட்டு கிடைக்காதவர்கள் காத்துக்கிடக்கிறார்கள். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஏமாற்றினாலும், மண்டல செயலாளர் எ.வ.வேலுவை ஏமாற்ற முடியாது பணம் செலவு செய்வதில் காட்டும் தாராளம் கட்சியினரையும் அரவணைத்துப் போவதில் அக்கறை காட்டுபவர் ரொம்ப உஷார் பார்ட்டி பார்க்கலாம். அனைவரையும் பென் டீமும் உளவுத்துறையும் கண்காணிக்கிறது என்பது கூடுதல் தகவல். தொகுதியில் ஒருவருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. கட்சியும் உதயசூரியன் சின்னமும் கூட்டணி பலமும் பளிச்சினு தெரியுது.
நம்முடைய பார்வை புதிய வேட்பாளரை எதிர்பார்க்கின்றனர் தகடூர் உடன்பிறப்புகள்.

– இ.பட்டத்து இளவரசன்