திருவள்ளூர்-
தொகுதியை மறந்த காங்கிரஸ் எம்பி?
ஜெயக்குமாரை நல்லவராகிய சசிகாந்த் செந்தில்…
ஐஏஎஸ் தகுதி பெற்ற சசிகாந்த் செந்திலை திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் பெருவாரியான வாக்களித்து எம்பி தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கட்சிக்காரர்களையும் தொகுதி மக்களையும் புறக்கணித்ததற்காகவும் நாடாளுமன்றத் தேர்தலில் இவருக்கு சீட்டு வழங்காததால் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்தார் இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஐஏஎஸ் தகுதி பெற்ற சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார் இவர் அதிகமான வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டார்
கடந்த முறையும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவரும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் தொடர்பு இல்லாதவர் தற்போது போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் இந்த தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர் கடந்த 10 வருடங்களாக திருவள்ளூர் நாடாளுமன்றத்திற்கு தொடர்பு இல்லாத இரண்டு காங்கிரஸ் எம்பிக்கள் வேட்பாளராக போட்டியிட்டு வேட்பாளர்களாக போட்டியிட்டு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பெற்றதுதான் இவர்கள் செய்த சாதனை வேறு ஒன்றும் சாதித்ததில்லை
கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமார் முன்னாள் எம்பி தனக்கென்று திருவள்ளூர் தொகுதியில் தலைமை இடத்தில் அலுவலகத்தை வைத்துக் கொள்ளாமல் சென்னையிலேயே அலுவலகத்தை வைத்துக்கொண்டு கட்சிக்காரர்களை சந்திக்காமல் மக்களையும் சந்திக்காமல் நடமாடும் எம்பியாக செயல்பட்டார் தொகுதி மக்களை சந்திப்பது அரிதாகிவிட்டது காங்கிரசைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தான் சாதனை இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமார் முன்னாள் எம்பி தனக்கென்று திருவள்ளூர் தொகுதியில் தலைமை இடத்தில் அலுவலகத்தை வைத்துக் கொள்ளாமல் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார் கட்சிக்காரரிடம்
தொடர்பு இல்லாமல் இருந்தார் தொகுதி மக்களை சந்திப்பதும் அரிதாகிவிட்டது ஏற்கனவே திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்பி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொகுதியில் அனுப்பும் பெற்றவர்களும் தொகுதிவாசிகளாகவும் மக்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு தொகுதியில் பணியாற்றி வந்தனர் தற்போது காங்கிரஸ் சார்பாக தேர்வு செய்யப்பட்ட இரு எம்பி களுமே தொகுதி மக்களை சந்திப்பது அரிதாகி விட்டது
கடந்த முறை திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்பிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொகுதியில் நன்கு அறிமுகமானவர்கள் தொகுதிவாசிகள் அனுபவம் பெற்றவர்கள் கட்சிக்காளர்களிடையே மக்களிடமும் தொடர்பு வைத்துக்கொண்டு தொகுதியில் பணியாற்றி வந்தனர் கடந்த பத்து வருடங்களாக காங்கிரஸ் சார்பாக தேர்வு செய்யப்பட்ட இரு எம்பி களுமே தொகுதி சேர்ந்தவர்கள் இல்லை மக்களைச் சந்திப்பதும் அரிது கடந்த முறை எம்பி ஆக இருந்த ஜெயக்குமார் தொகுதியில் காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் சோர் விளம்பரமே பேனர்களாக நாடாளுமன்ற தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டது அதேபோன்று கட்சிக்காரர்கள் இடமும் நெருங்கிய தொடர்பு இல்லாததால் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் செல்வதில்லை கலந்து கொள்வதும் இல்லை கட்சிக்காரர் மத்தியில் கடும் அதிருப்தி வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது இவருக்கு மீண்டும் சீட்டு திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் வீட்டு வழங்குவதற்கு திமுக தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் நிர்வாக மத்தியில் கடும் ஆட்சியபனை தெரிவித்தனர் இந்நிலையில் தான் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக செய்த பணிகள் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தந்தது திட்டங்கள் கொண்டு வந்தது அனைத்துமே விளம்பரங்கள் வாயிலாக நாள்தோறும் விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தார் திமுக தலைமை கூட்டணி கட்சிக்கு மீண்டும் சீட்டை தாரை வார்த்து கொடுத்தது ஏற்கனவே திமுக சார்பில் போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்து இருந்தனர் திருவள்ளூர் மாவட்ட திமுக தலைமை திமுக சார்பில் எம்பி உருவாவதைவிட கூட்டணிக்கு கொடுப்பது மறைமுகமாக தலைமைக்கு சிபாரிசு செய்தது முன்னாள் எம்பி ஜெயக்குமாருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்பதை திமுக தலைமையும் காங்கிரஸ் தலைமையும் ஒருங்கிணைந்து செயல்பட்டது தேசிய அளவில் ஜெயக்குமார் ஆதரவு பெற்று இருந்தும் முக்கிய தலைவர்கள் பரிந்துரை செய்ததும் கடைசி கட்டத்தில் அவருக்கு சீட்டு வழங்காமல் கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் ஐ ஏ எஸ் சீட்டு வழங்கப்பட்டது
இதனால் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு ஐஏஎஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் மக்களிடையே பெருத்தளவில் எதிர்பார்த்து இருந்தது இவர் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர் இருந்தாலும் தகவல் தொழில்நுட்ப குழுவை ஏற்படுத்திக் கொண்டு தனது பிரச்சாரத்தை புதுவிதமாக தொகுதியில் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றார் தென் தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் எம் பி ஆனார்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் தொகுதி மக்களிடமும் எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு கானல் நீரானது நன்றி அறிவிப்பு கூட செலுத்தாத சசிகாந்த் செந்தில் எம் பி மீண்டும் ஐஏஎஸ் போன்று தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டு தொகுதி மக்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போன்று தனது அலுவலகத்தை மாதவரம் பகுதியில் வைத்துக் கொண்டு பெயரளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் அலுவலகம் ஏற்படுத்திக் கொண்டு செயல்படாத அலுவலகமாக இன்று வரை இருந்து வருகின்றது தொகுதி மக்கள் சந்திப்பதே அரிதாகிவிட்டது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சிகளுக்கு கட்சிக் கூட்டங்களுக்கும் சரிவர கலந்து கொள்வதில்லை இந்த குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர் என்பியாக இருந்தவர் மீண்டும் ஐஏஎஸ் போன்று செயல்பட்டு வருகின்றார் இந்த பகுதியில் கட்சி வளர்வதற்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண எவ்வித முயற்சி எடுக்காமல் தனி ஒரு மனிதனாக தகவல் தொழில்நுட்ப குழுவுடன் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் இவர் தொகுதியில் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் அதிகாரிகளுடன் இன்று வரை நடத்தப்படவில்லை
கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் மாவட்ட அளவில் அடிப்படை பிரச்சனைகள் பற்றியும் இன்று வரைக்கும் தீர்வு காணப்படவில்லை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கலந்தாய்வு மேற்கொண்ட போது தலைமை மருத்துவமனையில் நிரந்தரமான தீர்வு காணப்படாத நிறை குறைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் மருத்துவர்கள் அலுவலர்கள் கொடுத்த செய்தியை கொண்டு அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவாக இருப்பதாகவும் தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக நற்சான்று வழங்கிவிட்டு சென்றார் அதன் பிறகு ஐந்து நாட்களில் வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் குழு திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனை கள ஆய்வு மேற்கொண்ட போது பல்வேறு குறைபாடுகள் அடிப்படை வசதிகள் இன்றி மோசமான நிலையில் இருப்பதை கண்டறிந்து அதன் மீது விசாரணை மேற்கொண்டு குறைபாடுகள் மீது நடவடிக்கை எடுக்க குழு தலைவர் வேல்முருகன் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார் தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் நிர்வாக சீர்கேடு இருப்பதாகவும் பகிரங்கமாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்ததில்லாமல் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் உத்தரவிட்டிருந்தார் கடந்த ஒரு வருட காலமாக எம்பி அதிகாரிகளை மட்டுமே தனி மனிதராக சந்தித்து வருகின்றார் மக்கள் கொடுக்கும் புகார்கள் கட்சிக்காரர்கள் கொடுக்கும் புகார்கள் எங்கும் செயல்பட்டதாக தெரியவில்லை
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை கோரிக்கைகளும் புகார்களும் முடங்கி போய் கிடக்கின்றது என்று காங்கிரஸ்காரர்களும் கோரிக்கைகள் கொடுத்த பொதுமக்களும் முடங்கி போய் கிடக்கின்றது தொடர்பே இல்லாத எம்பி ஆக கடந்த ஒரு வருடமாக சசிகாந்த் செந்தில் செயல்பட்டு வருகின்றார் தகவல் தொடர்பு குழுக்களுடன் வந்த தகவலே இல்லாத எம்பி ஆக இன்று செயல்படுகின்றார்.
திராவிட கட்சிகளில் எம்பி ஆக இருந்த டாக்டர் வேணுகோபால் திமுகவைச் சார்ந்த கிருஷ்ணசாமி தொகுதியிலேயே இருந்து செயல்பட்டனர் தற்போது கடந்த பத்து வருடங்களாக தொகுதியில் தொடர்பில்லாத இவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு சரி அலுவலகமும் இல்லை செயல்பாடும் இல்லை இதுதான் இன்றைய காங்கிரஸ் எம்பி நிலைமை ஐஏஎஸ் ஆக வெற்றி பெற்று எம் பி ஆன சசிகாந்த் செந்தில் மீண்டும் ஐஏஎஸ் போன்று செயல்பட்டது தான் கடந்த ஒரு வருடத்தின் சாதனையாக இருந்து வருகிறது கட்சிக்கும் பிரயோஜனம் இல்லை மக்களுக்கும் பிரயோஜனமில்லை தனக்கு மட்டுமே எம்பி பதிவு என்று தனி மனிதனாக வலம் வந்து கொண்டிருக்கும் சசிகாந்த் செந்தில் மக்கள் செயல்பாட்டிற்கு எப்போது வருவார் என்று திருவள்ளூர் நாடாளுமன்ற எதிர்நோக்குகின்றனர் தற்போது கட்சி நிர்வாகிகளாலும் தொகுதி மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட ஜெயக்குமார் தற்போது எம்பி ஆக இருக்கும் சசிகாந்த் செந்திலை விட மேலானவர் என்பதை நாடாளுமன்ற பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் எப்போது சசிகாந்த் செந்தில் அனைத்து எம்பிகளை விட தான் சிறந்தவர் என்பதை எப்போது நிரூபிப்பார் சசி காந்த் செந்திலுக்கே வெளிச்சம்
– கே.ரவிசந்திரன்