திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் மாதனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விவசாய நிலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கனிம வளம் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாலூர் பகுதியில் போலி பர்மிட் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் தொடர்ந்து இரவு பகலாக மண் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்து வந்தாலும் நடவடிக்கை எடுப்பதாக கண்துடைப்புக்காக இரண்டு மூன்று நாட்கள் நிறுத்தி வைத்து மீண்டும் கனிம வள கொள்ளை தொடர்ந்து நடந்து நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீராதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மண் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
– திருமலை