கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் சுமார் 157 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா 3 ஏக்கர் பரப்பளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தின் அருகில் ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் அவரின் இடத்திற்கு அதாவது இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அந்த இடத்திற்கு அப்பகுதி மக்கள் குடியேறினால் தனக்கு அங்கிருக்க கூடிய அந்த இடத்தில் பெரு மதிப்பு இருக்காது அதாவது வேல்யூ இருக்காது என தெரிந்துகொண்ட ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அரசு அதிகாரிகளோடு, அரசு அலுவலகத்திற்கு ஆய்வு செய்வதே போல் ஆய்வு செய்து அதற்கான முறையான ஆவணங்களும் தயார் செய்து பட்டாவை முழுமையாக (கேன்சல்) செய்து வருவாய் அலுவலகத்தில் தயார் நிலையில் இருப்பதாகவும் நமக்கு கிடைத்திருக்கிற ஒரு கூடுதல் தகவலாக இருக்கிறது.
இது எல்லாம் புரிந்து, தெரிந்துகொண்ட கொண்ட அப்பகுதி கிராம பொதுமக்கள் குறிப்பாக நேற்றைய தினம் இலவச வீட்டுமனை பட்டா உள்ள ஒரு நபர்,அந்த நிலத்திற்கு சென்று சமன் செய்வதற்காக ஜேசிபி மூலம் வேலை பார்த்து உள்ளதாக தெரிகிறது.
அப்போது அரசு அதிகாரிகள் குறுக்கிட்டு இங்கு நீங்கள் எல்லாம் வீடு கட்ட முடியாது இது அரசு அலுவலகத்திற்கு சொந்தமாக ஆகப்போகிறது, ஆகவே இந்த இடத்தில் நீதிமன்ற வளாகமும் வரப்போகிறது. எனவே இந்த இடம் உங்களுக்கு சொந்தமில்லை என தாசில்தார் சொன்னதாக தெரிகிறது.
அப்பொழுது அதிர்ச்சி அடைந்த அவர் கிராம மக்களிடையே சொல்லி இருக்கிறார். அப்போது கிராம மக்கள் அங்க இருக்கக்கூடிய இளைஞர்கள் பொதுமக்கள் என தாசில்தாரிடம் முறையிட்டு கேட்டிருக்கிறார்கள், தாசில்தார் பசுபதி நீ எப்படி என்னை கேள்வி கேட்கலாம் அரசு அதிகாரியை அவதூறா பேசலாமா என கேட்டவர்கள் மீது தியாகதுருக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதாக சொல்லப்படுகிறது.
இப்படி பொதுமக்களுக்கு சேவை செய்யும் அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்க்கு துணை போவது பெரும் அவலம் நிலை என தெரிந்துகொண்டு கொந்தளித்த கிராம பொதுமக்கள், அரசு கொடுத்த நிலத்தை இப்படி அரசு அதிகாரிகளோடு துணை நின்று ஆளுங்கட்சி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கொடுக்கும் அழுத்தும் காரணமாக இப்படி எங்கள் நிலத்தை நாங்கள் பறிகொடுத்து சாலையில் நின்று கொண்டிருக்கிறோம் எனவும், நாங்கள் இந்த வெயிலில் சாலை மறியல் நின்னு போராட்டத்திற்கு காரணமே அரசு அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், ஆளுங்கட்சி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்தியின் அவர்களைக் கண்டித்தும், அரசு வழங்கிய அந்த வீட்டுமனை, அதாவது இலவச வீட்டு மனை பட்டாவை சாலை மறியலின் போது காண்பித்தும் பிரதிவி மங்கலம் கிராம பொதுமக்கள் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டைகள் குச்சிகள் தடுத்து பிரிதிவி மங்கலத்தில் சாலை மறியல் விடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்தச் சம்பவம் காரணமாக பிரதான சாலையான அந்த சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பும், சலசலப்பும் ஏற்படுத்தியது.
எனவே ஏழை எளிய பொதுமக்களுக்கு அரசு கொடுத்த நிலத்தை அரசு அதிகாரிகளை வைத்து ஆளுகின்ற திமுக எம்எல்ஏ வசந்த கார்த்திகேயன் மீது பெரும் குற்றச்சாட்டை பிரதீப் மங்கள கிராம பொது மக்கள் வைத்துள்ளனர்.
எனவே இதுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் அப்பகுதி கிராம பொதுமக்கள் நீதிமன்றத்தை நடப்போவதாகவும் கூறுகின்றனர்..
-இரா.நந்தகோபாலகிருஷ்ணன்