பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து வெற்றிக்கனியை சுவைத்த பிறகும் அதிர்ச்சி மற்றும் இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. திமுக எம்பியாக ஜெயிச்சது ஆ.மணிக்கு மட்டுமல்ல திமுக நிர்வாகிகளுக்கே அதிர்ச்சி காரணம், திமுக நிர்வாகிகள் வேலை செய்த லட்சணம் அறிவாலயம் வரை தெளிவாக தெரியும். இன்ப அதிர்ச்சி என்பது கூட்டணி பலம் வாக்காளர்களுக்கு முறைவாசல் செய்தது நாற்பது தொகுதிகளிலும் அலையடிக்க ஆ.மணி எம்.பி. ஆகிவிட்டார். இவர் எம்பி ஆன விஷயத்தை ஆ.மணி மட்டுமல்ல திமுக நிர்வாகிகளே நம்ப முடியாமல் தவிக்கிறார்கள். தேர்தல் செலவுக்கு வந்த பணம் வசூலித்த பணம் செலவுபோக மீதி உள்ளிட்ட கணக்கு வழக்குகளில் கோடிகளில் மைனஸ் ஆகுதாம். ஏழு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்து கொடுத்தவர், பற்றாக்குறைக்கு சில கோடிகளை கடன் வாங்கி சமாளித்தார்.
தருமபு திமுக எம்பி என்கிற அடையாளத்தோடு டெல்லிக்கு போன ஆ.மணி தனி அவர்தனம் செய்கிறார் என்று தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பென்னாகரத்தில் நடந்த அரசு விழாவில் மறைமுகமாக உரசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் ஆ.மணி அடுத்த ஆதாயத்திற்கு தயாராகிவிட்டார் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிதான் இவர் இலக்கு! ஆனால் திமுகவினர் கொதிக்கின்றன்ர எம்பியும் இவரே மாவட்ட செயலாளரும் இவரேவா? வேற ஆளே இல்லையா? மாவட்ட செயலாளர் ஆயிட்டு இவரு டெல்லி போயிட்டா கட்சி வேலையை பாக்கறது யாரு என்கின்றனர்.
நான் எம்பியாகி இவ்வளவு நாளாச்சி யாரும் வந்து பார்க்கலையே என்று வராத அதிகாரிகளை பார்த்து உரிமைக்குரல் கொடுத்ததோடு, கடன் கொடுத்து உதவியவர்களை டெல்லிக்கு கூட்டிகிட்டு போய் சுற்றிக்காட்டிக் கொண்டிருக்கிறார் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, மூன்று சட்டமன்ற தொகுதிகளும் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் சேர்ந்தது. மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுக்கள் கூடுதலாக வாங்கியிருந்தாலும் மாவட்ட செயலாளர் பேராசிரியர் பழனியப்பனை டம்மி பண்ணும் விதமாக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் உழைப்பால் கிடைத்த வாக்குகள் என்று பழனியப்பனை அவமானப்படுத்திவிட்டனர். தருமபுரி, பென்னாகரம் இரண்டும் கிழக்கு மாவட்டத்தில் சேர்ந்தது மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இரண்டு தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் ஓட்டுகள் குறைவு ஒன்றிய செயலாளர்கள் ஒழுங்கா வேலை செய்யல பணத்தை ஒழுங்கா கொடுக்கல என்கிற பூகம்பம் தடங்கம் சுப்பிரமணி தரப்பிலிருந்து கிளம்ப, அதிர்ச்சி அடைந்த ஏ.எஸ்.சண்முகம், வைகுந்தம், கே.பி.மல்லமுத்து, கே.எஸ்.ஆர்.சேட்டு, என்.செல்வராஜ், மடம் முருகேசன், ஜி.சபரிநாதன், எ.கருணாநிதி உள்ளிட்ட ஒன்றிய செயாளர்கள் ஒன்று சேர்ந்து கையெழுத்து போட்டு தடங்கம் சுப்பிரமணி மீது அறிவாலயத்தில் புகார் வாசித்தனர். புகாரின் சாரம்சம் தடங்கம் சுப்பிரமணியை மாற்ற வேண்டும் என்பதுதான்! பலமுறை ஒன்றிய செயலாளர்களை தடுத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் இந்தமுறை தடுக்க முடியவில்லை விஷயம் கைமீறி போய்விட்டது. அமைச்சருக்கும் அதிர்ச்சிதான் காரணம் தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் அல்லவா? இப்ப கடைசியில நாலு ஒன்றிய செயலாளர்களை பொறுப்பிலிருந்து எடுத்திட்டு, புதிய ஒன்றிய செயலாளர்களை நியமிச்சி தடங்கம் சுப்பிரமணி மீதான புகாரை புஸ்வானமாக்க முடிவு செய்திருக்கிறாராம் பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
மாவட்ட செயலாளர் பதவி எனக்குத்தான் என்று தீவிரமாக சுற்றிக்கொண்டிருக்கும் இன்பசேகரன் மாப்பிள்ளை சபரீசனை போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளர், எம்எல்ஏ பதவிகளை பார்த்தவர்தான் மறுபடியும் இவர் சரியா வருவாரா? என்கின்றனர் உடன்பிறப்புகள் இன்பசேகரனுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிபாதியாய் இருக்கிறது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் வெங்கடேஷ்வரன், கட்சியில இன்னும் பொதுச் செயலாளர் பதவியை மட்டும்தான் கேட்கல, மீதி எல்லா பதவியையும் கேட்டுவிட்டு இளைஞரணி நிர்வாகிகள் ஆதரவுகூட இல்லாமல் நிராயுதபாணியாக நிற்கிறார். இளைஞரணி துணை அமைப்பாளர்களில் ஒருவரான அசோக்குமார், அமைச்சர் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் இருக்கும்போது சிங்கப்பூருக்கே போய் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வதோடு போட்டோ புடிச்சி சமூக வலைதளங்களில் வெளியிட்டு எனக்கே ஒ.கே. ஆயிடுச்சி எல்லாம் முடிஞ்ச மாதிரிதான் என்று தருமபுரியில் பரபரப்பை கிளப்பிக்கொண்டு இருக்கிறார். இன்னொரு இளைஞரணி துணை அமைப்பாளரான நார்சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்துரையாடலுக்கு சென்னைக்கு சென்றபோது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இளைஞரணி நிர்வாகிகள் பரிந்துரை கையெழுத்தோடு எனக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுங்க சிறப்பாக செயல்படுவேன் என்று மனு கொடுத்து பதவி கேட்டவர், இவருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவும் உண்டு என்கின்றனர் திமுகவினர்.
பதவியில் இருக்கும்போது நேரில் பார்க்க முடியாது போனில் பேசமுடியாது அப்படி ஒரு வித்தியாசமான எம்பியாக வாழ்ந்துவிட்டு, பதவிகாலம் முடிந்தபிறகு மாப்பிள்ளை சபரீசனிடம் போய் மாவட்ட செயலாளர் பதவிக்கு கோரிக்கை வைக்க, நீங்க வேண்டாம் வேற ஆள் சொல்லுங்க என்று கேட்க ஒன்றிய செயலாளர் சேட்டுக்கு கொடுங்கனு சொல்லிவிட்டு வந்துவிட்டார். கட்சியை பார்க்காம உழைப்பை பார்க்காம பணம் வாங்கிகிட்டு பதவி கொடுத்தா அவங்களை எப்படி கட்சிப்பணி செய்யச் சொல்ல முடியும்? தடங்கம் சுப்பிரமணி மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தருமபுரி மாவட்டத்தில கட்சி நிர்வாகத்தில் இருப்பவர்களை மாற்றிவிட்டு புதியவர்களை கொண்டு வரணும் அப்பத்தான் திமுகவை காப்பாற்ற முடியும். இல்லாட்டி தோல்விகள் தொடரத்தத்தான் செய்யும் என்ன செய்யப்போகிறார் உதயநிதி ஸ்டாலின் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள் தருமபுரி மாவட்ட திமுகவினர்!
– ஆலவாயர்