தேனி-
வேலாண்டி கண்மாயை ஆக்கிரமித்து…
வெளியேறும் கம்பெனி கழிவுகள்…
நோய் பரவும் அபாயம்?
தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் எஸ் கே எம் கம்பெனி அருகே வேலாண்டி கண் மாயை அழித்து ஆக்கிரமிப்பு, கம்பெனியிலிருந்து வெளியேறும் கழிவுகளை பி டி ஆர் கால்வாயில் விடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராம பகுதியில் எஸ் கே எம் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இந்த கம்பெனியின் அருகே வேலாண்டி கண்மாயை அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள கனிம வளங்களை முறைகளாக ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்களை கொண்டு வெட்டி எடுத்து கண்மாயை அழித்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த கம்பெனியில் முட்டை உற்பத்தி மற்றும் கோழிக்குஞ்சு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கழிவு நீர் முழுவதும் அருகே உள்ள பி டி ஆர் கால்வாயில் விடப்படுவதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வேளாண்மை துறையினர், மாசுக்கட்டுப்பாடு வாரியம், சுகாதாரத்துறையினர், கனிம வளத்துறை, வனத்துறை, உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அருகே உள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து வருகின்றனர்.
எனவே நீர்நிலை கண்மாயை அழித்து, கம்பெனியிலிருந்து வெளியேறும் கழிவுகளை பி டி ஆர் கால்வாயில் விடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக பி டி ஆர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரை கால்நடைகள் அருந்துவதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
– ஜெயபால்