திமுகவிற்கு இது நெருக்கடியான நேரம். எதை பேசினாலும் தவறாகவே அமைந்து விடுகிறது. அப்படி தான் முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்த பேச்சு பெண்களை கொச்சை படுத்துவதாக அமைந்து. அந்த கட்சியின் மகளிரணி அமைப்பாளர் கனிமொழி எம் பியே கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு போய்விட்டது. இதனால் பொன்முடி தான் வகித்து வந்த காதி மற்றும் வனத்துறை அமைச்சர் பொறுப்புகளை இழக்க வேண்டி வந்தது.
நீதிமன்றம் ஒரு பக்கம் பெறும் நெருக்கடியை திமுக அமைச்சர்களுக்கு தந்த வண்ணம் உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி,துரைமுருகன், பெரியசாமி உள்ளிட்ட வரும் இதில் அடங்குவர். அதில் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஊழல் செய்ததாக எழுப்பப்பட்ட வழக்கு ஜாமினில் வெளியே வந்தும் அவரை துரத்திக் கொண்டே வந்து. இப்போது அமைச்சர் பதவியை பிடுங்கி வட்டது.
ஒரு பக்கம் விஜய் பூத் ஏஜென்ட்களுக்காக நடத்தும் மாநாடு. திமுக, அதிமுகவிற்கு பெருத்த அடியாக உள்ளது. காரணம் பூத் ஏஜெண்டுகள் தான் கட்சியின் அடிவேர். இது எப்படி விஜய்க்கு தெரிந்தது என மண்டையை குழப்பிக் கொண்டுள்ளனர் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும். அப்போ விஜய்யிடம் எல்லா கட்சிகளிலும் பலத்த அடி வாங்கிய தலைவர்கள் இருக்கிறார்கள் பின்புலத்தில் என்பது தெரிய வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் அன்புமணி ராமதாஸும், விஜய்யும் ரகசிய பேச்சு நடத்தியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது தெரிந்து தான் தலைவர் பதவியை ராமதாஸ் பறித்துக் கொண்டார் என்று அந்தக் கட்சி வட்டாரங்களே அதிக அளவில் பேசத் தொடங்கி உளளன. இது உண்மையாக இருக்குமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. அப்படி இருந்தால் 2026 தேர்தலில் ஒரு பெருத்த மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் தான் திமுக புதிய ஒன்றிய பொறுப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மாதம் மூன்றாம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது திமுக. இதில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் தலை உருளப் போகிறதோ என தெரியவில்லை. திமுக தலைமை தேர்தல் வேளையை தொடங்கினாலும் மாவட்ட, ஒன்றிய அளவில் இன்னும் அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை பொறுப்பாளர்கள் என்று தான் சொல்ல வேண்டும் அதுதான் உண்மையும் கூட. விஜய் பூத் ஏஜெண்டுகள் மாநாடு நடத்தியதை தொடர்ந்து அதிமுகவும், திமுகவும் அடுத்தடுத்து ஏஜெண்டுகளுக்கு தேர்தலை நினைவுபடுத்த வாய்ப்பிருக்கும். ஏனென்றால் இரண்டு கட்சிகளும் தேர்தல் வேளையை மறந்து நீண்ட நாட்களாகிவிட்டது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஜெயிக்கிறதோ? இல்லையோ? விஜய் கட்சி டெபாசிட் வாங்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. ஆனாலும் அதற்கான எந்த வேலைகளிலும் செய்வதாக தெரியவில்லை.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக என்ன நிலைபாட்டில் இருக்கிறது என தெரியவரும். எப்படி இருந்தாலும் மாவட்ட செயலாளர்களுக்கு நல்ல டோஸ் இருக்கிறது. சில மாவட்ட செயலாளர்கள் மாற்றுவதற்கும் வாய்ப்புள்ளது உதயநிதி ஸ்டாலினுக்கு கட்டுப்படும் மாவட்ட செயலாளர்களாக பலர் மாறி இருந்தாலும், இன்னும் சிலரை மாற்ற வேண்டியிருக்கிறது என்கிறது திமுக வட்டாரங்கள்.
பா.ஜோதி நரசிம்மன்