காவலரை பாட்டிலால் குத்திய போதை ஆசாமி… கடலூர் பயங்கரம்

காவலரை பாட்டிலால் குத்திய போதை ஆசாமி…
கடலூர் பயங்கரம்…

மது போதையில் தகராறில் ஈடுபட்ட நபரை தட்டிக் கேட்ட போலீசுக்கு பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியில் மது போதையில் இருந்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற நபர் கையில் உடைந்த மது பாட்டில் வைத்துக்கொண்டு அப்பகுதி மக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சாவடி சோதனை சாவடியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பணியில் இருந்த காவலர்கள் விநாயகமூர்த்தி மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும் மது போதையில் இருந்த நபரை கையில் இருந்த பாட்டிலை கீழே போட சொல்லி தெரிவித்தார்கள்.

இதில் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த தினேஷ்குமார் காவலர் விநாயகமூர்த்தி பாட்டிலால் குத்தி உள்ளார்.

மேலும் குத்திய நபர் கீழே விழுந்ததில் அவருக்கும் தலை அடிபட்டது.

காவலர் வினாயகமூர்த்தி மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

– முருகன்