ஷேர்மார்க்கெட்… ரூ 1 கோடியே  88 லட்சம் மோசடி… இது ஆவடியில்

அப்பாவி பொது மக்களையும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அதிக லாபத்திற்கு எப்படி எல்லாம் இழக்கலாம் என்ற நிலையில் மக்கள் இருக்க இதற்கென தனியாக ரூம் போட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பலிருக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை சுளுக்கு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

என்ன செய்வது திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை எப்படி ஒழிக்க முடியும். இது பற்றிய சுவாரசியமான கதை விவரம் வருமாறு – தணிகைவேல் வயது 43. தகப்பனார் பெயர் பன்னீர்செல்வம்.இவர் சென்னை திருமுல்லைவாயல் ஸ்ரீ நகர் காலனி பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இவர் தனக்கு தெரிந்த சிவசங்கர் என்பவர் சொந்தமாக நடத்தி வரும் கே. பி. செந்தூர் ஹோம்ஸ் ஹாஸ்பிடல் ரோடு சோழபுரம் திருமுல்லைவாயில் என்ற இடத்தில் விருட்சம் வெல்த் மேனேஜ்மென்ட் ( டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் மணி எக்சேஞ்ச் ரியல் எஸ்டேட் அரிசி மற்றும் தேங்காய் டிரேடிங் ஷேர் மார்க்கெட்) மற்று ம் ப்ரொபைடைன்    யீஜ் போன்ற நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் தங்களது நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அதை வணிகம் செய்து அதில் வருகின்ற லாபத்தில் 5 சதவிகிதம்  தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி ய தின் பேரில் தணிகைவேல் தனது சகோதரர் ரவிக்குமார் மற்றும் தனது நண்பர்களான மணிமேகலை விஜயகுமார் தாமோதரன் பல தேதிகளில் சிவசங்கர் அவரது மனைவி மணிமேகலை வித்யா  மற்றும் அலுவலக த்தில் பணிபுரியும் ராஜீவ் காந்தி பிரியங்கா ராகுன்யா உஷா ஆ கி யோ ர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஆக மொத்தம் ரூபாய் 2 கோடியே 63 லட்சத்து 45 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதில் ரூ 74 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை திரும்ப கொடுத்ததாகவும் மீதமுள்ள பணத்தை ரூ 1 கோ யே 88 லட்சத்து 90 ஆயிரம்  பணத்தை திரும்ப கொடுக்காமல் அதற்கு ஈடாக அனைவருக்கும் 2024 ஆம் வருடம் டிசம்பர் மாதம் காசோலைகளை வழங்கியதாகவும் கொஞ்சம் பணத்தை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகை மாதம்தோறும் கொடுப்பதாக கூறி இது நாள் வரை கொடுக்காமல் அலை கழித்து வருவதாகவும் பணம் கேட்டு அலுவலகம் சென்றால் குற்றவாளிகள் அடியாட் க்களை வைத்து குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். பாதிக்கப்பட்ட எங்களுக்கு மீட்டு தர ஆவடி மாநகர காவல் ஆணையாளர் கி. சங்கர் அவர்களுக்கு கொடுத்த புகார் மனுவின் மீது நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொண்டதின் பேரில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டார். இவ்வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் குற்றவாளி சிவசங்கர் வயது 43. தகப்பனார் பெயர் சேகர். குமரகுரு அப்பார்ட்மெண்ட். பட்டம்மாள் தெரு அம்பத்தூர் சென்னை.2. ராஜீவ் காந்தி வயது 40. தகப்பனார் பெயர் சேகர். 2 வது மெயின் ரோடு. ஜோதி நகர் விரிவாக்கம். அண்ணனூர். சென்னை. ஆகிய இரண்டு குற்றவாளிகளையும் அதிரடியாக நைலான் கயிறு மூலம் கைது செய்யப்பட்டனர்.

– விஜய் ஈஸ்வரபாண்டி