நாலாந்தர பேச்சு… ஒரே மேடையில் விவாதிக்க தயாரா…? – முதல்வர் ஸ்டாலினுக்கு மாஜி ஆர்பி உதயகுமார் சவால்

மதுரை புறநகர்  மேற்கு மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரந்தாங்கி,
 பாறைப்பட்டி கோடாங்கி பட்டி, சேந்தமங்கலம்,  66 மேட்டுப்பட்டி , சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, அலங்காநல்லூர் ஒன்றியச்  செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா , மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் . ஆலோசனைக் கூட்டத்தில்,  கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பூத் வாரியாக ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்
 தொடர்ந்து,  செய்தியாளர்களை சந்தித்த அவர் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எனக்கு எதிரிகளே இல்லை என சொல்ல மாட்டேன் என,  ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து நாலாந்தர பேச்சு பேசி உள்ளதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் ஏன் 8 கோடி தமிழர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் நாலாந்தர பேச்சு பேச எங்களுக்கும் தெரியும் ஒரே மேடை போட்டு நேருக்கு நேர் பேச தயாரா ஸ்டாலின் அவர்களே என, முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டார்.
 தொடர்ந்து பேசிய, அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்த என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், எங்கள் உயிரினும் மேலான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை
 தரம் தாழ்ந்து பேசுவது எந்த தொண்டனும் மட்டுமல்ல எட்டு கோடி தமிழர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு எப்படி உங்க கட்சி கொடி சின்னம் உயிர் என்று பேசியிருக்கிறீர்களோ
அதே போல் தான் எங்களுக்கும் கட்சி கொடி சின்னம் என்பது எங்களின் உயிர் உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தாள் தக்காளி சட்னியா இது என்ன நியாயம் ,புரட்சித் தமிழர் எடப்பாடி யார் என்பது மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர் அடுத்த வருடம் முதலமைச்சராக வரக் கூடியவர்.
 காலை முதல் ஒவ்வொரு கிராமமாக செல்கிறோம் எவ்வாறு காத்திருக்கிறார்கள் இதைப்போல் திமுகவில் வரச் சொல்லுங்கள் பார்ப்போம் .
மகளிர் இலவச பேருந்து என புதிய பஸ்சை அனுப்பி இருக்கிறார்கள். ஒரு பேருந்தில் ஐந்து பேர் தான் செல்கிறார்கள் இன்று ஆட்சி அதிகாரம் அவரிடம் இருக்கிறது அதற்காக எது  வேண்டுமானாலும் பேசலாமா கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று சொல்ல மாட்டாராம்.
 இது எப்படின்னா கற்பை பற்றி பேசிவிட்டு நான் கற்பை பற்றி சொல்ல மாட்டேன் நான் யோக்கியன் அப்படின்ற மாதிரி இன்று நீங்கள் பேசுவது உள்ளது .  ஒன்று நல்லா தெரிகிறது , ஸ்டாலின் அவர்கள்  விரக்தியில் இருக்கிறார் . பயத்தில் இருக்கிறார் நடுக்கத்தில் இருக்கிறார்.
 நம்ம ஆட்சி இன்னும் ஆறு மாசத்தில் ஆயுட்காலம் முடிந்து போகுமே அப்படின்ற ஏக்கத்துல இருக்கிறார். அவர் பேச்சில் தெள்ளத் தெளிவா நடுக்கம் தெரிகிறது.  ஆகவே, திமுக அரசின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதமே இந்த நடுக்கத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி கொட்டுகிறார்.
ஸ்டாலினுக்கு என்ன பொறாமை வருகிறது? என்றால்,  கருணாநிதி மகனாகப் பிறந்து நாலு வருடத்தில் நாம் சாதிக்க முடியாததை எடப்பாடி ஏற்கனவே சாதித்து விட்டாரே இன்று மக்கள் எல்லாம் நம் மீது கோபமாக இருக்காங்களே உளவுத்துறையில் அவருக்கு தகவல் போகுமில்ல நிலவரம் அவருக்குப் போகும் இல்ல நான்கரை ஆண்டுகள் இவ்வளவு விளம்பரம் செய்கிறோம் இவ்வளவு விளம்பர வெளிச்சத்திலும் நமது முகம் இருட்டா தெரியுதே அப்படின்னு அவருக்கு கவலை.
 விளம்பரமே இல்லாத விவசாயி முதலமைச்சர் திட்டங்கள் மூலமாவே மக்களின் மனதில் நிறைந்து இருக்காறே நாலரை வருஷம் தமிழ்நாட்டில் அலை வீசுது என்று சொல்றீங்களே அதுபோல் ,
ஸ்டாலின் எதிர்ப்பு அலை மு க ஸ்டாலின் எதிர்ப்பு அலை வீசுகிறது இந்த எதிர்ப்பு அலைகளில் திமுக அரசுக்கு முடிவு கட்ட போறாங்க வாக்காளர் பெருமக்கள்  எடப்பாடியாரின்
ஆதரவு அழை வீச துவங்கி இருக்கிறது. காலம் இன்றைக்கு கனிந்து வந்திருக்கிறது எடப்பாடியாரின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத அவரின் நாளாந்தர பேச்சு. இதை உடனடியாக நிறுத்தாமல் தடுத்து நிறுத்துகின்ற வகையிலே அவருடைய அடுத்த கட்ட பேச்சு அமைய வேண்டும்
 எச்சரிக்கையாக சொல்கிறோம் . முத்துவேல் கருணாநிதி மகனாகிய ஸ்டாலின் அவர்களே நாளாந்தர பேச்சு பேசுவதற்கு ஒரே மேடை போடுங்கள் நாங்களும் வருகிறோம் நீங்களும் வாருங்கள் பேசிப் பார்ப்போம் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம் எந்த தரத்தில் வேண்டுமானாலும் பேசுவோம் ஸ்டாலின் அவர்களே தயாரா என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்

இவ்வாறு பேசினார் .

  • நா.ரவிச்சந்திரன்