எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்தார். பின்னர்
அ திமுகவில்தொடர்ந்து வந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் ஈபிஎஸ். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் எப்படி பதவிக்கு வந்தார், என்னவெல்லாம் செய்தார் என கூட இருந்தவர்களே கடும் விமர்சனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது
இது குறித்து ஆளும் கட்சியான திமுக அவ்வப்போது கடும் விமர்சனம் செய்வதை மறக்க முடியாத. குறிப்பாக
தமிழக மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார்.எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.ப்படித் தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பாஜகவிடம் கூட்டணி இல்லை என்று கூறி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் திமுக கூட்டணிக்குச் சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழக மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல என முரசொலி வெளுத்து வாங்கியது.இது ஒருபுறம் இருக்க அவர் மீது கட்சியினர் நம்பிக்கை இழந்து விட்டனர்.
குறிப்பாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த நாள் முதல் அது ஒரு நாடகம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு ஒரு நாடகம்’ என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை போலவே எடப்பாடி தொடர்ந்து நடந்துகொள்வதும் கட்சிக்குள் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் நாடாளுமன்றத் தேர்தலை தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் துணையுடன் அதிமுக எதிர் கொண்டது. ஆனால் தேர்தலை பெரிதாக எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கொள்ளவில்லை இதற்கு காரணம் வெற்றிபெற்ற பிறகு யாருடன் ஆதரவு என தெளிவான நிலைப்பாடு இல்லை . அவரின் ஒரே எண்ணமே சட்டசபை தேர்தல்தான். அதனால் பெயரளவுக்கு தேர்தல் பிரசாரம் செய்தார். அதில் ஏகப்பட்ட குளறுபடிகள். முன்னணி தலைவர்கள் அதிருப்தி, தொண்டர்கள் சரியாக வேலை பார்க்காதது. பல இடங்களில் பாஜக, திமுகவுக்கு ஆதரவு நிலையில் கட்சியினர் களம் இறங்கியது என அதிக பிரச்னையால் அதிமுக தவித்து வருகிறது. ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வெறுப்பு அடைந்து கட்சியினர் தேர்தல் பணிகளில் ஒழுங்காகப் பணியாற்றவில்லை . யாருமே சொல்வதைக் கேட்கவில்லைஎன பல புகார்கள். இதை கண்டு நொந்துபோன எடப்பாடி கடந்த வாரத்தில் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார். ஒழுங்காக பணம் செலவழிக்கவில்லை என பலர் நேராகவே புகார் தெரிவித்தனர். எனவே
நிர்வாகிகள், கணக்கு வழக்குகளில் குழப்பியவர்கள் என லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. அதன்பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் , எடப்பாடியின் பேச்சைமூத்த நிர்வாகிகள் யாரும் கேட்கவில்லை. இந்த தேர்தலில் அதிமுக பெறப்போகும் வாக்கு சதவீதம் என்ன என்பதை தமிழகமே எதிர்நோக்கியிருக் கிறது.இதே ஜெயலலிதா இருந்தால் இதுபோல செயல்பட்டவர்களை உடனே கட்டம் கட்டி விடுவார். ஆனால் எடப்படியால் அப்படி செய்ய முடியவில்லை. காரணம் கண் கொத்தி பாம்பாக சசிகலா, தினகரன் ஒருபக்கம். பாஜக மறுபக்கம் என இருப்பதுதான். இதில் பெரும் பிரச்னை என்னவெனில் வன்னியர் சமூக அமைச்சர்கள் சிவி சண்முகம், முனுசாமி போன்றவர்களை ஓரம் கட்டிவிட்டு கட்சியை முழுக்க முழுக்க கொங்கு வேளாளர்கள் கையில் எடப்பாடி கொடுத்துவிட்டார் என்றே கூறலாம். கூட்டணியில் ராமதாசை சேர்க்க அக்கறை காட்டவில்லை. பாஜகவின் பி டீம் போலவே எடப்பாடி நடந்து கொள்வதாக சந்தேகம் வலுத்து வருகிறது. இதை கணித்து இப்போது சசிகலா கட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் போன்றவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் பாஜகவின் நேரடி தொடர்பில் உள்ளனர். அவர்களின் அசைன் மெண்டை பின்பற்றி வருகிறார்கள் என கூறப்படுகிறது.
இப்போது பிரச்சனை என்னவெனில் கட்சிக்கு பலரும் துரோகம் செய்து விட்டனர் என எடப்பாடி பகிரங்கமாகவே கூறி வருகிறார். ஆனால் அவர் செய்யாத துரோகமா என ரத்தங்கள் தங்களுக்கு உள்ளேயே சிரித்து கொள்கிறார்கள்.முதல் துரோகம் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றவர் அவரையே கட்சியில் இருந்து நீக்கினார். கூட இருந்த பன்னீர் செல்வதை கைக்குள் வைக்காமல் நீக்கினார். இன்னும் அவர் செய்த துரோகங்கள் ஏராளம். இப்படி இருக்கும்போது துரோகத்தை பற்றி எடப்பாடி பேசலாமா என கட்சியினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கட்சியைக் கட்டுக்குள் வைக்க முடியாத நிலைக்கு அவரை ஆளாக்கியிருக்கிறது. யாரையும் கண்டிக்க முடியாத நிலையில் பழனிசாமி இருக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால், அ.தி.மு.க எனும் ஆலமரம் விரைவில் சரியும் என தொண்டர்கள் குமுறி வருகிறார்கள்.
இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் பேசும்போது, பதவி வழங்கிய சசிகலாவிற்கே, துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.விவசாயிகளுக்குத் துரோகம், நெசவாளர்களுக்குத் துரோகம், வியாபாரிகளுக்குத் துரோகம், மீனவர்களுக்குத் துரோகம், பிற்படுத்தப்பட்டோருக்குத் துரோகம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் துரோகம், பட்டியலின மக்களுக்குத் துரோகம், சிறுபான்மையினருக்குத் துரோகம் என்று அனைவருக்கும் துரோக முதல்வராக பழனிசாமி ஆகிவிட்டார் . ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொலை செய்ததைச் சொல்வதா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தையையும் மகனையும் அடித்தே கொன்ற அநியாயத்தைச் சொல்வதா?. சாத்தான் குளம் தந்தை, மகன் கொலையில் மக்களுக்கு துரோகம் செய்தவர் என பல குற்றச்சாட்டுகளை பட்டியலி ட்டார்.இதேபோல பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா என பலரும் துரோக சாமி என எடப்பாடிக்கு பட்டம் சூட்டியுள்ள நிலையில் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
-அருண்குமார்
துரோகசாமியான எடப்பாடி பழனிசாமி!தொண்டர்கள், முன்னணி தலைவர்கள் குமுறல்
