மண்டல செயலாளர் எம்ஆர்கே அதிரடி… பொன்முடி குஷி… லட்சுமணன் சோகம்…

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 8 ஆவது பொறுப்பாளராக தற்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த தெற்கு மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். ஒரு வகையில் தனது மன வேதனையை வெளிப்படுத்தினார் என சொல்லலாம்.. முதல் நாள் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது, வழியிலும் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் பொன்முடி படம் இடம் பெற்றிருந்தது

 மறுநாள் நடைபெற்ற மத்திய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒரு இடத்தில் கூட பொன்முடி படம் இடம் பெறவில்லை..காரணம் லட்சுமணனை மாவட்ட செயலாளராக்குவதில் பொன்முடி காட்டி வந்த செயல்தான் லட்சுமணன் தரப்பை கோபமடைய செய்துள்ளது. .அதன் வெளிப்பாடு தான் மாவட்டத்தில் வைக்கப்படும் பேனர்களிலும், திருமண பத்திரிகைகளிலும் பொன்முடி படம் இடம் பெறாமல் செய்யப்பட்டது என்று சொல்லுகிறார்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள்.

எம் ஆர் கே பன்னீர்செல்வம் இது தொடர்பாக பொன்முடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார், எம் ஆர் கே வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் லட்சுமணனுக்கு ஆதரவாக இருக்கும் என்று தலைமை முடிவெடுத்து அனுப்பி வைத்தது. பன்னீர்செல்வம் வந்து பார்த்தால் நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது நாளைக்கு நமக்கும் இதே நிலைமைதான் ஏற்படும் என்கிற அச்சத்தின் காரணமாகவோ என்னவோ பொன்முடியின் படம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உத்தரவிட்டுள்ளார் என்பதை விட தனது வருத்தத்தை பதிவு செய்தார் என்றே சொல்ல வேண்டும். பன்னீர்செல்வத்தை தொடர்ந்து மூத்த அமைச்சர் கே என் நேருவும் பொன்முடியை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்..பொன்முடிக்கு இது ஆறுதல் தந்தாலும் லட்சுமணன் தரப்பு மீண்டும் பேனர்களில் பொன்முடி படம் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டுள்ளது.

கட்சித் தலைவரை சந்தித்து முறையிடலாம் என பொன்முடி நினைத்தாலும், இதெல்லாம் ஒரு பிரச்சினையை இது எல்லாம் கொண்டு வந்து என்கிட்ட சொல்றியா இன்று முதல்வர் கேட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் பிரச்சனையை அப்படியே கிடப்பில் போட்டுள்ளது பொன்முடி தரப்பு. இருந்தாலும் மக்கள் மத்தியில் பொன்முடிக்கு தற்போது அனுதாபம் கூடி இருக்கிறது. காரணம் பொன்முடி மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது என தன்னை மீண்டும் பழைய பொன்முடியாக உருவாக்கி வருகிறார். தன் மீது கட்சிக்காரர்களுக்கு ஏற்படும் இரக்கத்தை பொன்முடி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். இது யாருக்கு நட்டம் என்றால் விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணனுக்கு தான் நட்டம். பொன்முடியின் அனுதாபத்தை பார்த்து உடையார் சமுதாய மக்களும் அவரை சார்ந்த அனுதாபிகளும். லட்சுமணனுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். அது லட்சுமணனின் வாக்கு சதவீதத்தை நிச்சயம் குறைக்கும்.

எப்படியாவது கலைஞர் அறிவாலயத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர லட்சுமணன் தரப்பு முயற்சி செய்தாலும் பொன்முடியும் அவரது மகனாகிய மாவட்ட செயலாளர் கௌதம சிகாமனியும் இடம் கொடுக்கவே மறுக்கிறார்கள். அதுவே லட்சுமணனுக்கு ஒரு ஏமாற்றத்தை தந்ததாக நினைக்கிறார். திமுகவின் நிலைமை இப்படியே இருக்க அதிமுகவினர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது நிலைதான் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் நிலவி வருகிறது, யாரை யார் எதிர்த்து போட்டியிடுவார் என்பது தேர்தல் நெருக்கத்தில் தான் தெரியும் என்றாலும் கூட வாக்கு பறிக்கிற வேலையில் அதிமுக ஈடுபடவில்லை என்பது திமுகவிற்கு சாதகமாக இதுவரை இருந்து வருகிறது.

எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொன்முடி விவகாரத்தில் லட்சுமணனை கடிந்து கொண்டாலும் தேர்தல் வேளையில் மிக வேகமாக ஈடுபட முடுக்கிவிட்டுள்ளது. எப்படி ஆனாலும் விழுப்புரம் மாவட்ட திமுகவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய முடியாது என்கின்றனர் மூத்த திமுக நிர்வாகிகள்.

  • பா.ஜோதி நரசிம்மன்