எடப்பாடி பழனிச்சாமியின்,கோட்டையில் ஓட்டை…?

தேர்தல் நெருங்க, நெருங்க எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் உட்கட்சிக்குள்ளே வெடிக்கும் பூகம்பங்கள்..

சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் நிலைமை என்ன? அதிமுக முன்னாள் சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாஜலம் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அப்போது, அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 41 லட்சம் ரூபாய் சொத்து உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடாஜலம், தனக்கு ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் சொத்து இருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு தேர்தலில் 3 கோடி அளவில் சொத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவருடைய சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 800 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. இதுமட்டுமின்றி அவர் தற்போது வசித்து வரும் வீடு மட்டும் 10 கோடி ரூபாய் மதிப்பாகும் என அதிமுக சேலம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அப்போது அவர் கூறிய குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக  முன்னாள் மாவட்ட செயலாளர் பரோட்டா வெங்கடாஜலம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி இடம் பேசியபோது.

அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி ,ஜெயலலிதா அவர்களிடம் சொல்லி பதிவி வாங்கி கொடுத்தார்.
 பிறகு எடப்பாடி பழனிசாமி தீவிர விசுவாசியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கும் அவர் மனைவிக்கும் தீவிர விசுவாசியாகவும் மாறினார்.அவர்களின் அவ்வப்போது சென்று அவர் காலில் விழுந்து வணங்குவதும், அவர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதும், அனைத்து வேலைகளையும் அவர் செய்து கொடுத்தார் அவருக்கு குடும்பத்தினருக்கு சிறந்த அடிமையாக செயல்பட்டு வந்தார்.

 மாநகர கட்சிக்காரர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி காதில் வாங்குவதும் இல்லை,  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனவுடன் இவர் சேலம் மாநகரத்தில் புரோட்டா வெங்கடாஜலம்  தனி ஒரு ராஜ்ஜியத்தையே அமைத்துக் கொண்டு அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி வழங்குவதும் அவர் பல்வேறு இடங்களை சொத்துக்களை வாங்கி போடுவதுமாக குறிக்கோளாக இருந்தார்.

 அவர் கட்சியும் வளர்க்கவில்லை,கட்சிகாரர்களையும் வளர்க்கவில்லை, இவர் மீது உள்ள அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள் பல பேர்  கட்சி விட்டு மாற்று கட்சிக்கு சென்று விட்டார்கள் சிலர் வேறு வழியில்லாமல் அந்த கட்சியிலே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் வேலையில் ஏவி ராஜுக்கும்,புரோட்டா வெங்கடாஜலத்துக்கும் மேற்பட்ட கருத்து வேறுபட்டின் காரணமாக சொத்து மதிப்புகளை பொதுவெளியில் வெளியிட்டார்.

இதனை சுகாரித்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி  மலைக்கும் அளவுக்கு சொத்துக்களை வாங்கி போட்டு உள்ளார் என்பது தெரியவந்தது.

 இதற்கு இடையில் ஆத்தூர் இளங்கோவனக்கும் ,வெங்கடாஜலத்துக்கும் இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபடும் மன வருத்தமும்,பனிப்போர் நடந்து வந்தது .

கடந்த முடிந்த  முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவன் ஆதரவாளரான விக்னேஷ் ஐ வெற்றி பெற செய்யாமல் கொடுத்த பணத்தை இவர் அமுக்கிக் கொண்டார் .

என்று குற்றச்சாட்டு கட்சிக்காரர்கள் இளங்கோவனிடம் சொன்னார்கள் இதனால் கடும் கோபத்தில் வெங்கடாஜலத்தின் மீது இருந்தார்.
இளங்கோவன் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போதும், இது போன்ற பிரச்சனைகளை முன்வைத்து, மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடாஜலத்தை , தூக்கி மாநில பொறுப்பு வழங்கி  ஓரங்கட்டுடிவிட்டார்கள்.
இதனால் கட்சி காரர்கள் பெரும் நிம்மதி அடைந்து சந்தோசம் அடையும் நிலையில் இருந்த போது மற்றோர் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மாநகர மாவட்ட பொறுப்பாளராக போட்டிருக்கும் எம்பி செல்வராஜ் , ஏ கே எஸ் எம் பாலு மீதும் கட்சியினர் மத்தியிலே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அதிருப்திகள் உள்ள ஆட்களை மீண்டும் பதவியை அவர் அமர்த்திருப்பது சேலம் மாநகர் பகுதியில் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது.

2016 ஆம் ஆண்டு சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர், எம்.கே. செல்வராஜ். சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., வாகவும் இருந்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. தலைமைக்கு பலர் புகார்களை அனுப்பியுள்ளனர். லெட்டர் பேடு கொடுத்து அதிகாரிகளை மிரட்டுதல், ஒருவருக்கு ஆறு பதவி வழங்குதல் என, இவர் மீது  குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இதனால் தான், 2016அம் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது சொத்து விவரங்கள் குறித்தும், கட்சி தலைமை, உளவுத்துறை மூலம் தகவல் சேகரித்துள்ளது. இதில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், தன் தம்பிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் துறை தலைவராக பதவி வாங்கிய விவகாரம் மற்றும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கியது என்பன போன்ற விவரங்களை உளவுத்துறை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மீது பல தகாத தொடர்புகளுடைய குற்றச்சாட்டுகளும் இவர் மீது உள்ளன .
ஏகேஎஸ்எம் பாலு இவர் பகுதி செயலாளர் ஆக உள்ளார்,இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது , கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச்சாட்டு  குற்ற சம்பவங்கள் இவர் மீதும் உள்ளது.இவர் கட்சி அனுசரித்து செல்வதில்லை இவர்கள் இருவரும் மிகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் இவர்களை எடப்பாடி பழனிசாமி பொறுப்பாளராக நியமித்திருப்பது பெரும் அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது .
எங்களுக்கு மத்தியில் பெரும அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது, கட்சியில் பல்வேறு சீனியர்களும்,அதிமுக தீவிர விசுவாசிகளும் இருக்கிற சேலம் மாநகரப் பகுதியில் இவருக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் எடப்பாடி பழனிசாமி விசுவாசியாக இருப்பவர்களை மட்டுமே கட்சியில் பொறுப்புகளை வழங்கினால் எப்படி கட்சி வளரும் என்று அதிமுக நிர்வாகி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது போன்ற சம்பவங்கள் சேலம் மாவட்டத்தில் பல தொடர்ந்து கொண்டே உள்ளது. சொந்த மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாக தொடங்கிவிட்டது இதனை எவ்வாறு சமாளிப்பார்? “எடப்பாடி பழனிசாமி”.

– இரா.சீனிவாசன்.