கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜாராம் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருவாரூர் எஸ் பி யாக இருந்த ஜெயக்குமார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தப்படும்.குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்கள் நடந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களை கண்டறிந்து அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். போதை பொருள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம் என்கிறார்
– முருகன்