மதிக்கதக்கவர்கள்… மதிக்க தகாதவர்கள்…
தருமபுரியில்தான் இந்த அவலம்?
நிருபர்கள் மத்தியில் யார் மதிக்கத்தக்க நிருபர்கள், யாரெல்லாம் தகுதி இல்லாதவர்கள், என்ற பாகுபாடு, அதிகாரிகளிடத்தில் மற்ற நிருபர்களை பற்றி புறம் பேசுவது, முக்கியமாக ஒற்றுமை இல்லாதது, தைரியமாக செய்தி வெளியிட்டால் பேரம் நடக்கவில்லை போல அதுதான் செய்தி வெளியாகியுள்ளது என புறம் பேசுவது. ஒரு பக்கம் வசூல் வேட்டையில் திரியும் நிருபர்கள். 100க்கும் 200க்கும் சண்டை போடுவது. இது போன்ற சம்பவங்களால் அதிகாரிகள் எந்த நிறுபரையும் மதிப்பதில்லை இதை வெளிப்படையாக சொன்னால் அவர்கள் மேல் படி அப்படித்தான் இருப்பார்கள் என தூற்றுவது. இது போன்ற ஏ டூ இசட் அனைத்தையும் நிருபர்கள் ஆகிய நாம் மல்லாக்க படுத்து எச்சியை மேலே துப்பினால் என்ன நடக்கும் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் இதனால் அதிகாரிகள் நம்மை மதிப்பதில்லை குறைந்தபட்சம் மாவட்டத்தில் துறை ரீதியாக எடுத்துக் கொண்டால் பிரச்சனைகள் சொல்லி மாலாது ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் ஒரு துறையைச் சார்ந்தோ அல்லது அரசியல் அமைப்பைச் சார்ந்தோ செயல்படுகின்றனர் ஒரு சிலர் மட்டுமே சமநிலையில் இருந்து வருகின்றனர். சங்கம் என்பது இருதயம் போன்றது இருதயம் துடித்தால் மட்டுமே நாம் அனைத்து உடற்கூறுகளும் செயல்படும் இருதயம் நின்று போனால் மனிதன் பிணமாக மதிக்கப்படுவான் அந்த நிலைமையில் தான் தருமபுரி மாவட்ட பத்திரிக்கையாளர்களின் நிலைமை உள்ளது. ஒரு பத்திரிக்கையாளன் விருப்பு வெறுப்பு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற நிலையை ஒதுக்கி வைத்து விட்டு சம நிலையில் நின்று நடக்கும் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே நம் கடமை அதற்கு அனைவரும் ஒரு அணியில் நின்று செயல்பட்டால் மட்டுமே நம் மரியாதை நம்மை கண்டிப்பாக தேடிவரும் இந்த ஒற்றுமைக்கு இருதயம் போன்ற ஒரு தலைவன் தேவை உடலில் எந்த உறுப்பிற்கு ரத்தம் செல்லாவிட்டாலும் அந்த உறுப்பு செயலிழந்து விடும் அதை சீர்படுத்துவதே இருதயம் போன்ற தலைவனின் கடமை அந்த தலைவன் எவராக இருந்தாலும் வரவேற்று தலைவணங்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
பரிதவிக்கும் பத்திரிக்கையாளர்கள்
பல்லை கட்டும் பிஆர்ஓ
தர்மபுரியில் அவலம்
தர்மபுரி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உள்ளனர். மாவட்ட அளவிலும், தாலுக்கா அளவிலும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து முறையான மரியாதையும் கிடைப்பதில்லை. அரசு சார்பில் கிடைக்க வேண்டியது சலுகைகளும் கிடைப்பதில்லை.
இலவச பேருந்து அட்டை வழங்குவதில் பாரபட்சம்
குரங்கு கையில் பூமாலையாய்… தர்மபுரி மாவட்டத்திற்கு, கடந்த ஆட்சியில், பாரதி பெயர் கொண்டவர் பிஆர்ஓ வாக பணியமர்த்தப்பட்டார். அப்போது தொடங்கியது இந்த அவலம். தனக்கு ஜால்ரா தட்டுபவன் தொடங்கி, சரக்கு வாங்கி தருபவன், மாமா வேலை பார்ப்பவன், வாராவாரம் ஒகேனக்கல் மீன் கொண்டு வந்தது தருபவர்களுக்கெல்லாம் பஸ் பாஸ் வழங்கினார். இதுவரை கேள்விப்படாத, முன்பின் அறியாத, இல்லாத பத்திரிகைகளில் எல்லாம் பத்திரிக்கையாளர்கள் தோன்றினார்கள். அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, இலவச பேருந்து அட்டை முதல், பல்வேறு அரசு சலுகைகள் வரை வழங்கினார் பாரதி பெயர் கொண்டவர்.
இதனால் மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையாளர்கள் அதிகம் பாதிப்படைந்தனர். பிரபல பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பணியாற்றுபவர்களுக்கு பஸ் பாஸ் வழங்காமல், போலி பத்திரிக்கையாளர்கள், ஆன்லைன் பத்திரிக்கையாளர்களுக்கு பஸ் பாஸ் வழங்கி, அவர்களின் தயவில், பல்வேறு சலுகைகளையும் வசூல் வேட்டைகளையும் நடத்தி வந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வித மரியாதையும் கிடைக்காமல் செய்தார். அப்போது முதல் இப்போது வரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக செயல்பாடுகளில், பத்திரிக்கையாளர்களுக்கு குடிநீர் மற்றும் இருக்கைகள் கூட வழங்குவதில்லை.
அவர்தான் அப்படி என்றால் அடுத்தடுத்து வந்த பிஆர்ஓ களாவது அதனை திருத்தி முறையாக செயல்படுவார்கள் என எதிர்பார்த்தால், இவர்கள்… ‘இக்கரைக்கு அக்கறை பச்சை’ என்பது போல் நடந்து கொள்கிறார்கள்.
பழைய முறையே இவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
மாவட்டத்திற்கு வரும் அமைச்சர்கள், சிறப்பு குழுக்கள் குறித்த எந்த தகவலையும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை. தனக்கு வேண்டிய சில பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தகவல்களை பகிர்கிறார். பத்திரிக்கையாளர்கள் செல்ல வாகனம், குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த ஏற்பாடுகளையும் செய்து தருவதில்லை.
அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் பத்திரிக்கையாளர்களுக்கு என அமர இடம் ஒதுக்கி தருவது கூட இல்லை. இதனால் பத்திரிகையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மூன்று மணி நேரத்திற்கு மேலாக, முப்பதுக்கு மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் நின்று கொண்டு செய்தி சேகரித்து வந்தனர். இதனைக் கண்ட விவசாயி ஒருவர், அதிகாரிகளை பார்த்து, ‘அவர்களும் மனிதர்கள் தானே, அவர்கள் உட்கார இடம் வசதி, இருக்கை வசதி ஏற்படுத்தி தரலாமே’ என கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை பார்த்தனர், மாவட்ட ஆட்சியர் பி ஆர் ஓ வை பார்த்தார், பி ஆர் ஓ ஒரு நக்கல் சிரிப்புடன் கடந்து சென்றார். இதுதான் தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்களின் இன்றைய நிலை. ஒரு சாமானிய விவசாயி, குறை சொல்ல வந்த விவசாயிக்கு தோன்றிய அக்கறை கூட, அரசு அதிகாரிகளுக்கும், பிஆர்ஓ வுக்கும் இல்லாமல் போனது வெட்கக்கேடு.
மாவட்ட ஆட்சியரின் நிகழ்ச்சிகளையும், பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை. காலையில் நடந்த நிகழ்வை, மாலையில் புகைப்படத்துடன் டெம்ப்லேட்டையும் பதிவு செய்து வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே அனுப்பி வைப்பார். தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இல்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை, என்பது போல,….
முன்பெல்லாம் முறையாக பத்திரிக்கையாளர்களின் மெயில் ஐடிக்கு உடனுக்குடன் நிகழ்ச்சி புகைப்படத்தையும், கலந்து கொண்டவர்களின் விபரங்களையும் அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்போது அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறார்கள். இதனால் செய்திகளை விரைவாகவும் விரிவாகவும் செய்தி பதிவு செய்ய முடியாமல், முக்கிய பத்திரிக்கை செய்தியாளர்கள் தடுமாறுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர்,
பி ஆர். ஓ. , இப்படி என்றால்,…
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதற்கு மேல்…
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்கு விபரங்களை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவது வழக்கம். இதன் மூலம், அந்த வழக்கு விபரங்களை கொண்டு, நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியிடுவார்கள்.
ஆனால் தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக, எந்த காவல் நிலையத்தில் இருந்தும், முதல் தகவல் அறிக்கை வெளியே செல்லக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரைம் செய்திகள், போக்ஷோ வழக்குகள் உள்ளிட்டவைகளை வெளியுலகுக்கு தெரியாமல் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.
மேலும் இத்தகைய சூழ்நிலையால் செய்தியாளர்கள் முழு தகவல்களும் தெரியாமல் செய்தி வெளியிடவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவை அனைத்தும் முக்கிய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி காரர்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு.
போலி பத்திரிகையாளர்களுக்கும், பெயர் தெரியாத பத்திரிக்கையாளர்களுக்கும் திமிஸி சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. அவர்கள் செய்தி வெளியிட்ட பிறகு, அதை பார்த்து மற்றவர்கள் செய்து வெளியிட வேண்டிய அவல நிலை தொடர்கிறது.
பிஆர்ஓ ஒருபுறம் என்றால், காவல்துறையினர் மற்றொருபுறம்.
போலி செய்தியாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கு சலுகைகளை தகவல்களையும் வழங்குகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் போலி செய்தியாளர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டி உள்ளது. முறையான செய்தியாளர்கள் 150 இருக்கும் நிலையில், சரி அளவிற்கு போலி செய்தியாளர்கள் தர்மபுரி மாவட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை, தங்கள் பக்கம் இருக்கும் தைரியத்தை பயன்படுத்திக்கொண்டு, போலி செய்தியாளர்கள், சந்துக்கடைகள் தொடங்கி டாஸ்மாக் கடைகள், பார்கள், மண் கடத்தல், மணல் கடத்தல் செய்யும் டிப்பர் லாரி ஓனர்கள் என அனைவரிடமும் மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து வருகின்றனர். இந்த போலி நிருபர்கள், காவல்துறைக்கும் சமூக விரோதிகளுக்கும் பாலமாக இருந்து, மாமுல் வசூல் செய்து தரும் பணியினை செவ்வனே செய்து வருகின்றன. இந்தப் போலி நிருபர்கள், பெரும்பாலும் காவல் நிலையத்திலோ, அல்லது காவல் நிலையத்தின் சுற்று வட்டார பகுதியிலே தான் நடமாடுவார்கள்.
இப்படி திரும்பிய திசை செய்யலாம் அவமதிப்புகளும், சலுகை யின்மையும் இருப்பதால் பிரபல பத்திரிகை மட்டும் தொலைக்காட்சிகளை சேர்ந்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், மாவட்ட ஆட்சியர் மாறினாலும் தீர்வு இல்லை, பிஆர்ஓ மாறினாலும் தீர்வு இல்லை.
பொதுமக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பத்திரிகையாளர்களிடம் முறையிடுகிறார்கள், ஆனால் பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எங்கே சென்று முறையிடுவது என தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
பத்திரிகையாளர்களுக்கு என, தர்மபுரி மாவட்டத்தில் மூன்று நான்கு சங்கங்கள் உள்ளது. ஆனால் அந்த சங்கங்கள் அனைத்தும், அரசியல் சார்பாகவும், பெயரளவுக்கும் மட்டுமே செயல்படுகின்றன.
பிரபலமான பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், சங்கங்களிலும் இணைந்து செயல்படக் கூடாது என, அந்த நிறுவனங்கள் கட்டுப்படு விதிப்பதால், அவர்கள் முன் நின்று சங்கங்களை வழிநடத்துவதில்லை. பட்டும் படாமலே செயல்படுகின்றனர். இதன் காரணமாக சிறிய அல்லது அரசியல் சார்புடைய செய்தியாளர்கள், முன் நின்று சங்கங்களை வழி நடத்துகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட், திமுக ஆதரவாளர்களாகவே உள்ளனர். நடுநிலை வகிப்பதில்லை. இதனால் அத்தகைய அரசியல் சார்புடையவர்கள் பின்னால், அனைத்து செய்தியாளர்களும் செல்ல தயங்குகின்றனர். இதன் காரணமாக பத்திரிகை சங்கங்கள் மூலமும் தங்களது வேண்டுகோளை முன்னிறுத்த முடியாமல் உள்ளனர்.
ஊர் உலக பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு ஏற்படுத்தி தரும் பத்திரிக்கையாளர்கள், தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்கள் சார்ந்த பத்திரிகை நிறுவனங்கள் கூட அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதில்லை என்பதுதான் மிகுந்த வேதனை தரக்கூடிய உண்மை.
-தகடூர் தம்பி