விருத்தாச்சலம்… பாதயாத்திரை சென்றவர்கள் கார் மோதி உயிரிழப்பு…

கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வரதராஜன் பேட்டை சேர்ந்த இருதயசாமி இவர் சின்னசேலம் மேல் நாரையப்பனூரில்  உள்ள புனித அந்தோனியார் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர்.

விருத்தாச்சலம் சித்தலூர் ரயில்வே மேம்பாலம் அருகே பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தபோது சிதம்பரத்தில் இருந்து வந்த கார் பக்தர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருதயசாமி, அவரது மனைவி ஸ்டெல்லா மேரி, மற்றும் மகள் ஸ்டெபி உயிரிழந்தனர்.

மேலும் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விருத்தாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • முருகன் லட்சுமணன்