வாடிப்பட்டி-ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்கிறிஸ்துமஸ் விழா…

மதுரை  மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று பொது
மக்களால் போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தத்தில் கிறிஸ்மஸ் திருநாள்
சிறப்பு திருப்பலி  நடந்தது.
நேற்று இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் பாடலுடன் சிறுவர் சிறுமியர்களின் கலை
நிகழ்ச்சிகள் நடந்தது.  
இந்த திருப்பலிக்கு ஆரோக்கிய அன்னை திருத்தலம் அதிபர் பங்குத்
தந்தை  எஸ்.வளன் அடிகளார் முன்னிலையில்
இறைவார்த்த சபையின்
மறை மாநில அதிபர் சாந்து
ராஜா அடிகளார் தலைமை தாங்கி 12 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட குடிலுக்கு
திருப்பலி பீடத்திலிருந்து தேவமைந்தன் இயேசுபாலகனை பவனியாக எடுத்துச் சென்று  வைத்துஇறையாசிக்கு வழிபாடு செய்தார். டுவன்ஸ்டார்ட் சபை மறை மாநில அதிபர்
புஷ்பராஜ் அடிகளார் மறை யுறை யாற்றினார். இதில், திருத்தல நிர்வாக தந்தை ஆண்டனி வினோ அடிகளார், குழந்தை அடிகளார் உள்பட இருபால் துறவியர்கள், பங்குமக்கள் புத்தாடை அணிந்து கேக் வழங்க 2 மணி வரை பிறப்பின் சிறப்புகள் பற்றி விளக்கி கூறும் சிறப்பு திருப்பலி நடந்தது.
மற்றும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்
தவர்கள் கலந்து கொண்டனர்.

-நா.ரவிசந்திரன்