மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது ஏற முயன்ற மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தடுத்து நிறுத்தப்பட்டார். பின், போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அனுமதி அளித்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகனை தரிசித்து மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் செய்தியாளர் சந்தித்தார்.
ரொம்ப நாளைக்கு பிறகு திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம். 2021 வெற்றிவேல் யாத்திரை தமிழக முழுவதும் பாஜக சார்பாக நடத்தப்பட்டது. பகுதியாக அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அறுபடை நான் வீடுகளுக்கும் வந்திருந்தேன். முதல் படை வீடாக இன்று இந்த முதல் படை வீடான
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்து விட்டு ,
நானும், காடேஸ்வர சுப்ரமணியும் வந்திருக்கிறோம். இதைத்
தொடர்ந்து,
மலை மீது உள்ள காசி விஸ்வநாதரையும் தரிசிக்க உள்ளோம்.
சமீபகாலமாக இந்து மக்களை பல சைவ வழிபாடு செய்கின்ற இந்தப் பகுதியில் வெறும் மட்டகாத சம்பவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 1931 இல் வந்த நீதிமன்ற தீர்ப்பிலேயே ஒட்டுமொத்த மலையும் 33 செண்டை தவிர அட்டவணையில் முருகப்பெருமானுக்கு சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,
இந்த தீர்ப்புக்கு மாறாக 1983 இல் வருவாய் ஆவணங்களில் இருந்த பதிவுகளில் தமிழ்நாடு அரசாங்கம் சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை என்று தான் இருக்க வேண்டும். அலை கட்சியில் 30 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள் 1994 தீர்ப்பின் படி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை மழையின் மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் இந்து அறநிலை என்று சொல்லப்பட்டுள்ள உயர்நீதிமன்ற ஆணையை இந்து அறநிலையத்துறை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்வர வேண்டும். உலகெங்கும் முருகப்பெருமானே வழிபடுகின்ற பக்தர்கள் சார்பாக இந்த கோரிக்கையை வைக்கின்றேன். உடனடியாக இந்து அறநிலையத்துறை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள
வேண்டும்.
இந்த கோவில் ஒரு சைவ திருத்தலம். கருப்பசாமி மதுரவீரன் போன்ற சாமிகளுக்கு நாம் பலியிடுவது வழக்கம்தான். ஆனால் அது கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை போற்றுவதற்கு பலியிடுவது வழக்கம். எந்த ஒரு முருகப்
பெருமான் இருக்கின்ற சைவ வைணவ தளங்களில் பலியிடுதல் என்கிற சம்பவம் கிடையாது. எப்படி இருக்கும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது விரும்பத்தகாத சம்பவங்களை நடத்த முன்வந்து இருந்தால் அல்லது நடத்தியவர்கள் மீது உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறை நடவடிக்கை எடுப்பு கைது செய்யப்பட வேண்டும். இங்கிருக்கின்ற பொழுது இங்கு இருக்கும் மக்கள் அமைதியான மக்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு எங்கள் தலைவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டிலேயே கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
இந்த பகுதியில் நடைமுறை என்னவோ அதை பின்பற்ற வேண்டும்.
தொடர்ந்து,
நடவடிக்கை எடுத்து வருகிறோம் இந்து முன்னணி சார்பாக மாநிலத் தலைவர் போராடிக் கொண்டே இருக்கிறோம்.
நமது உரிமை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய கல்வி கொள்கை ஒரு நாளில் கொண்டு வந்தது அல்ல 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய காலகட்டத்திற்கு உலக அளவில் உள்ள சண்டை நிலவரத்தை வைத்து நாம் போட்டி போடும் அளவிற்கு நமது இளைஞர்களை தயார் செய்வதற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதே போல புதிய கல்விக் கொள்கை ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும் மாணவர்களின் பங்களிப்பை அதில் கொடுப்பதற்காக ஊக்குவிப்பது தான் இந்த தேசிய கல்விக் கொள்கை. தாய் மொழியை புதிய தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்விக் கொள்கை. தாய்மொழியில் தான் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை.
திமுகவினர் வேண்டுமென்றால், இங்கு தாய்மொழி வேண்டாம் என்று நினைக்கலாம். ஏனென்றால் அவர்கள் நடத்தும் எந்த பள்ளிக்கூடங்களிலும் தமிழ் கிடையாது, ஹிந்தி சொல்லி கொடுக்கிறார்கள். ஏதாவது திமுக நிர்வாகி நடத்தும் பள்ளிக்கூடத்தில் நான் இன்று சொல்லித் தர மாட்டேன் எனக் கூறி பள்ளியை மூட தயாரா. சாதாரண அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேறு மொழியை கற்பதில் என்ன பிரச்சனை நான் இந்த மொழியை தான் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை மூன்று மொழி ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். நம்ம மொழி என்று வரும்போது தமிழ் மொழி உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் கூட வரும். தமிழுக்கு மரியாதை கொடுக்கவும் விதமாக மூன்று ஆண்டுகளாக காசி தமிழ்ச்சங்கம் நடத்தப்படுகிறது. பிரதமர் ஐநா சபையில் கூட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்கிறார். தமிழ் மீது அதிக முக்கியத்துவம் கொடுத்து பாஜக. ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று அப்போது இருந்த காங்கிரஸ் திமுக கூட்டணி தான் நடத்த விடாமல் செய்தார்கள். நமது பிரதமர் மோடி தலையிட்டு ஜல்லிக்கட்டை கொடுத்து ஆக வேண்டும் என்று சொன்னார்.
கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி கடந்த 10 ஆண்டுகளில் சொல்லியிருக்கிறோம். 2009 லிருந்து 2014ஆம் ஆண்டு வரை உபி அரசாங்கம் இருந்தது. ரயில்வேக்கு அவர்கள் ஒதுக்கியது வெறும் 800 கோடி ஆனால் நாங்கள் பல்லாயிரம் கோடி ஒதுக்கி தற்போது விமான நிலையம் அளவிற்கு மதுரை ரயில் நிலையத்தை உயர்த்தி உள்ளோம்.
நான், பெருமாள் பக்தர் எனது குலதெய்வம் பெருமாள் நான் மாசத்துக்கு ஒரு முறை இப்படி செல்வேன் எனது மனம் எப்படி புண்பட்டு இருக்கும் கலப்படமான பொருளை பெருமானுக்கு படைத்திருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள முடியாது அவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.
நீங்கள் பள்ளிகளை தரவ இயற்றுவதற்கான முயற்சிகளை பிஎம் சிரி செய்து வருகிறது. திட்டத்திற்கான கண்டிஷன் என்னவோ அதில் கையெழுத்து விட்டால் நாங்கள் நிதி கொடுக்கிறோம் என்று தான் சொல்கிறோம் என்கிறார் அமைச்சர் முருகன்.
– நா.ரவிச்சந்திரன்