வாணியம்பாடி- அரசு தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை, சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் காயம்…

வாணியம்பாடி-
அரசு தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை,
சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.
மாணவர்கள் காயம்…

வாணியம்பாடி அருகே புதியதாக கட்டப்பட்ட  அரசு தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து 4 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்  சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த வகுப்பறை கட்டிடத்தில் இன்று 1 மற்றும் 3 ஆம்  வகுப்பு  மாணவர்கள் அமர்ந்து படித்து கொண்டிருந்த போது  திடீரென கட்டிடத்தின்  மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர். இதில் ஒன்றாம் வகுப்பு மாணவர் பிரநீத் படுகாயமடைந்துள்ளார்.மேலும்  மூன்றாம் வகுப்பு மாணவர்கள்
 சுதர்சன் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் லேசான காயமடைந்தனர்.

அதிக காயம் ஏற்பட்ட மாணவர் பிரநீத்தை மீட்டு சிகிசசைக்காக வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து மாணவருக்கு வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளியில்  வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று கட்டிட மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

– திருமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *