கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவில் உள்ள மிடலாம் கீழ் மிடலாம் இணையம் புத்தன்துறை,எழதேசம், கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் தாதுமணலில் அனு கனிமங்களை எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிடப்படுள்ளது. இத்திட்டம் 1144 ஹெக்டேரில் நடடைபெற உள்ளது. மேலும் ‘353 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட கடலோர ண்டலத்தின் கீழ் உள்ளது. சுமார் 59.88 மில்லியன் டன் அனு கனிமங்கள் வெட்டி எடுப்பலாம் என கூறப்படுகிறது இத்திட்டம் அமையஇருக்கும் இடமானது இயற்கையாக அதிக கதிரியக்க தன்மையுடைய பகுதியாகும்
இப்பகுதியில் அணு தனிமங்கள் எடுத்தால் அணு கதிரியக்க பாதிப்புகள் அதிகரிக்க கூடும். ஏற்கனவே மணவாள குறிச்சி பகுதியில் தாதுமணல் எடுக்கப்படுவதால் மீணவ கிராமங்களில் பலருக்கு புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, தைராய்டு, மலட்டு தன்மை, தோல் நோய், ஆஸ்து மா, கருச்சிதைவு, உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்திலை யில் கிள்ளியூர் வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தாதுமணல் அனுமதி வழங்கி இருப்பது கடலோர மக்களைசுளையும்,சுற்று வட்டார கிராம மக்களையும் அதிர்ச்சி ஆளாக்கி உள்ளது. அனுமதி வழங்கப்பட்ட பகுதி மக்கள் அடர்த்தியா வாழ கூடிய பகுதியாகும்.இப்பகுதி மணல் பிரிக்கும் நிகழ்வு எல்லா மக்களின் வாழ்வாாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு உடமைகள் இருப்பிடங்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் பாதிக்கபடும்
கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்படுமா
1965ம் ஆண்டு முதன்முதலில் குமரி மாவட்டத்தில் கனிமங்களை பிரித்து எடுக்க தொடங்கும் போது கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளோ., சூழவியல் தாக்க விதிமுறைக ளோ ளோ இல்லாத காலகட்டம் என்பதினால் எந்தவித சூழவியல் அனுமதியும் தேவையின்றி தொடங்கபட்டு செப்ல்பட்டு வந்தது ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகள் கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் தாது மணல் பிரித்து எடுக்கும் திடத்திற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.இந்த கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பு கூட்டமாக இல்லாமல் பொதுமக்களின் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்து மதிப்பளிக்க வேண்டும். பொதுமக்களின் மனநிலையை அறிந்து மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தினை மறுபரிசீலினை செயவேண்டும்
தாதுமணல் பிரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்
காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் எச்சரிக்கை
விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறும்பொழுது கன்னியாகுமரி கடலாலும், மலையாலும் சூழ்ந்த இயற்கை மாவட்டம். இங்கு சுமார் 8லட்சத்துக்கும் மேல்மக்கள் கடல் பகுதியை சார்ந்து வாழுகின்றனர். ஆனால் மக்களின் மனநிலைக்கு எதிரான போக்கை மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க அரசு கையில் எடுத்துஉள்ளது ஐ.ஆர்.இ.எல் மூலம்மணல் எடுக்கும் திட்டத்தையும்,சுரங்கம் அமைக்கும் திட்டத்தையும்பா.ஜ.க அரசு கைவிட வேண்டும். நாட்டிற்கு வளர்ச்சி திட்டங்கள் தேவைதான். ஆனால் மக்களை கொல்லக்கூடிய இந்த திடடங்கள் தேவையற்றது. மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த திடத்தை உயடியாக கைவிட வேண்டும் இல்லையேல் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்றார்.
மண் எடுப்பதினால் கதிர் வீச்சு குறையும்
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். விளக்கம்
அரிய வகை மணல் எடுப்பதினால் மணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் கதிர்வீச்சின் அளவு 8 முதல் 10 மடங்கு வரை குறையும்.ஐ.ஆர்.இ. எல்லில் பிரித்தெடுக்கப்படும் அரியமணல் வகைகள் ஏறத்தாழ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூலப்பொருளாக வழங்கப்படும். கிராம குடியிருப்பு பகுதிகளிலோ மற்றும் பொது பயன்பாட்டு இடங்களி ளோ அரியவகை மணல் எடுக்கும் பணி எக்காரணத்தை கொண்டும் மேற்கொள்ளபட மாட்டாது
– மனோகரன்