பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 3 அமைச்சர்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று திட்டங்களுக்கு உதவி செய்கின்றனர். அவற்றில் முதன்மையானவர் நிதின் கட்காரி, -விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் புகழாரம்.
மதுரை – கன்னியா குமரி நான்கு வழிசாலையில் அமைந்துள்ள தனக்கன்குளம், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில்அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் ஏராளமான உயிரிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனால், திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்
தொடர்ந்து, இப்பகுதிகளில் மேம்பாலம் அமைக்க மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூபாய் 43 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
மதுரை தனக்கன்
குளத்தில் நடைபெற்ற பூமி பூஜையில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர்
கலந்து கொண்டார்.
இதைத்
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக் தாகூர் தனக்கன்குளம் சிவரக்கோட்டை கள்ளிக்குடி பகுதிகளில் தொடர் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதாக மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆறு ஆண்டுகளாக முயற்சி செய்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம்
கோரிக்கை வைத்து பாராளுமன்றத்திலும் இது குறித்து ஆறு முறைபேசியும், 10 மேற்பட்ட கடிதங்கள் எழுதி இருக்கிறோம்.
இதனைத்
தொடர்ந்து, தனக்கன்குளத்தில்
43 கோடியிலும் சிவரக்கோட்டையில் 23 கோடியிலும்
கள்ளிக்குடியில்
29 கோடி செலவிலும் மேம்பாலப் பணிகளுக்குநிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பூமி பூஜை இன்று தொடங்கி வைத்துள்ளோம்.
எய்ம்ஸ் அமையக்கூடிய இப்பகுதியில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நாடாளுடன்றதில் உறுப்பினர்களின் குறை கேட்டு தீர்வு காணும் மூன்று மத்திய அமைச்சர்களில் நிதின் கட்காரியும் ஒருவர் தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்
கூடிய அமைச்சர்அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு?
பாஜக அதிமுக கூட்டணி என்பது மூன்று முறை தோல்வி அடைந்த கூட்டணி மக்களால் நிராகரிகப்படக்கூடிய கூட்டணி . சிபிஐ, ஐ டி , ஈ டி துணையால் உருவாக்கியிருக்கிறது இந்த கூட்டணி பயத்தால் உருவான கூட்டணி இந்த கூட்டணி தமிழகத்திற்கு ஆபத்தான கூட்டணி.
உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தி தேர்தலில் வெற்றி பெற்றதை பற்றி தேர்தல் வழக்காக மாற்றி இந்த வழக்கை மீண்டும் ஒருமுறை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நியாயம் வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.
ஆளுநர் பல்கலை துணை வேந்தர் கூட்டம் கூடியது குறித்த கேள்விக்கு?
உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும், ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது ஆளுநர் ரவி மீண்டும் ஒரு முறை தவறை செய்கிறார்.
கவர்னர் மாண்போடு மதிக்கக்கூடிய ஆளுநர் ரவி தரம் தாழ்ந்த செயல்களால் அவர் பாஜகவில் தலைவராக செயல்படுகிறாரா? என்பது போல் தோன்றுகிறது. கவர்னருக்கு
ஆதரவாக அமித்ஷா போன்றவர்கள் செயல்படுவது ஜனநாயக படுகொலையாகும்.
கவர்னர் பதவியில் இருப்பவர் தீர்ப்புக்கு பின்பு அப்படி செய்வது நியாயமற்றது.தேவையில்லாமல் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளை கவனத்துடன் இருக்கக்கூடிய அரசினுடைய நிர்வாகத்தை குறைக்கக்கூடிய வகையில் கல்வித்துறையில் தொடர்ந்து மதவாதத்தை புகுத்துகின்ற ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளையும் சிந்தனைகளையும் ஊக்குவிப்பது போல் ஆளுநருடைய செயல்பாடுகள் உள்ளது.
– நா.ரவிச்சந்திரன்