செய்யாற்றில் இருந்து மணல் திருட்டு நடைபெறுவதை தடுத்து நிறுத்தப்படும் என,புதிய தாசில்தாராக போறுப்பேறொறுள்ளஅசோக் குமார் தெரிவித்துள்ளார்.
செய்யாரில் தாசில்தாராக பணியாற்றி வந்த வெங்கடேசன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ‘சி.எல்.ஆர்.ஏ.,’ அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப் பட்டார். இதையடுத்து செய்யார் சமூகம் பாதுகாப்பு தாசில்ராக இருந்து வந்த அசோக் குமார், செய்யார் ரெகுலேர் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இவர் நேற்று தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், நிருபர்களிடம் கூறியதாவது;
‘பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்யார் வருவாய்த் துறை எல்லைக்கு உட்பட்ட செய்யாறில் இருந்து மணல் திருடப்படுவதை தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு தடுத்து நிறுத்தப்படும்,’ என, புதியதாக பொறுப்பேற்றுள்ள தாசில்தார் அசோக் குமார், தெரிவித்துள்ளார்.
– குணாளன்